நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

மரத்தினாலான கம்ப்யூட்டர் கீ-போர்ட்.. அசத்தலான கண்டுபிடிப்பு..

 

தஜிகிஸ்தானை சேர்ந்த இளைஞர் ஒருவர் மரத்தினால் ஆன கம்ப்யூட்டர் கீபோர்டை உருவாக்கி அசத்தியுள்ளார்.


தஜிகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். இவரது சேனலில் வெளியான வீடியோ ஒன்று நெட்டிசன்களின் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது. அந்த வீடியோவில் கம்ப்யூட்டரை இயக்குவதற்கு நாம் வழக்கமாக பயன்படுத்தும் பிளாஸ்டிக் கீ-போர்டுக்கு மாற்றாக, மரத்தினால் செய்யப்பட்ட கீ-போர்டை தத்ரூபமாக  உருவாக்கி, அதைக் கொண்டு கம்ப்யூட்டரை இயக்குகிறார்.

சுற்றுச்சூழலுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் மின்னணு கழிவுகளை மண்ணில் புதைத்து அழிப்பதைவிட மறு சுழற்சி செய்வது எளிது மட்டுமின்றி, அதற்கான செலவும் குறைவு என வீடியோவில் அந்த யூடியூபர் தெரிவித்துள்ளார்.


ALSO READ :  விண்வெளி வீரர்களுக்கு உணவு: போட்டிக்கு நீங்கள் தயாரா?


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!