நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

கோதுமை மாவில் செய்த வெஜிடபிள் சோமாஸ்.

ஸ்வீட் சோமாஸ் சாப்பிட்டு இருப்பீங்க. இன்று காய்கறிகள் சேர்த்து சுவையான சோமாஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம். காய்கறிகளை சாப்பிடாத குழந்தைகள் கூட இதை விரும்பி சாப்பிடுவார்கள்.
                வெஜிடபிள் சோமாஸ்


தேவையான பொருட்கள் :

கோதுமை மாவு - 3 கப்,

ரவை - ஒரு டேபிள்ஸ்பூன்,

உப்பு - தேவைக்கேற்ப,

எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு.


மசாலா செய்வதற்கு:

உருளைக்கிழங்கு - 200 கிராம்,

கேரட் துருவல் - 4 டேபிள்ஸ்பூன்,

உப்பு - தேவைக்கேற்ப,

ஊறவைத்த பச்சைப் பட்டாணி - கால் கப்,

மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் - தலா ஒரு சிட்டிகை,

கொத்தமல்லித் தழை, கறிவேப்பிலை - தலா ஒரு டேபிள்ஸ்பூன்,

பெரிய வெங்காயம் - ஒன்று,

பச்சை மிளகாய் - 2,

எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்.


செய்முறை:

கோதுமை மாவு, உப்பு, ரவையுடன் தண்ணீர் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து, 20 நிமிடம் ஊறவிடவும்.

கழுவி, நறுக்கிய உருளைக்கிழங்கு மற்றும் பச்சைப் பட்டாணியுடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து குழையாமல் வேகவிடவும்.

வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி... நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, கேரட் துருவலயும் சேர்த்துக் கிளறி, வேக வைத்த உருளைக்கிழங்கு, பட்டாணி, பெருங்காயத்தூள் சேர்த்து மேலும் வதக்கி, கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை சேர்த்து இறக்கவும்.

பிசைந்த கோதுமை மாவினை சிறிய உருண்டைகளாக உருட்டி, சப்பாத்தியாக இட்டு... 2 டேபிள்ஸ்பூன் மசாலாவை உள்ளே வைத்து மூடி நன்றாக அழுத்தி, சோமாஸிகளாக செய்யவும்.

கடாயில் எண்ணெயைக் காயவைத்து செய்துவைத்த சோமாஸ்களை போட்டு பொரித்து எடுக்கவும்.

குறிப்பு: சோமாஸ் மேக்கரில் சிறிய சப்பாத்தியையும், மசாலாவையும் வைத்து மூடி, அழுத்தி ஓரங்களில் வெளியே வருவதை எடுத்துவிட்டு, உள்ளே இருப்பதை எண்ணெயில் பொரித்து எடுத்தால், அழகிய வளைவுகளுடன் ஓரங்கள் கண்கவரும் விதத்தில் இருக்கும். சோமாஸ் பொரிக்கும்போது அடுப்பை 'சிம்’மில் வைத்து ஓரங்கள் பிரிந்து விடாதவாறு பார்த்துப் பொரிக்க வேண்டும்.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!