நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

Tamil Nadu Election 2021: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு

Tamil Nadu Election 2021 |தமிழகத்தில் அதிக அளவு தேர்தல் செலவு நடக்கும் என்பதால், இரண்டு செலவின பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக சுனில் அரோரா அறிவித்தார்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறும் என்றும் வாக்கு எண்ணிக்கை மே-2 நடைபெறும் என்றும் தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா அறிவித்துள்ளார்.

தமிழகம், கேரளா, மேற்குவங்கம், அசாம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கான ஆயத்த பணிகளில் தேர்தல் ஆணையம் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளது.

தமிழகம், கேரளா, மேற்குவங்கம், அசாம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதிகளை தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்து வருகிறார்.

அப்போது, 5 மாநில தேர்தலுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 80 வயதுக்கு மேற்பட்டோர் விரும்பினால் மட்டும் தபால் வாக்கு அளிக்கலாம் என்றார். மேலும் தமிழகத்துக்கு செலவின பார்வையாளர்களாக மதுமகாஜன், பாலகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறும் என்றும் ஏப்ரல் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் அறிவித்தார். மேலும் தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா அறிவித்துள்ளார்.

தமிழகம் - தேர்தல் அட்டவணை வெளியீடு

ஒரே கட்டமாக தேர்தல் 234 தொகுதிகள்

1. வேட்பு மனு தாக்கல் துவக்கம்: மார்ச் 10

2.வேட்பு மனு தாக்கல் கடைசி நாள்: மார்ச் 19

3. வேட்பு மனு பரிசீலனை: மார்ச் 20

4. வேட்பு மனு திரும்பப் பெற கடைசி நாள்: மார்ச் 22

5. வாக்குப் பதிவு நாள்: ஏப்ரல் 6

6. வாக்கு எண்ணிக்கை நாள்: மே 2


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!