நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

வர்த்தக கூட்டமைப்பு நாடு தழுவிய முழு அடைப்பு.

அனைத்து இந்திய வர்த்தக கூட்டமைப்பு நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
புதுடெல்லி,

சிலிண்டர் விலை உயர்வு மற்றும் ஜி.எஸ்.டி., வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து, அனைத்து இந்திய வர்த்தக கூட்டமைப்பு, இன்று, நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

முழு அடைப்பு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை உயர்வை கண்டித்து, எதிர்க்கட்சியினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில், எரிபொருள் விலை உயர்வு, ஜி.எஸ்.டி., வரி உயர்வு உள்ளிட்டவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து, அனைத்து இந்திய வர்த்தக கூட்டமைப்பு, இன்று, நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கு, அழைப்பு விடுத்துள்ளது. இதன்படி, நாடு முழுதும் உள்ள வணிக மார்க்கெட்டுகள் இன்று மூடப்படுகின்றன.

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!