நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

விந்தை மனிதர்! காதலிகள் 1000; கருத்தடை மாத்திரைகள் 69,000; தண்டனை 1075 ஆண்டுகள்!

 துருக்கியின் இஸ்தான்புல்லில் உள்ள ஒரு நீதிமன்றம், இஸ்லாமியர்களின் ஒரு பிரிவின் தலைவரான அட்னான் ஒக்டருக்கு 10 வெவ்வேறு குற்றங்களுக்காக 1075 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.


  • காதலிகளின் எண்ணிக்கை ஒன்றல்ல இரண்டல்ல; 1000 காதலிகள்
  • வீட்டில் 69,000 கருத்தடை மாத்திரைகள் கண்டெடுக்கப்பட்டன
  • தன்னை அதிக சக்தி வாய்ந்ததாக கருதிய நபர்.


துருக்கியின் இஸ்தான்புல்லில் உள்ள ஒரு நீதிமன்றம், இஸ்லாமியர்களின் ஒரு பிரிவின் தலைவரான அட்னான் ஒக்டருக்கு 10 வெவ்வேறு குற்றங்களுக்காக 1075 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. 2018 ஆம் ஆண்டில், நாடு முழுவதும் நடத்தப்பட்ட சோதனைகளில் அட்னான் ஒக்தார் என்பவரின் பல ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டனர். 

அட்னான் ஒக்தார் தீவிரவாதத்தைப் பற்றி மக்களுக்குப் போதிப்பதோடு, பிளாஸ்டிக் சர்ஜரி செய்த பெண்களுடன் அட்னான் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடனமாடினார். அவர் பெண்களை 'பூனை' என்று அழைப்பார்.

கிரிமினல் குற்றவாளி கும்பலை உருவாக்கியது மற்றும் சிறார்களை பாலியல் ரீதியாக துஷபிரயோகம் செய்தது உட்பட பல குற்றங்களில் அவர் குற்றவாளி என்று துருக்கியின் இஸ்தான்புல் நீதிமன்றம் கண்டறிந்ததாக டெய்லி மெயில் தெரிவித்துள்ளது. இப்போது பெண்கள் தாங்கள் இழைக்கப்பட்ட கொடுமைகள் பற்றி வெளிப்படையாகப் பேசுகிறார்கள்.

ஒரு பெண் தனக்கு 16 வயதாக இருந்தபோது அட்னான் ஒக்தார் என்ற இந்த மத தலைவரால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாகவும், 20 வயதில், வலுக்காட்டயமாக, மயக்க மருந்து இல்லாமல் ரைனோபிளாஸ்டி சிகிச்சை கொடுக்கப்பட்டதாகவும் கூறினார். ஆபரேஷன் நடந்த பகுதியில் இன்னும் வலியை உணர்வதாகவும், அப்போது தன்னை சுத்தியாலும் உளியாலும் தாக்கியது இன்று நினைத்தாலும் உடல் நடுங்கிறது எனவும் கூறினார். 

அட்னான், பாலியல் குற்றங்கள், சிறார்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்தல், மோசடி மற்றும் அரசியல் மற்றும் இராணுவ உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். சுமார் 236 பேர் மீது வழக்குத் தொடரப்பட்டு, அதில் 78 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என NTV அறிக்கை கூறுகிறது.

ஒக்டர் டிசம்பரில் தலைமை நீதிபதியிடம் தனக்கு சுமார் 1,000 காதலிகள் இருப்பதாக கூறினார். அக்டோபரில் நடந்த மற்றொரு விசாரணையில், என் இதயம் பெண்கள் மீதான காதல் வெள்ளத்தில் மூழ்கியது என்று கூறினார். காதல் என்பது மனித குணம். இதுதான் இஸ்லாமின் குணம். நான் அசாதாரணமான சக்தி வாய்ந்தவன் என்று கூறினார்.

அவரது வீட்டில் இருந்து 69,000 கருத்தடை மாத்திரைகள் காவல் துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டது பற்றி கேட்டதற்கு, அவை சரும பிரச்சனைகள் மற்றும் மாதவிடாய் கோளாறுகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படுகின்றன என்று ஒக்டார் கூறினார்.

ஒக்டார் ஒரு படைப்பாளி என்று சொல்லலாம். அவர் டார்வினிய பரிணாமக் கோட்பாட்டை நிராகரித்து, ஹாருன் யாஹ்யா என்ற புனைப்பெயரில் 'The Atlas of Creation' என்ற தலைப்பில் 770 பக்கங்கள் கொண்ட புத்தகத்தை எழுதியுள்ளார். 

இந்த ஆண்டு ஜனவரியில், கற்பழிப்பு, சிறுவர் துஷ்பிரயோகம், உளவு பார்த்தல் மற்றும் மிரட்டல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் அட்னான் ஒக்டார் துருக்கியில் 1,075 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். 64 வயதான அவர் தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுக்கிறார், மேலும் மேல்முறையீடு செய்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


ALSO READ : Death Lake: உலகின் மர்மமான ஏரி! இந்த ஏரியின் நீர் உயிரைக் குடிக்கும்!!

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!