நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

அதிக மைலேஜை தரும் வாகனங்களை தேடும் மக்கள்... சூழ்நிலையை சாதமாக்கிக்க சிறப்பு சலுகையை அறிவித்த ஹீரோ!

ஹீரோ நிறுவனத்தின் பிரபல இருசக்கர வாகன மாடல்களில் ஒன்றான ஸ்பிளெண்டர் பைக்குகளுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையுயர்வு பற்றிய பேச்சே அதிகளவில் மக்கள் மத்தியில் தென்பட்டு வருகின்றது. நாட்டின் குறிப்பிட்ட சில மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூ. 100ஐ தொட்டுவிட்டது. இதைத்தொடர்ந்து, டீசலின் விலையும் ரூ. 100ஐ தொடுமளவிற்கு மிக வேகமாக உயர்ந்து வருகின்றது. இதனால், மக்கள் மின் வாகனங்கள் மற்றும் அதிகம் மைலேஜ் தரும் வாகனங்களின் பக்கம் மாறிய வண்ணம் இருக்கின்றனர்.
இந்த நிலையைத் தங்களுக்கு சாதகமானதாக மாற்றிக் கொள்ளும் நோக்கில் ஹீரோ மோட்டாகார்ப் நிறுவனத்தின், ஸ்பிளெண்டர் பிராண்ட் பெயரில் விற்பனையாகும் அனைத்து மாடல்களுக்கும் சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டிருக்கின்றது. ஸ்பிளெண்டர் பிராண்ட்டில்; ஸ்பிளெண்டர் ப்ளஸ், சூப்பர் ஸ்பிளெண்டர் மற்றும் ஸ்பிளெண்டர் ஐ ஸ்மார்ட் ஆகிய மாடல்கள் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த மாடல்களுக்கே சிறப்பு ஆஃபர் தற்போது அறிவிக்கப்பட்டிருக்கின்றது. தினசரி பயணத்தை மேற்கொள்ளும், அதாவது, அதிக மைலேஜ் மற்றும் குறைந்த பராமரிப்பு செலவை விரும்பும் இளைஞர்களின் முதன்மையான தேடல்களில் ஹீரோ ஸ்பிளெண்டர் ரக பைக்குகளும் அடங்கும்.
இந்த பைக்கின் பக்கமே மக்களைக் கவரும் நோக்கில் சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இஎம்ஐ திட்டத்தின்கீழ் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 12 ஆயிரம் வரை சிறப்பு கேஷ்பேக்காக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுதவிர, ரூ. 2000 வரை எக்ஸ்சேஞ்ஜ் மற்றும் லாயல்டி போனஸ் போன்ற சிறப்பு சலுகையை வழங்கவும் நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது.
இதனை பிரத்யேகமாக ஸ்பிளெண்டர் ப்ளஸ், சூப்பர் ஸ்பிளெண்டர் மற்றும் ஸ்பிளெண்டர் ஐ ஸ்மார்ட் ஆகிய மாடல்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பது குறிப்பிடத்தகுந்தது. அதேசமயம், இச்சலுகையை இந்தியாவில் குறிப்பிட்ட டீலர்கள் மட்டுமே வழங்கி வருகின்றனர். ஆகையால், சலுகைகுறித்த மேலும் விபரங்களுக்கு உங்கள் அருகாமையில் உள்ள ஹீரோ மோட்டோகார்ப் பைக் விற்பனையாளர் அனுகவும்.
ஸ்பிளெண்டர் பிராண்டில் விற்பனைக்குக் கிடைக்கும் பைக்குகளிலேயே ஸ்பிளெண்டர் ப்ளஸ் மாடலே மிகக் குறைந்த விலை கொண்ட வாகனம் ஆகும். இதனை மூன்று விதமான வேரியண்டுகளில் விற்பனைச் செய்து வருகின்றது. அனைத்திலுமே ஒரே மாதிரியான 97.2 சிசி திறன் கொண்ட சிங்கிள் சிலிண்டர் எஞ்ஜினே காணப்படுகின்றது.
இது அதிகபட்சமாக 8.02 பிஎஸ் மற்றும் 8.05 என்எம் டார்க்கை வெளியேற்றக் கூடியது. இந்த பைக் ரூ. 61,845 தொடங்கி ரூ. 65,335 வரையிலான விலையில் விற்கப்பட்டு வருகின்றது. இது சென்னை எக்ஸ்-ஷோரூம் விலையாகும். ஸ்பிளெண்டர் பைக்கிற்கு மட்டுமின்றி ஹீரோவின் ஸ்கூட்டர்களுக்கும் தனித்துவமான சலுகைகள் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தகுந்தது.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!