நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

வருகிற 15, 16-ந்தேதிகளில் இந்தியா முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்

வருகிற 15, 16-ந்தேதிகளில் இந்தியா முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்ததில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.
திருச்சி, 

திருச்சியில் நடந்த நிகழ்ச்சியில் வங்கி அதிகாரிகள் சங்கத்தின் அகில இந்திய பொதுச்செயலாளர் ஜி.வி.மணிமாறன் பேசியதாவது:-

மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் மேலும் 2 பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து நமது கண்டனத்தை ஏற்கனவே தெரிவித்து விட்டோம். ஆனாலும் தனியார் மயமாக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

இதை கண்டித்து அகில இந்திய அளவில் வங்கி ஊழியர்கள் வருகிற 15, 16 ஆகிய தேதிகளில் வேலைநிறுத்தப் போராட்டம் ஏற்கனவே அறிவித்தபடி நடைபெற உள்ளது. நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து போராடுவதன் மூலம் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் தனியார் மயமாக்கப்படுவதை தடுத்து நிறுத்த முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!