தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும். இதை தயாரிக்கும் முறை: கிராம்பு - 2, ஏலம் - 2, சுருள் இலவங்கப்பட்டை - 1, அதிமதுரம் சிறுதுண்டு, சுக்கு சிறுதுண்டு, மிளகு - 10, மஞ்சள் சிறிதளவு இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும். இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும். இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ : மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
பேய்யுடன் பேசிய விமான பணிப்பெண்.. கணவருக்காக காஃபி கேட்ட கொடூரம்.. வைரலாகும் அதிர்ச்சி சம்பவம்!
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
-
கொரோனா பரவல் காரணமாக பலரும் தங்கள் வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகளை வீடியோக்களாக எடுத்து யூட்யூப் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
உலகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு நாடுகளில் கடந்த 2 வருடங்களாக ஊரடங்கு போடப்பட்டது. இதையடுத்து பலரும் தங்கள் வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகள், வெளியூர் பயணங்கள், வாழ்க்கை குறிப்புக்கள், சமையல் என தங்களுக்கு தெரிந்ததை வீடியோக்களாக எடுத்து யூட்யூப் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் இப்படி ஆரம்பித்த பலபேர் தற்போது பிரபலங்களாக மாறி சினிமாவிலும் நடித்து வருகின்றனர்.
அந்தவகையில், எமிரேட்ஸ் ஏர்லைன்சில் விமானத்தில் பணிப்பெண்ணாக பணியாற்றி வந்த 38 வயதான சாண்ட்ரா க்வோன் என்ற பெண் தன் வாழ்க்கையில் சந்தித்த அனுபவங்களை வீடியோக்களாக பதிவிட்டு வருகிறார். இந்தநிலையில், நேற்று முன் தினம் இவர் வெளியிட்ட வீடியோ ஒன்று அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 1
சாண்ட்ரா க்வோன் ஒருமுறை விமானத்தில் பணியாற்றி கொண்டிருக்கும்போது, ஒரு பெண் பயணியிடம் சென்று உங்களுக்கு ஏதாவது குடிக்க வேண்டுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார். அப்பொழுது அந்த பயணி எனக்கு தற்போது எதுவும் குடிக்க வேண்டாம்.
பக்கத்தில் இருக்கும் என் கணவர் கடந்த ஒரு வாரமாக கடினமான சூழ்நிலையை சந்தித்துள்ளார்.மேலும், அதிகப்படியான உழைப்பிலும் ஈடுப்பட்டார். தற்போது, உடல் சோர்வால் நன்றாக உறங்கி கொண்டு இருக்கிறார். எனவே, அவர் எழுந்தவுடன் அவருக்கு கிரீன் டீ மட்டும் கொடுங்கள். அதிலும், டீயில் பாலும் சர்க்கரையும் சேர்ந்து இருந்தால்தான் ரொம்ப பிடிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
சாண்ட்ராவும் அந்த பெண்ணின் கணவர் எழுந்தவுடன் மனைவியின் கோரிக்கைபடி, உங்கள் மனைவி உங்களுக்கு கிரீன் டீ கொடுக்கச் சொன்னார் என்று அந்த கிரீன் டீயை கொடுக்க, மிரண்டுப்போன கணவர் அதிர்ச்சியாக இருக்கையை விட்டு எழுந்து என் மனைவி சொன்னாளா என்று கேட்டுள்ளார்.
ஒன்றும் புரியாத சாண்ட்ரா ஆம் என்று தலையாட்ட, என் மனைவி இறந்து ஒரு வாரம் ஆகிவிட்டது. அவளின் உடல் கூட சொந்த நாட்டிற்கு எடுத்து செல்ல இந்த விமானத்தில் சரக்குகள் வைக்கும் இடத்தில்தான் வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இதைகேட்டு சாண்ட்ராவுக்கு ஒரு கட்டத்தில் மயக்கமே வந்துள்ளது. இதுகுறித்த வீடியோவை தனது யூட்யூப் பக்கத்தில் சாண்ட்ரா பதிவிட, இதைபார்த்து அவரது பாலோவர்ஸ்கள் புல்லரித்து விட்டதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
பொதுவாக தொலைந்து போன ஸ்மார்ட்போனை ஒரு சில எளிய வழிமுறைகள் மூலம் மீண்டும் கண்டுபிடிக்க முடியும். குறிப்பாக ஆப்பிள் Find my phone அம்சமும், ஆன்ட்ராய்டு தளத்தில் Find your phone அம்சங்களும் இருக்கின்றன. இந்த அம்சம் நீங்கள் ஸ்மார்ட்போனுடன் சென்று வந்த இடங்கள் அனைத்தையும் டிராக் செய்து வைத்திருக்கும். அதுமட்டுமின்றி Google Map மூலம் கூட கண்டுபிடிக்க முடியும். கூகுள் மேப்ஸ் மூலம் நீங்கள் தவறவிட்ட ஸ்மார்ட்போனினை டைம்லைன் மூலம் டிராக் செய்ய முடியும். தற்போது அவை எப்படி என இங்கே பார்ப்போம். முதலில் ஸ்மார்ட்போன் அல்லது கம்ப்யூட்டரில் www.maps.google.co.in வலைத்தள முகவரிக்கு செல்ல வேண்டும். தவறவிட்ட ஸ்மார்ட்போனில் லின்க் செய்யப்பட்டிருந்த கூகுள் அக்கவுன்ட் மூலம் லாக்-இன் செய்ய வேண்டும். இனி, வலதுபுறம் மேல்பக்கம் காணப்படும் மூன்று புள்ளிகளை க்ளிக் செய்ய வேண்டும். அடுத்து ‘Your timeline' ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். இங்கு உங்களது சாதனத்தில் இருக்கும் தகவல்களில் ஆண்டு, மாதம் மற்றும் தேதி உள்ளிட்ட விவரங்களை பதிவிட வேண்டும். உங்களது சாதனத்தின் லொகேஷன் விவரங்களை மேப்ஸ் தற்போதைய ...
சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி வீரர்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசுத் தொகுப்பில் சலவை சோப்பு அனுப்பப்பட்டது. விண்வெளி வீரர்கள் துணிகளை துவைக்க உதவும் வகையில் ஸ்பேஸ்எக்ஸ் சலவை சோப்பை விண்வெளிக்கு அனுப்பியது புதன்கிழமையன்று சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி வீரர்களுக்கு ஸ்பேஸ்எக்ஸ் கிறிஸ்துமஸ் பரிசுத் தொகுப்பு அனுப்பியது. பரிசுப் பொருட்களில் சலவை சோப்பும் அனுப்பப்பட்டுள்ளது. Proctor and Gamble நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட, சலவை சோப்பு விண்வெளியில் துணிகளை திறம்பட துவைக்க உதவுமா என்பதைக் கண்டறியும் ஒரு பரிசோதனையின் ஒரு பகுதி இது . விண்வெளி நிலையத்தில் இருப்பவர்களின் வாழ்க்கை மிகவும் சிரமமானது. விண்வெளியின் மர்மங்களைம் ரகசியங்களையும் தெரிந்துக் கொள்வதற்காக விண்வெளி வீரர்கள் மாதக்கணக்கில் அங்கு இருக்க வேண்டியிருக்கிறது. அங்கு அவர்கள், சாப்பிடுவது, தூங்குவது போன்ற வேலைகளை செய்வது வித்தியாசமானதாக இருக்கும். பலவிதமான காரணங்களால் விண்வெளி வீரர்கள் தங்கள் துணிகளை துவைக்க முடிவதில்லை. அவர்கள் அணிந்துள்ள துணிகளைக் துவைப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள முயற்சியில் ஒரு பகுதியா...
ஹேன்ஸன் ரோபட்டிக்ஸ் நிறுவனம் சோஃபியின் தங்கை என கூறி ” க்ரேஸ் ” என்ற புதிய ரோபோவை தற்பொழுது அறிமுகப்படுத்தியுள்ளது. க்ரேஸ் சுகாதார துறையில் தனது பங்களிப்பை வழங்கும் என இதனை உருவாக்கிய நிறுவனம் தெரிவிக்கிறது. சோஃபியா_ரோபட் தொழில்நுட்ப வளர்ச்சி குறித்த செய்திகளை கடந்து செல்லும் பொழுதுதெல்லாம் ரோபோக்களின் வளர்ச்சி நம்மை பிரம்மிக்க வைப்பதாக இருக்கும். குறிப்பாக ஹுமனாய்ட் ரோபோக்கள் என்று அழைக்கப்படும் மனித ரோபோக்களின் வளர்ச்சி நம்பிக்கைக்கு அப்பால் பல மாற்றங்களை கண்டுள்ளது. இந்த வகை ஹுமனாய்ட் ரோபோக்கள் மனிதர்களை போலவே சிந்தித்து செயல்படும் வகையில் உருவாக்கப்படும். இவ்வகை ரோபோக்களை உருவாக்கும் முயற்சியில்தான் பல நிறுவனங்கள் போட்டி போட்டு ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த 2015 ஆம் ஆண்டு அறிமுகமான ஹுமனாய்ட் ரோபோவான சோஃபியா பலரின் கவனத்தை பெற்றது. ஹாங்காங்கை சேர்ந்த பிரபல ”ஹேன்ஸன் ரோபட்டிக்ஸ் “ என்ற நிறுவனம் இந்த சோஃபியாவை அறிமுகப்படுத்தியது. மனிதர்களை போலவே முக பாவனைகளை வெளிப்படுத்துவது, கேட்கும் கேள்விகளுக்கு சாதூர்யமாகவும், நகைச்சுவை உணர்வுடனும் பதிலளிப்...
Comments
Post a Comment