நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

ஒரே வாரத்தில் கிடுகிடுவென தலைமுடி வளர வேண்டுமா? தயிருடன் இதை யூஸ் பண்ணுங்க

இன்றைய காலக்கட்டத்தில் பலருக்கும் பொடுகு தொல்லை முடி உதிர்தல் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது. இதனை தடுக்க தயிர் உதவுகிறது.


தயிர் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் வளமான மூலமாகும். தலைமுடியை பாதிக்கும் பொடுகை போக்குவதில் தயிர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

வைட்டமின் பி நிறைந்த, தயிர் சிகிச்சையானது பொடுகு பிரச்சனையை வழக்கமான பயன்பாட்டுடன் குணப்படுத்த உதவும்.

முதலில் தயிரை எடுத்துக்கொண்டு உங்கள் முடி மற்றும் உச்சந்தலையை ஈரப்படுத்தவும்.

அதிகப்படியான தண்ணீரை பிழிந்து எடுக்கவும். அதன் பின்னர், தயிரை உங்கள் உச்சந்தலையிலும் முடியிலும் தடவவும்.

அதை 15-20 நிமிடங்கள் அப்படியே விட்டுவிடவும். பின் வெதுவெதுப்பான நீரில் முடியை நன்கு அலசவும்.

அடுத்து 1 கப் தயிர், 1/2 கப் வெந்தய விதை தூளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

வெந்தய விதை தூளை தயிர் கிண்ணத்தில் சேர்த்து நன்கு கலக்கவும். இந்த கலவையை உங்கள் உச்சந்தலையிலும் முடியிலும் தடவவும். 10 நிமிடங்களுக்கு அப்படியே விடவும்.

பின்னர் முடியை நன்கு அலசவும். வாழைப்பழத்தில் பொட்டாசியம், வைட்டமின் மற்றும் தாதுக்கள் உள்ளன. இது பளபளப்பை மேம்படுத்துகிறது மற்றும் உங்கள் முடி உடையாமல் தடுக்கிறது.

முதலில் 1 கப் தயிர், 1 பழுத்த வாழைப்பழத்தை எடுத்துக்கொள்ளவும். ஒரு கிண்ணத்தில், ஒரு முட்கரண்டியைப் பயன்படுத்தி வாழைப்பழத்தை கூழாக பிசைந்து கொள்ளவும்.

இதோடு தயிர் சேர்த்து நன்கு கலக்கவும். கட்டிகள் இல்லாத மென்மையான பேஸ்ட்டாக தயாரிக்கவும்.

தலைமுடியை ஈரப்படுத்தி, பேஸ்ட்டை உங்கள் தலைமுடியில் தடவவும். அதை 30-45 நிமிடங்கள் விடவும். பின்னர் உங்கள் தலைமுடியை ஷாம்பு போட்டு அலசவும்.  



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!