நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

‘திருப்பதி’ உருவான தினத்தை கொண்டாடிய பொதுமக்கள்

திருப்பதி உருவான தினத்தை பொதுமக்களும், பக்தர்களும் கொண்டாடினர். அவர்கள், அலிபிரி பாத மண்டபத்தில் சிறப்புப்பூஜைகள் செய்தனர்.
திருப்பதி, 

வைகுண்டத்தில் இருந்து வெங்கடாஜலபதி விட்டு பிரிந்த மகாலட்சுமி பூலோகத்தில் திருப்பதி பகுதிக்கு வந்தார். இதையறிந்த வெங்கடாஜலபதி, மகாலட்சுமியை தேடி திருப்பதிக்கு வரும்போது, தனது முதல் பாதத்தை திருப்பதியில் உள்ள ஒரு மலைமீது பதித்தார். அங்கு, வெங்கடாஜலபதியின் திருப்பாதங்கள் உள்ளன.

ஆன்மிக பெரியோர்களான ஆதிசங்கரர், ராமானுஜர் ஆகியோர் திருப்பதிக்கு வந்து வெங்கடாஜலபதியை வழிபட்டுள்ளனர். அவ்வாறு முதல் தடவையாக ராமானுஜர் திருப்பதிக்கு வந்தபோது, திருமலை அடிவாரத்தில் ஒரு புளிய மரத்தின் அடியில் நிழலுக்காக ஒதுங்கி, ஓய்வெடுத்தார். இரவில் ராமானுஜர் தனது சீடர்களுடன் புளியமரத்தின் அடியில் அமர்ந்து தினமும் கம்ப ராமாயணம் கதை கேட்டு வந்தார். அவர், புளிய மரத்தின் அடியில் தங்கி ஓய்வெடுத்ததால் அந்தப் பகுதியை ‘அடிபுளி’ என்று அழைத்தனர். அந்தப் பெயர் காலப்போக்கில் மருவி ‘அலிபிரி’ என்று அழைக்கப்படுகிறது. அதேபோல் ராமானுஜர், அலிபிரியை சேர்ந்த ஒரு பகுதிக்கு, ‘திருப்பதி’ என்று பெயர் சூட்டினார்.

இந்தநிலையில் திருப்பதியைச் சேர்ந்த பொதுமக்கள் தரப்பில் டி.எம்.சி பாஸ்கர், ஹேமந்த்யாதவ், சோடம்மது மற்றும் பொதுமக்கள் ஆகியோர் முதல் முறையாக ஒரு குழுவை அமைத்து, அலிபிரியில் உள்ள பாத மண்டபத்தில் நேற்று ‘திருப்பதி’ உதயமான நாளை கொண்டாடினர். அலிபிரி பாத மண்டபத்தில் வெங்கடாஜலபதியின் பாதத்துக்கு சிறப்புப்பூஜை செய்தனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது:-

திருப்பதி வைணவ பெரியார் ராமானுஜரால் உருவாக்கப்பட்டது. அந்தக் காலத்தில் குக்கிராமமாக இருந்த திருப்பதி தற்போது பெருநகரமாக உருவாகி உள்ளது. திருப்பதிக்கு உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்று வருவது வெங்கடேஸ்வரசாமியின் ஆசீர்வாதமாகும். திருப்பதி நகரம் கோவிந்தராஜசாமி கோவில் கட்டுமானத்துடன் தொடங்கியது.

கோவிலை சுற்றி மக்கள் குடியிருப்புகள் உருவாக்கப்பட்டன. அதேபோல் அந்தணர்களுக்காக அக்ரஹாரமும் உருவாக்கப்பட்டது. ‘திருப்பதி’ என்ற சொல் ராமானுஜரின் திருவாய் மொழியால் உருவானது. ஒவ்வொரு ஆண்டும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் ‘திருப்பதி’ ஊர் உருவானதை நினைவு கூர்ந்து விழாவாக கொண்டாட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்கள்.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!