தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும். இதை தயாரிக்கும் முறை: கிராம்பு - 2, ஏலம் - 2, சுருள் இலவங்கப்பட்டை - 1, அதிமதுரம் சிறுதுண்டு, சுக்கு சிறுதுண்டு, மிளகு - 10, மஞ்சள் சிறிதளவு இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும். இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும். இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ : மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!
Get link
Facebook
Twitter
Pinterest
Email
Other Apps
அடுப்பு இல்லாமல், எண்ணெய் பயன்படுத்தாமல் ஒரு உணவகமா..? அசத்தும் படையல் இயற்கை உணவகம்..
Get link
Facebook
Twitter
Pinterest
Email
Other Apps
-
இங்கு வடை பாயாசத்துடன் முழுமையான மதிய உணவும் வழங்குகின்றனர். அந்த முழு மதிய உணவில் சாதம், சாம்பார், ரசம், காரக்குழம்பு, பொரியல், அவியல் என அனைத்தையும் அடுப்பே இல்லாமல் சமைத்து பரிமாறுகின்றனர்.
ஹோட்டல் என்றாலே ஆரோக்கியத்திற்கு தீங்கானது என்கிற எண்ணம்தான் பலரது மனதிலும் உள்ள அச்சம். அது சுவைக்காக மட்டுமேயன்றி ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்பதும் பலரது கூற்று. ஆனால் அவற்றை இன்றைய இளைஞர்கள், பாரம்பரிய உணவுகள் மீது பற்றுகொண்ட சமூக ஆர்வலர்கள் வீட்டை விட ஆரோக்கியமான உணவுகளை அறிமுகப்படுத்தி அசத்துகின்றனர். அவர்களின் அந்தப் படைப்புகள் மக்களை ஆச்சரியப்படுத்துவது மட்டுமன்றி இதுபோன்ற உணவுகளை எவ்வளவு விலையானாலும் சாப்பிடலாம் என நினைக்கும் அளவுக்கு செய்துவிடுகின்றனர்.
அந்த வகையில் கோயம்பத்தூரில் அடுப்பில்லாமல், எண்ணெய் பயன்படுத்தாமல் முழுக்க முழுக்க இயற்கையான முறையில் ஒரு உணவகம் இயங்கி வருகிறது. அதன் பெயர் 'படையல் இயற்கை உணவகம்’. இது உலகின் முதல் அடுப்பில்லா உணவகம் என்றும் கூறப்படுகிறது. இந்த உணவகம் கோவையைச் சேர்ந்த படையல் சிவா என்பவரால் நடத்தப்பட்டு வருகிறது.
இங்கு வடை பாயாசத்துடன் முழுமையான மதிய உணவும் வழங்குகின்றனர். அந்த முழு மதிய உணவில் சாதம், சாம்பார், ரசம், காரக்குழம்பு, பொரியல், அவியல் என அனைத்தையும் அடுப்பே இல்லாமல் சமைத்து பரிமாறுகின்றனர். இவர்களின் உணவில் பூக்கள், நாட்டுக் காய்கறிகள்தான் அதிகமாகப் பயன்படுத்துக்கின்றனர். மசாலா என்றால் மிளகு, சீரகம் மற்றும் உப்புதான் பிரதானமாக பயன்படுத்துகின்றனர்.
இங்கு தயிர் சாதம் மிகவும் ஸ்பெஷல். அதாவது இங்கு சாதாரணமாக பாலிலிலிருந்து தயாரிக்கும் தயிரைக் காட்டிலும் தேங்காய் பாலை 12 மணி நேரம் ஊற வைத்து தயிராக்கி அதை தயிர் சாதமாக செய்கின்றனர். அதில் கூடுதல் சுவைக்கு மாதுளை கேரட் போன்றவற்றையும் கலந்து செய்கின்றனர்.
அரிசி வகைகளிலும் திணை வகைகளைத்தான் பயன்படுத்துகின்றனர். இங்கு காலை உணவுகள் அனைத்துமே ஒரு பிளேன் 30 ரூபாய் என விற்கப்படுகிறது. டீ வகைகளிலும் மூலிகை டீ தான். சங்குப்பூ டீ, செம்பருத்தி டீ போன்ற டீ வகைகள் கிடைக்கின்றன. அதோடு அதில் மில்க் ஷேக்குகளும் பாதாம் , நட்ஸ் பயன்படுத்தி செய்கின்றனர். பார்சல் முறையும் இங்கு உண்டு. பார்சலுக்கும் பாக்கு மட்டை தட்டும், அதை பேக் செய்ய வாழையிலை நார் பயன்படுத்தப்படுகிறது.
இப்படி எங்கும் சமரசம் செய்துகொள்ளாமல் முழுக்க முழுக்க இயற்கையை மட்டுமே நம்பி இந்த உணவகம் இயங்கி வருகிறது. இங்கு சாப்பிடும்போது மனம் நிறைவடைவதாக வாடிக்கையாளர்கள். தெரிவிக்கின்றனர். இதை மேலும் நல்ல முறையில் பெரிய அளவில் கொண்டு சென்றால் மற்ற கமர்ஷியல் உணவகங்களைப் போல் இதிலும் லாபம் பார்க்கலாம் என்கிறார் படையல் சிவா .
மாணவர்களாகிய நீங்கள் தங்கள் கடமை என்னவென்று சிந்திக்க வேண்டும். உங்கள் எண்ணங்கள் சிறந்தனையாகவும், ஒழுக்கத்தை வளர்ப்பதாகவும் இருக்க வேண்டும். நாடு நமக்கு என்ன செய்தது? என்று எண்ணாமல், நாட்டுக்காக நாம் என்ன செய்தோம்? என்று எண்ண வேண்டும் என்றார் அமெரிக்க நாடடு அதிபர் ஜான்கென்னடி. இந்த கூற்றின்படி மாணவர்களாகிய நீங்கள் தங்கள் கடமை என்னவென்று சிந்திக்க வேண்டும். உங்கள் எண்ணங்கள் சிறந்தனையாகவும், ஒழுக்கத்தை வளர்ப்பதாகவும் இருக்க வேண்டும். நாட்டு நலனை கருத்தில் கொண்டு நீங்கள் பணியாற்ற வேண்டும். மாணவர்களாகிய நீங்கள் இளமையில் தொண்டு மனப்பான்மையுடன் திகழ வேண்டும். இதற்காக பள்ளி, கல்லூரிகளில் சாரணர் இயக்கம், தேசிய மாணவர்படை, நாட்டு நலப்பணித்திட்டம், செஞ்சிலுவை சங்கம் ஆகியவற்றில் சேர்ந்து சமூக பணிகளை மேற்கொள்ள ஆர்வம் காட்ட வேண்டும். தங்கள் கிராமத்தில் மரக்கன்று நடுதல், ஏரி, குளம் ஆகியவற்றின் கரைகளை சீரமைக்க வேண்டும். முதியோர்களுக்கு கல்வி கற்று கொடுத்தல், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்தல் ஆகிய சமூக தொண்டாற்றுவதில் மாணவர்கள் ஆர்வம் காட்ட வேண்டும். படிப்பதோடு நிறுத்தி கொள்ளாமல் பெற்றோரு
ஆசிட் ரிஃப்ளக்ஸ் (acid reflux), அதாவது வயிற்றில் உள்ள ஆசிட், உணவுக் குழாய்க்கு மேலே செல்லும்போது, மார்பின் கீழ் பகுதியில் எரிச்சல் உணர்வை ஏற்படுத்துகிறது. ஹைட்ரோகுளோரிக் அமிலம் மற்றும் பெப்சின் ஆகியவை செரிமானத்திற்காக வயிற்றில் உற்பத்தியாகின்றன. ஆசிட் ரிஃப்ளக்ஸ் (acid reflux), அதாவது வயிற்றில் உள்ள ஆசிட், உணவுக் குழாய்க்கு மேலே செல்லும்போது, மார்பின் கீழ் பகுதியில் எரிச்சல் உணர்வை ஏற்படுத்துகிறது. இதனால் நெஞ்சு எரிதல், வயிற்றில் எரிச்சல் உணர்வு, வயிற்றுவலி, புளிப்பு ஏப்பம், வாயு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. தவறான உணவுப் பழக்கம் இதற்குக் காரணமாக இருக்கலாம். அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட உணவு பழக்கங்களில் சில மாற்றுதல்கள் செய்வது நல்ல பலன தரும் என்கின்றனர் மருத்துவர்கள். அசிடிட்டி ஏற்படுவதற்கான காரணங்கள் நீண்ட நேரம் பசியுடன் இருப்பது அசிடிட்டிக்கு முக்கிய காரணம். ஜீரணிக்க எதுவும் இல்லாத போது, வயிற்றின் அமிலம் வயிற்றின் உட்புறப் சுவர்களை தாக்கி அதனை மெலியச் செய்கிறது. மேலும் சாப்பிட்ட பிறகு தூங்கவோ, படுக்கவோ கூடாது. சூடான காரமான உணவுகள், வறுத்த உணவுகள், ஜங்க் ஃபுட், மது,
சென்னை : தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பான அறிவிப்பு, இன்று(மார்ச் 31) வெளியாக உள்ளது. தமிழகத்தில், கொரோனா நோய் பரவலை தடுக்க, 2020 மார்ச், 25ல், பொது ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதன்பின், ஒவ்வொரு மாதமும், ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது.கடந்த ஆண்டு இறுதியில், கொரோனா தாக்கம் குறைய துவங்கியதும், அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்தது. புத்தாண்டில், மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். எனினும், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. அரசு அறிவித்த ஊரடங்கு, இன்று நள்ளிரவு, 12:00 மணிக்கு நிறைவடைகிறது.தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், இம்மாதம் துவக்கத்தில் இருந்து, கொரோனா நோய் பரவல், மீண்டும் அதிகரிக்கத் துவங்கி உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கானோர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, ஊரடங்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு, மக்களிடம் ஏற்பட்டுள்ளது. தற்போது தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ளதால், கட்டுப்பாடுகள் விதிக்க, அதிகாரிகள் தயங்குகின்றனர். தேர்தல் முடிந்தபின் கட்டுப்பாடுக
Comments
Post a Comment