நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

கெட்ட வார்த்தையால் பேசி மிரட்டும் பேய்! 233 ஆண்டுகளுக்கு நடந்த சம்பவம் என்ன?

 இங்கிலாந்தில் இரண்டு பெண்களின் ஆவி மிரட்டுவதாக கூறி சோமர்செட் என்ற இடத்தில் வசிக்கும் மக்கள் கூறிவருகின்றனர்.


இவ்வுலகில் ஆவி, பேய் இவையெல்லாம் உண்மையா என்பது பலருக்கும் தெரியாத புதிராகவே இன்றும் இருந்து வருகின்றது.


இவ்வாறு இருக்கையில், இங்கிலாந்து நாட்டில் சோமர்செட் என்ற இடத்தில், Dead Woman's Ditch என்ற இடத்தில் விசித்திர சம்பவம் அரங்கேறியுள்ளதாக மக்கள் கூறுகின்றனர்.


இங்கு 1789-ஆம் ஆண்டு, ஜேன் வால்ஃபோர்ட் என்ற பெண்ணை தன் கணவனான ஜான் கேனன் என்பவர் கொலை செய்துவிட்டார் என்றும் பின்பு 1988ம் ஆண்டு அதே இடத்தில் ஷெர்லி என்ற பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்ட நிலையில், இரு பெண்களின் மரணத்திற்கும் ஜான் கேனன் என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.


இவ்வழியாக நடந்து செல்லும் நபர்களை திடீரென பெண் ஒருவரின் குரல் கெட்ட வார்த்தையால் திட்டி துரத்துவதாக பலரும் தெரிவிக்கின்றனர்.


மேலும் பழங்கால வெண்ணிற ஆடையுடன் நீளமான கருப்பு நிற கோட் அணிந்த பெண்ணையும் அங்கு இருப்பவர்கள் அவதானிப்பதாக கூறப்படுகின்றது.


இந்நிலையில் மக்களின் அச்சத்தினால், ஆவிகளை கண்டுபிடிக்கும் உள்ளூர் குழு ஒன்று உண்மையை தெரிந்து கொள்ள விசாரணையில் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 



ALSO READ : உயிருடன் இருக்கும் ஏலியன்? எங்கு தெரியுமா? பரபரப்பை ஏற்படுத்திய காட்சி......

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!