நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

தூக்கத்தில் சிலர் நடப்பது ஏன் தெரியுமா? பலரும் அறியாத உண்மை.....

 தூக்கத்தில் நடக்கும் வியாதி (ஸ்லீப் வாக்கிங்) என்பது, மக்கள் தூங்கும்போது எழுந்து நடக்கும் ஒரு வகையான கோளாறு.


மரபியல் கோளாறு, மன அழுத்தம், பதற்றம், தூக்கமின்மை போன்றவை காரணமாகப் பெரியவர்களும் தூக்கத்தில் நடப்பதுண்டு.

ஒரு நபர் தூக்கத்தின் ஆழமான கட்டத்திலிருந்து இயல்பான நிலைக்கு அல்லது விழித்திருக்கும் நிலைக்குச் செல்லும்போது நிகழ்கிறது.

தூக்கத்தில் நடப்பவருக்கு, என்ன நடக்கிறது என்னவென்று தெரியாது. எதற்கும் பதிலளிக்க முடியாது, நடந்ததை நினைவில் கொள்ளவும் முடியாது. சில சந்தர்ப்பங்களில், அவர் பேசும் வார்த்தைக்கு அர்த்தமும் இருக்காது.

தூக்கத்தில் நடப்பவர்கள் பெரும்பாலும் வீட்டைச் சுற்றி நடப்பார்கள். சில நேரத்தில் வீட்டை விட்டு வெளியேறவும் செய்வார்கள். ஆனால் இவை எதுவுமே வேண்டுமென்று செய்வதில்லை.

மேலும் அவரது கண்கள் விரிந்து எதையோ முறைத்து பார்ப்பது போல இருக்கும். நாம் கேட்கும் கேள்விகளுக்கு தாமதமாகவோ சில நேரங்களில் பதில் அளிக்காமலும் இருப்பார்கள்.

தூக்கத்தில் இருந்து விழித்துக்கொண்டதும் நடந்ததை பற்றி கேட்டுப்பாருங்கள் நிச்சயம் அவர்களுக்கு எதுவுமே நினைவில் இருக்காது.

பெரியவர்கள் தூக்கத்தில் நடந்தால் அவர்களை இயல்பு நிலைக்கு அழைத்து வந்துவிடலாம். சிறியவர்கள் அழைத்து வருவதே கடினம்.     



ALSO READ : கண்களைச் சுற்றி இருக்கும் சுருக்கத்தை இரண்டே வாரத்தில் அடித்து விரட்ட இதை மட்டும் இப்படி தேயுங்கள்!

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!