நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

இந்தியாவில் இருந்து அனுப்பிய 5 லட்சம் தடுப்பூசிகளை இலங்கை பெற்றது.

இந்தியாவில் இருந்து அனுப்பிய 5 லட்சம் தடுப்பூசிகளை இலங்கை அரசு பெற்றுக்கொண்டது.
கொழும்பு,

கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியா உலக நாடுகளுக்கெல்லாம் உதவிக்கரம் நீட்டி வருகிறது. அண்டை நாடான இலங்கைக்கு 5 லட்சம் டோஸ் தடுப்பூசியை கடந்த ஜனவரி மாதம் பரிசாக அளித்தது. அதைத் தொடர்ந்து அந்த நாட்டில் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அந்த தடுப்பூசிகள் முன்கள பணியாளர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் செலுத்தப்பட்டது.

இந்தநிலையில், இந்திய சீரம் நிறுவனத்திடம் இருந்து கூடுதல் தடுப்பூசிகள் வாங்குவதற்கு இலங்கை அரசு மருந்து நிறுவனம் ஒப்பந்தம் செய்தது.

அந்த அடிப்படையில் 5 லட்சம் தடுப்பூசிகள், இலங்கைக்கு இந்திய சீரம் நிறுவனத்தால் அனுப்பி வைக்கப்பட்டது.

அந்த தடுப்பூசிகளை இலங்கை நேற்று பெற்றுக்கொண்டது.

இதையொட்டி இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கொரோனாவை இலங்கை வெல்ல தீவிரமாக உதவுகிறோம். 5 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இன்று வந்து சேர்ந்தது என கூறப்பட்டுள்ளது.

இந்த தடுப்பூசியை போடும் பணி இன்று தொடங்கி விடும் என தகவல்கள் கூறுகின்றன.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!