நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

வெளிநாடுகளில் இருந்து கேரளா வருபவர்களுக்கு விமான நிலையங்களில் இலவச கொரோனா பரிசோதனை

வெளிநாடுகளில் இருந்து கேரளா வருபவர்களுக்கு விமான நிலையங்களில் இலவச கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று சுகாதாரத்துறை மந்திரி கே.கே.சைலஜா பேட்டியின்போது கூறினார்.
கோழிக்கோடு,

வெளிநாடுகளில் இருந்து கேரளா வருபவர்களுக்கு விமான நிலையங்களில் இலவச கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று சுகாதாரத்துறை மந்திரி கே.கே.சைலஜா பேட்டியின்போது கூறினார்.

கேரள சுகாதாரத்துறை மந்திரி கே.கே.சைலஜா, திருவனந்தபுரத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கேரளாவில் கொரோனா தொற்றின் தாக்கம் குறையவில்லை. பாதிக்கப்படுபவர்களின் விகிதம் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க மாநில அரசு மிகுந்த கவனமுடன் செயல்பட்டு வருகிறது.

விமான நிலையங்களில் கொரோனா ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனையை தவிர்க முடியாது. இதனை கருத்தில் கொண்டு வெளிநாடுகளில் இருந்து கேரளாவுக்கும் வரும் அனைவருக்கும் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை இலவசமாக செய்யப்படும். இந்த பரிசோதனை முடிவுகள் உடனுக்குடன் வழங்கப்படும்.

மத்திய சுகாதாரத்துறையின் உத்தரவின்பேரில் கேரளாவிலும் விமான நிலையங்களில் கொரோனா பாசோதனை செய்யப்பட்டு வந்தது. வெளிநாடுகளில் பரிசோதனைக்கு பிறகு மீண்டும் பணம் செலவு செய்து, இங்கு கொரோனா பரிசோதனை செய்வது தொடர்பாக எதிர்ப்புகள் எழுந்தது. இதைத்தொடர்ந்து கேரளாவில் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை இலவசமாக்கப்பட்டு உள்ளது.

மேலும் கேரளாவில் ஆங்காங்கே ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை கூடங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு பரிசோதனைக்கான கட்டணம் ரூ.448 மட்டுமே. 24 மணி நேரத்திற்குள் பரிசோதனை முடிவுகளை வழங்காத பரிசோதனை கூடங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். 

இவ்வாறு அவர் கூறினார்.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!