நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

உணவில் மட்டுமல்லாது வாழ்க்கையிலும் சுவையை கூட்டும் உப்பு..!!

உப்பில்லாத பண்டம் குப்பையிலே என்பார்கள். உணவுக்கு சுவையை கூட்டும் உப்பு வாழ்கையிலும் சுவையை கூட்டும் என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. சாதாரண உப்பை வைத்தே வீட்டில் இருக்கும் எதிர்மறை சக்திகள் நீக்க முடியும் என்று கூறினால் உங்களால் நம்ப முடிகிறதா. ஆனால், அது தான் உண்மை.
மனிதர்களின் வாழ்க்கையில் ஏற்படும் சில பிரச்சனைகள் மிகவும் நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளன. இத்தகைய சூழ்நிலையில், சிலர் தொடர்ந்து பிரச்சனையையும் நெருக்கடியையும் தீர்க்க பாடுபடுகிறார்கள். ஆனால், தீர்வு கிடைக்காமல் மன உடைந்து போகிறார்கள்.
ஆனால், இனி கவலை வேண்டாம், அதற்கு வாஸ்து ரீதியாக சில தீர்வுகள் உள்ளது. இதை கடைபிடித்தால், சிக்கலில் இருந்து விடுபட்டு நிம்மதியான வாழ்க்கை வாழலாம்.

தீராத பிரச்சனைக்கு, அது நிதி நெருக்கடியானலும் சரி அல்லது குடும்ப பிரச்சனை அல்லது அலுவலக பிரச்சனையானாலும் சரி, வீட்டிற்குள்ளேயே எளிய தீர்வு இருக்கிறது.இதற்கு புதிதாக எதுவும் செலவு செய்து வாங்கவோ அல்லது பரிகாரம் செய்யவோ தேவையில்லை. இதற்கு சமைய கட்டிலேயே தீர்வு இருக்கிறது.

எதிர்மறை சக்தி, இருந்தால், அது தேவையில்லாத பதற்றம், மன அழுத்தம், ஆகியவற்றை ஏற்படுத்தும். மேலும், இதனால் வீட்டில் நிம்மதியின்மை, பிரச்சனை, மன குழப்பம், பண நெருக்கடி ஆகியவை அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.
உப்பில்லாத பண்டம் குப்பையிலே என்பார்கள். உணவுக்கு சுவையை கூட்டும் உப்பு வாழ்கையிலும் சுவையை கூட்டும் என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. சாதாரண உப்பை வைத்தே வீட்டில் இருக்கும் எதிர்மறை சக்திகள் நீக்க முடியும் என்று கூறினால் உங்களால் நம்ப முடிகிறதா. ஆனால், அது தான் உண்மை.
 
கல் உப்பை நீரில் கலக்கி அந்த தண்ணீரை கொண்டு வீட்டை சுத்தம் செய்தால். இது வீட்டில் இருக்கும் எதிர்மறை சக்திகள் மற்றும் எண்ணங்கள் அனைத்தையும் நீக்கி விடும். ஆனால், ஞாயிற்றுக் கிழமையை மட்டும் தவிர்க்க வேண்டும் என கூறப்படுகிறது
 
ஒரு சிட்டிகையளவு உப்பை ஒரு டம்ளர் நீரில் கலந்து அதை வீட்டின் தென்மேற்கு மூலையில் வைத்தால், வீட்டில் உள்ள ஏழ்மை விலகி விடும் என வாஸ்து நிபுணர்கள் கூறுகின்றனர். அவ்வாறு வைக்கப்படும் நீரின் வண்ணம் மாறும் போது, அந்த நீரை மாற்றி விட வேண்டும்.

ஒரு சிவப்பு துணையில் உப்பை கட்டி வீட்டின் நுழைவாயிலில் தொங்கவிட்டால் வீட்டிற்குள் உள்ள கெட்ட சக்தி நீங்குவதோடு, வீட்டிற்கு நுழைய விரும்பு கெட்ட சக்தியையும் வர விடாமல் தடுக்கும்

கைபிடி அளவு உப்பு எடுத்து அதை ஒரு சின்ன கிண்ணத்தில் போட்டு அதை குளியலறையின் ஒரு மூலையில் வைத்தாலும் வீட்டில் உள்ள எதிர் மறை சக்தி நீங்கும். ஆனால், இதையும் அடிக்கடி மாற்ற தவறக் கூடாது.  
 
அது மட்டுமல்லாது, பக்கெட் நீரில், சிறிது உப்பை கலந்து, அதில் குளித்தால், உடலி உள்ள எதிர்மறை சக்திகள், எதிர்மறை எண்ணங்கள் நீங்கி புத்துணர்ச்சியை உணர்வீர்கள்.

சாப்பிடும் டேபிளில், உப்பு வைப்பது செல்வசெழிப்பு அதிகரிக்க உதவும் எனவும் வாஸ்து நிபுணர்ஜ்கள் கூறுகின்றனர். இதனால், வீட்டில் செல்வம் குறையாமல் எப்போதும் நிறைந்திருக்கும் என்கின்றனர்.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!