நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

கொரோனா தடுப்பூசிக்காக 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் பெயர்களை பதிவு செய்யலாம் - அதிகாரிகள் தகவல்.

கொரோனா தடுப்பூசிக்காக 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் தங்கள் பெயர் விவரங்களை ‘கோ-வின்’இணையதளத்தில் பதிவு செய்யலாம் என்று அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
புதுடெல்லி,

இந்தியாவில் 2-ம் கட்டமாக வருகிற 1-ந்தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. அத்துடன் 45 வயதுக்கு மேற்பட்ட நோயாளிகளும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். கொரோனா தடுப்பூசி போடும் பயனாளிகள் தங்கள் பெயர்களை பதிவு செய்ய வேண்டியது கட்டாயம் ஆகும். இதற்காக ‘கோ-வின்’ இணையதளத்தில் பெயர் விவரங்களை பதிவு செய்ய வேண்டும். அந்தவகையில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட நோயாளிகள் தடுப்பூசி போடப்படும் 1-ந்தேதி முதலே தங்கள் பெயர் விவரங்களை மேற்படி இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

இதைப்போல அருகில் தடுப்பூசி போடும் இடங்களுக்கு நேரடியாக சென்றும் முன்பதிவு செய்ய முடியும் என தடுப்பூசி நிர்வாக அதிகாரிகளில் ஒருவரான ஆர்.எஸ்.சர்மா தெரிவித்தார். இதில் 45 வயதுக்கு மேற்பட்ட நோயாளிகள் தங்கள் நோய் நிலவரம் குறித்த மருத்துவ சான்றிதழையும் பதிவவேற்றம் செய்ய வேண்டும்.

அரசு தடுப்பூசி மையங்களில் இலவசமாகவும், தனியார் மையங்களில் கட்டணம் செலுத்தியும் தடுப்பூசி போடப்படும் என அரசு அறிவித்து உள்ளது. இதற்கான கட்டணம் விரைவில் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!