நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

பெங்களூருவில் அரசு பஸ் கட்டணத்தை உயர்த்த அரசு ஆலோசனை.

டீசல் விலை உயர்வு காரணமாக பெங்களூருவில் அரசு பஸ் கட்டணத்தை உயர்த்த அரசு ஆலோசித்து வருவதாக துணை முதல்-மந்திரி லட்சுமண் சவதி தெரிவித்தார்.
பெங்களூரு:

டீசல் விலை உயர்வு காரணமாக பெங்களூருவில் அரசு பஸ் கட்டணத்தை உயர்த்த அரசு ஆலோசித்து வருவதாக துணை முதல்-மந்திரி லட்சுமண் சவதி தெரிவித்தார்.

டீசல் விலை உயர்வு

  நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்த்து கொண்டே சென்ற வண்ணம் உள்ளது. இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. டீசல் விலை உயர்வு காரணமாக கர்நாடக அரசு போக்குவரத்து கழகம், பஸ் கட்டணத்தை உயர்த்துவது குறித்து ஆலோசித்து வருவதாகவும், முதற்கட்டமாக பெங்களூருவில் பி.எம்.டி.சி. பஸ்களின் கட்டணத்தை மட்டும் உயர்த்த முடிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.

  இதுகுறித்து பெங்களூரு விதானசவுதாவில் நேற்று போக்குவரத்துறை மந்திரியும், துணை முதல்-மந்திரியுமான லட்சுமண் சவதியிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பஸ் கட்டணத்ைத உயர்த்த ஆலோசனை

  பெங்களூருவில் அரசு பஸ் கட்டணத்தை உயர்த்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அதுபற்றி இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. முதல்-மந்திரி எடியூரப்பாவுடன், பெங்களூருவில் அரசு பஸ்களின் கட்டணத்தை உயர்த்துவது குறித்து ஆலோசனை நடத்தப்படும்.
  முதல்-மந்திரி எடியூரப்பா அனுமதி அளித்தால் மட்டுமே பெங்களூருவில் பி.எம்.டி.சி. பஸ்களின் கட்டணத்தை உயர்த்தப்படும். அதே நேரத்தில் கே.எஸ்.ஆர்.டி.சி. பஸ்களின் கட்டணம் உயர்த்தப்படாது. அதுதொடா்பாக இதுவரை எந்த விதமான ஆலோசனையும் நடைபெறவில்லை.

ரூ.80 கோடி கடன்

  பெங்களூருவில் பி.எம்.டி.சி. பஸ்களின் கட்டணத்தை மட்டுமே உயர்த்த போக்குவரத்து கழகம் தீர்மானித்துள்ளது. பெங்களூருவில் அரசு பஸ்களால் போதிய வருமானம் கிடைக்கவில்லை. அரசிடம் இருந்து ரூ.80 கோடி கடன் பெற்று டிரைவர்கள் மற்றும் பிற ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டு உள்ளது.

  இதற்கு மத்தியில் டீசல் விலை உயர்வு மற்றும் பஸ்களுக்கான உபகரணங்கள் வாங்குவதற்கு ரூ.780 கோடி தேவைப்படுகிறது. இதற்காக ரூ.556 கோடி கடன் வங்கியில் இருந்து கடன் பெறப்பட்டுள்ளது. இதுபோன்ற காரணங்களால் பஸ் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
  இவ்வாறு அவர் கூறினார்.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!