நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

குறைந்த நேரத்தில் ருசியான குழப்பு செய்யலாம் வாங்க.

குறைந்த நேரத்தில் ருசியான குழப்பு செய்ய வேண்டுமா? அப்படினா பருப்பு உருண்டை குழம்பை செய்யலாம். இன்று இந்த குழம்பு செய்முறையை பார்க்கலாம்.
                உருண்டை குழம்பு


தேவையான பொருட்கள் :

கடலைப்பருப்பு - 1 கப்

துவரம்பருப்பு - கால் கப்

இஞ்சி - 1 துண்டு

மிளகு, சோம்பு, சீரகம் - சிறிதளவு

கசகசா - சிறிதளவு

தேங்காய் துருவல் - கால் கப்

தக்காளி, பெ.வெங்காயம் - 3

புளி - நெல்லிக்காய் அளவு

மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்

கரம் மசாலாத்தூள் - 1 டீஸ்பூன்

மல்லித்தூள் - 2 டீஸ்பூன்

மஞ்சள்தூள் - சிறிதளவு

எண்ணெய், உப்பு - தேவைக்கு

கடுகு, உளுத்தம்பருப்பு - சிறிதளவு

சாம்பார் வெங்காயம் - 10

கொத்தமல்லிதழை, கறிவேப்பிலை - சிறிதளவு


செய்முறை:

சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம், தக்காளி, இஞ்சி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

புளியை சிறிதளவு நீரில் கரைத்து கொள்ளவும்.

கடலைப்பருப்பு மற்றும் துவரம் பருப்பை ஒரு மணி நேரம் ஊறவைத்துக்கொள்ள வேண்டும்.

மிக்சியில் முதலில் இஞ்சி, மிளகு, சீரகம் போன்றவற்றை போட்டு அரைத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் அதனுடன் பருப்பு வகைகளை லேசாக அரைத்து, சிறிதளவு வெங்காயத்தையும் சேர்த்து பிசைந்து உருண்டைகளாக பிடித்து இட்லி தட்டில் வேக வைத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் தக்காளி, கசகசா, மீதமிருக்கும் வெங்காயம், சோம்பு மற்றும் தேங்காய் துருவல் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து மிக்சியில் அரைத்துக்கொள்ள வேண்டும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, சாம்பார் வெங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளித்து, அதனுடன் அரைத்து வைத்த மசாலாக்களை கொட்டி வதக்கவேண்டும்.

பின்னர் அதனுடன் மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள் போட்டு வதக்கவும்.

பச்சை வாசம் நீங்கியதும் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவேண்டும்.

அதனுடன் புளிக்கரைசல், உப்பு சேர்த்து கொதிக்க விட வேண்டும்.

நன்கு கொதித்து வந்ததும் வேக வைத்துள்ள உருண்டைகளை போட்டு 10 நிமிடங்கள் மிதமான தீயில் வைத்து கரம் மசாலாத்தூள், கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறலாம்.

சூப்பரான பருப்பு உருண்டை குழம்பு ரெடி.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!