நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

Bizzarre! குரங்குகள் பற்றாக்குறையால் மருத்துவ ஆராய்ச்சிகள் முடங்கும் நிலை.

குரங்குகளை தேடும் ஆராய்ச்சியாளர்களைத் தெரியுமா? குரங்குகளின் பற்றாக்குறையால், மருத்துவ கண்டுபிடிப்புகள் முடங்குவது தெரியுமா? ஏன் என்ற கேள்வி எழுகிறதா? இதோ பதில்…
குரங்குகளை தேடும் ஆராய்ச்சியாளர்களைத் தெரியுமா? குரங்குகளின் பற்றாக்குறையால், மருத்துவ கண்டுபிடிப்புகள் முடங்குவது தெரியுமா? ஏன் என்ற கேள்வி எழுகிறதா? இதோ பதில்…

குரங்குகளைக் கண்டுபிடிப்பதில் மார்மிகவும் மும்முரமாக இருக்கிறார். ஏன் இருக்க மாட்டார்? உலகெங்கிலும் மில்லியன் கணக்கான மனித உயிர்கள் ஆபத்தில் இருக்கும்போது, அதற்கான முடிவைத் தேடுவதில் அவருக்கும் ஒரு பங்கு இருக்கிறதே?  

பயோகுவல் (Bioqual) நிருவனத்தின் தலைமை நிர்வாகி லூயிஸ், மாடர்னா மற்றும் ஜான்சன் & ஜான்சன் போன்ற மருந்து நிறுவனங்களுக்கு ஆய்வக குரங்குகளை வழங்கும் பொறுப்பில் இருக்கிறார். கோவிட் -19 தடுப்பூசிகளை (COVID-19 vaccines) உருவாக்கும்போது, ஆய்வகத்தில் மருந்துகளை பரிசோதனை செய்துப் பார்க்க குரங்குகள் பயன்படுத்தப்படுகின்றன.ஆனால் கடந்த ஆண்டு அமெரிக்கா முழுவதும் கொரோனா வைரஸ் அலை வீசியபோது உலகில் விசேஷமாக வளர்க்கப்பட்ட குரங்குகளின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தன.

கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் செயல்முறையில் ஆய்வக விலங்குகளின் தேவை அதிகமானது. குரங்கு ஒன்றுக்கு 10,000 அமெரிக்க டாலருக்கும் அதிகமாக செலவாகும் என்பதும் குறிப்பிடத்தகக்து. ஆனாலும் ஆய்வகக் குரங்குகளின் பற்றாக்குறை விஞ்ஞானிகளுக்கு பிரச்சனையாகின. சுமார் ஒரு டஜன் நிறுவனங்கள் தொற்றுநோய்க்கு மருந்து கண்டறியும் செயல்முறையில் ஆராய்ச்சி விலங்குகளுக்காக தேடிக் கொண்டிருந்தனர். 

"அவர்கள் குறிப்பிட்ட காலவரையறையில் விலங்குகளை வழங்க முடியாததால் எங்களுக்கு வேலை இழப்பும் ஏற்பட்டது" என்று லூயிஸ் கூறினார்.

COVID-19 தடுப்பூசிகளை உருவாக்க உலகிற்கு குரங்குகள் தேவை, அவற்றின் டி.என்.ஏ மனிதர்களுடன் ஒத்திருக்கிறது. ஆனால் தொற்றுநோயால் ஏற்பட்ட எதிர்பாராத தேவை அதிகரிப்பு, உலகளவில் பற்றாக்குறையை ஏற்படுத்தியது. ஆய்வக விலங்குகளை அதிக அளவில் சப்ளை செய்யும் சீனா, வனவிலங்குகளை விற்பனை செய்வதற்கு சமீபத்தில் தடை விதித்தது உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.  

சமீபத்திய பற்றாக்குறை அமெரிக்காவில் ஒரு குரங்கு இருப்பை உருவாக்குவது பற்றிய சிந்தனைக்கு புத்துயிர் அளித்துள்ளது.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!