நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

சாலையில் கிடந்த நாய்.. மிதிக்காமல் ஒதுங்கி சென்று சிலிர்க்க வைத்த யானை; வைரல் வீடியோ!

சாலையில் அடிப்பட்டுக் கிடக்கும் நாயை மிதிக்காமல் யானை ஒன்று தள்ளிச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
மனிதர்களை விட விலங்குகள் சாலை நாகரீகமுடன் நடந்துகொள்பவை என்பதை உணர்த்தும் வகையில் யானையின் வீடியோ ஒன்று வைரல் ஆகி வருகிறது. அந்த வீடியோவில் சாலையில் பாகனுடன் செல்லும் யானை ஒன்று சாலையில் அடிப்பட்டு உயிரிழந்துக் கிடக்கும் பூனையை மிதிக்காமல் நாகரீகமுடன் தள்ளிச் சென்று நடக்கிறது.
ஆனால், யானையின் பின்னால் வரும் கார் நாயின் உடல் கீழே கிடக்க அதன்மேல் செல்கிறது. இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து பாராட்டி வருகிறார்கள். யானை தான் எத்தனை நாகரீகத்துடன் மதிநுட்பத்துடன் நடந்து கொண்டது என்று பலரும் வியந்தனர்.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!