நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

ஃபைசர் தடுப்பூசிக்கு உலக நிறுவனம் அங்கீகாரம்: வளரும் நாடுகள் விரைவாக பெற ஏற்பாடு

 


அமெ­ரிக்­கா­வின் ஃபைசர் நிறு­வ­ன­மும் ஜெர்­ம­னி­யின் பயோ­என்­டெக் நிறு­வ­ன­மும் உரு­வாக்கி விநி­யோ­கிக்­கும் தடுப்பு ஊசி மருந்­தை கொவிட்-19க்கு எதி­ரான அவ­சர பய­னீட்­டுக்­குப் பயன்­ப­டுத்­த­லாம் என்று உலக சுகா­தார நிறு­வ­னம் பட்­டி­ய­லிட்டு உள்­ளது.

வள­ரும் நாடு­க­ளுக்கு அந்த மருந்து வேக­மாகக் கிடைக்க உதவு­வது இதன் நோக்­கம்.அந்த மருந்­தைப் பற்­றி­யும் அதன் நன்­மை­கள் குறித்­தும் தேசிய சுகா­தார அதி­கா­ரிகளி­டம் எடுத்­துக்­கூறி விளக்­கு­வ­தற்­காக பங்­கா­ளி­க­ளு­டன் சேர்ந்து பாடு­ப­டப்­போ­வ­தாக ஐநா அமைப்­பான இந்­தச் சுகா­தார நிறு­வ­னம் தெரி­வித்­தது. உல­கில் உள்ள ஏழ்மை நாடு­கள் பல­வற்­றி­லும் சொந்த ஒழுங்­கு­முறை ஏற்­பா­டு­கள் இல்லை. அத்­த­கைய நாடு­கள் இந்த மருந்­தை விரை­வாக அங்­கீ­க­ரிக்க வேண்­டிய தேவை இருக்­கிறது. இல்லை எனில் மருந்து கிடைப்­பது தாம­த­மா­கிவிடும். ஆகை­யால் இத்­த­கைய நாடு­க­ளுக்கு உத­வு­வ­தற்­காக உலக சுகா­தார நிறு­வ­னம் அவ­சர பயனீட்­டுப் பட்­டி­யல் நடை­முறை ஒன்றை உரு­வாக்கி வைத்­துள்­ளது. இந்­தச் சுகா­தார நிறு­வ­னம் ஃபைசர் பயோ­என்­டெக் மருந்­தைப் பரி­சோ­தித்­துப் பார்த்­தது.

பாது­காப்­பைப் பொறுத்­த­வரை என்ன என்ன கட்­டா­ய­மானவையோ அவை அந்த மருந்­தில் இருப்­பதை நிறு­வ­னம் கண்­ட­றிந்­துள்­ளது. உல­கம் கொவிட்-19 தடுப்பு ஊசி­யைப் பெறு­வதை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்கு ஐநா­வின் இந்த முயற்சி ஆக்­க­க­ர­மான ஒன்று என்று இந்த நிறு­வ­னத்­தின் மருந்து செயல்­திட்ட தலை­வர் டாக்­டர் மரி­யங்­கெலா சிமாவ் தெரி­வித்­தார்.இருந்­தா­லும் யார் யாருக்கு முத­லில் மருந்து சென்று சேர­வேண்­டுமோ அவர்­க­ளுக்கு மருந்து கிடைப்­பதை உறுதி செய்ய இன்­னும் பெரிய உலக முயற்சி தேவை என்­றும் அவர் கூறி­னார்.

உலக சுகாதார நிறு­வ­னம் இதர சில அமைப்புகளு­டன் சேர்ந்து ஏழை நாடு­க­ளுக்கு மருந்து கிடைப்­பதை உறு­திப்­ப­டுத்த உலக முயற்சி (கொவெக்ஸ்) தொடங்கி இருக்­கிறது. இந்த முயற்­சியை இதர சில அமைப்­பு­க­ளு­டன் சேர்ந்து உலக சுகா­தார நிறு­வ­னம் மேற்­பார்வை செய்தும் வரு­கிறது. இந்த முயற்சியின் பலனாக 2021 தொடக்கத்தில் இருந்து ஏறக்குறைய 2 பில்லியன் தடுப்பூசி மருந்து விநியோகிக்கப்படும்.


ALSO READ:    உடல் ஆரோக்கியம் மட்டுமே நிரந்தரம்: உணர்த்திய கொரோனாவுக்கு நன்றி!

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!