நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

இலங்கை-க்கு 50 மில்லியன் டாலர் கடன் கொடுக்கும் பாகிஸ்தான்..!

பொருளாதாரச் சரிவு, நாணய மதிப்பில் சரிவு, நிர்வாகப் பிரச்சனை, நிதி நெருக்கடி எனப் பல பிரச்சனைகளில் தவித்து வரும் பாகிஸ்தான் அரசு இலங்கை-க்கு டிபென்ஸ் மற்றும் செக்யூரிட்டி துறையை மேம்படுத்துவதற்காக 50 மில்லியன் டாலர் அளவிலான கடனை அளிக்க உள்ளது.

கொரோனா பாதிப்பு மூலம் பாகிஸ்தான் நாட்டின் வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் பெரிய அளவில் பாதிப்பு அடைந்துள்ளதாகக் கூறப்படும் இந்தச் சூழ்நிலையில், இந்நாட்டுப் பிரதமர் இம்ரான் கான் இலங்கைக்கு 2 நாள் சுற்றுப்பயணத்தில் 50 மில்லியன் டாலருக்கான கடன் உத்தரவாதத்தை அளித்துள்ளார்.

இரு நாட்டுத் தலைவர்கள் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை பாதுகாப்புத் துறையில் இணைந்து செயல்படவும், இரு நாட்கள் மத்தியிலான பாதுகாப்புத் தன்மை குறித்த பேச்சுவார்த்தையை மேம்படுத்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

மேலும் பாதுகாப்பு, பயங்கரவாதம், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் ஆகியவற்றைக் கட்டுப்படுத்த இரு நாடுகளும் இணைந்து செயல்படவும் இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதைத் தாண்டி இரு நாட்டுத் தலைவர்கள் சந்திப்பில் பாகிஸ்தான் இலங்கை மத்தியிலான சுற்றுலா, விவசாயம், மற்று வர்த்தகக் கூட்டணி ஆகியவற்றைக் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு உள்ளது. கொரோனா பாதிப்புக்கு பின்பு இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இலங்கை நாட்டின் குடியரசுத் தலைவர் கோட்டபாய ராஜபக்ஷ ஆகியோரை சந்திக்கும் முதல் வெளிநாட்டு தலைவர் பாகிஸ்தான் முதல்வர் இம்ரான் கான் தான்.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!