நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

நோய்க்கு எதிராக போராடும் எலுமிச்சை மிளகு டீ.

எலுமிச்சை மிளகு டீ கீல்வாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூட்டு வலிகளைக் குறைப்பதற்கும் சிறந்தது என்றும் கூறப்படுகிறது. எந்தவொரு நோய்க்கும் எதிராகப் போராட உகந்தது.
                எலுமிச்சை மிளகு டீ


நல்ல ஆரோக்கியத்திற்காக மூலிகைத் தேநீர் பெரிதும் பயனளித்து வருகிறது . இஞ்சி, துளசி, புதினா, மிளகு மற்றும் இலவங்கப்பட்டை மிகவும் ஆரோக்கியமானவை, எந்தவொரு நோய்க்கும் எதிராகப் போராட உகந்தவை. இது கீல்வாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூட்டு வலிகளைக் குறைப்பதற்கும் சிறந்தது என்றும் கூறப்படுகிறது.

தேவையான பொருட்கள்

எலுமிச்சை சாறு - 1 பழத்தினுடையது

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

மிளகு - 1/4 தேக்கரண்டி

தேன் - 1 1/2 தேக்கரண்டி


செய்முறை:

2 கப் தண்ணீரை அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்க விடவும்.

தண்ணீர் நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் மிளகு மற்றும் மஞ்சள் தூளை போட்டு நன்றாக கொதிக்க விடவும்.

பின்னர் அதை வடிகட்டி அதில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் விட்டு குடிக்கலாம்.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!