தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும். இதை தயாரிக்கும் முறை: கிராம்பு - 2, ஏலம் - 2, சுருள் இலவங்கப்பட்டை - 1, அதிமதுரம் சிறுதுண்டு, சுக்கு சிறுதுண்டு, மிளகு - 10, மஞ்சள் சிறிதளவு இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும். இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும். இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ : மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
அடுப்பு இல்லாமல், எண்ணெய் பயன்படுத்தாமல் ஒரு உணவகமா..? அசத்தும் படையல் இயற்கை உணவகம்..
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
-
இங்கு வடை பாயாசத்துடன் முழுமையான மதிய உணவும் வழங்குகின்றனர். அந்த முழு மதிய உணவில் சாதம், சாம்பார், ரசம், காரக்குழம்பு, பொரியல், அவியல் என அனைத்தையும் அடுப்பே இல்லாமல் சமைத்து பரிமாறுகின்றனர்.
ஹோட்டல் என்றாலே ஆரோக்கியத்திற்கு தீங்கானது என்கிற எண்ணம்தான் பலரது மனதிலும் உள்ள அச்சம். அது சுவைக்காக மட்டுமேயன்றி ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்பதும் பலரது கூற்று. ஆனால் அவற்றை இன்றைய இளைஞர்கள், பாரம்பரிய உணவுகள் மீது பற்றுகொண்ட சமூக ஆர்வலர்கள் வீட்டை விட ஆரோக்கியமான உணவுகளை அறிமுகப்படுத்தி அசத்துகின்றனர். அவர்களின் அந்தப் படைப்புகள் மக்களை ஆச்சரியப்படுத்துவது மட்டுமன்றி இதுபோன்ற உணவுகளை எவ்வளவு விலையானாலும் சாப்பிடலாம் என நினைக்கும் அளவுக்கு செய்துவிடுகின்றனர்.
அந்த வகையில் கோயம்பத்தூரில் அடுப்பில்லாமல், எண்ணெய் பயன்படுத்தாமல் முழுக்க முழுக்க இயற்கையான முறையில் ஒரு உணவகம் இயங்கி வருகிறது. அதன் பெயர் 'படையல் இயற்கை உணவகம்’. இது உலகின் முதல் அடுப்பில்லா உணவகம் என்றும் கூறப்படுகிறது. இந்த உணவகம் கோவையைச் சேர்ந்த படையல் சிவா என்பவரால் நடத்தப்பட்டு வருகிறது.
இங்கு வடை பாயாசத்துடன் முழுமையான மதிய உணவும் வழங்குகின்றனர். அந்த முழு மதிய உணவில் சாதம், சாம்பார், ரசம், காரக்குழம்பு, பொரியல், அவியல் என அனைத்தையும் அடுப்பே இல்லாமல் சமைத்து பரிமாறுகின்றனர். இவர்களின் உணவில் பூக்கள், நாட்டுக் காய்கறிகள்தான் அதிகமாகப் பயன்படுத்துக்கின்றனர். மசாலா என்றால் மிளகு, சீரகம் மற்றும் உப்புதான் பிரதானமாக பயன்படுத்துகின்றனர்.
இங்கு தயிர் சாதம் மிகவும் ஸ்பெஷல். அதாவது இங்கு சாதாரணமாக பாலிலிலிருந்து தயாரிக்கும் தயிரைக் காட்டிலும் தேங்காய் பாலை 12 மணி நேரம் ஊற வைத்து தயிராக்கி அதை தயிர் சாதமாக செய்கின்றனர். அதில் கூடுதல் சுவைக்கு மாதுளை கேரட் போன்றவற்றையும் கலந்து செய்கின்றனர்.
அரிசி வகைகளிலும் திணை வகைகளைத்தான் பயன்படுத்துகின்றனர். இங்கு காலை உணவுகள் அனைத்துமே ஒரு பிளேன் 30 ரூபாய் என விற்கப்படுகிறது. டீ வகைகளிலும் மூலிகை டீ தான். சங்குப்பூ டீ, செம்பருத்தி டீ போன்ற டீ வகைகள் கிடைக்கின்றன. அதோடு அதில் மில்க் ஷேக்குகளும் பாதாம் , நட்ஸ் பயன்படுத்தி செய்கின்றனர். பார்சல் முறையும் இங்கு உண்டு. பார்சலுக்கும் பாக்கு மட்டை தட்டும், அதை பேக் செய்ய வாழையிலை நார் பயன்படுத்தப்படுகிறது.
இப்படி எங்கும் சமரசம் செய்துகொள்ளாமல் முழுக்க முழுக்க இயற்கையை மட்டுமே நம்பி இந்த உணவகம் இயங்கி வருகிறது. இங்கு சாப்பிடும்போது மனம் நிறைவடைவதாக வாடிக்கையாளர்கள். தெரிவிக்கின்றனர். இதை மேலும் நல்ல முறையில் பெரிய அளவில் கொண்டு சென்றால் மற்ற கமர்ஷியல் உணவகங்களைப் போல் இதிலும் லாபம் பார்க்கலாம் என்கிறார் படையல் சிவா .
தொடர் இருமல், தொண்டைப்புண், தொண்டை வீக்கம், தாடை வலி, தலைவலி, தலைபாரம் , மூக்கடைப்பு, அடிக்கடி தும்மல் போன்ற அறிகுறிகள் இருக்கும். குளிர் அல்லது மழைக்காலம் வந்தாலே சளி, தொண்டை பிரச்சனைகள் வந்துவிடும். அப்படி சளி சேர்ந்துவிட்டாலே குறைந்தது 7 முதல் 14 நாட்கள் வரை நீடிக்கும். ஆனால் அதற்குள் நாம் படும் பாடு சொல்லி மாளாது. குறிப்பாக சைனஸ் பிரச்சனை இருப்பவர்களுக்கு குளிர்காலம் என்பது நெருக்கடியான பருவநிலை எனலாம். அப்படி, சைனஸின் ஒரு வகைதான் தொண்டையில் சளி கட்டுதல். பெரும்பாலானோர் அவதிப்படுவதும் இந்த பிரச்சனையால்தான். இது வந்துவிட்டாலே குரலில் மாற்றம், தொண்டை வலி , வீக்கம் , எதையும் சாப்பிட முடியாது , கண்ணங்கள் , தாடைகளில் வலி என பல அறிகுறிகள் இருக்கும். இதனால் அன்றாட வேலைகளில் கூட ஈடுபட முடியாது. இவ்வாறு தொண்டையில் சளி கட்ட என்ன காரணம் தெரியுமா..? அதாவது குளிர்காலத்தில் காற்றின் மூலம் பரவும் பாக்டீரியா, வைரஸ் மற்றும் பூஞ்சை தொற்றுகள் மூலமாக சளி பிடிக்கும்போது சைனஸ் பிரச்சனை உருவாகிறது. இந்த பாக்டீரியாக்கள் சைனஸ் அறைக்குள் சென்று சளி சவ்வுகளை வீங்க வைத்து அழற்சியை ஏற்படுத்துகிறது. இதனால்...
நமது வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கம் காரணமாக, உடல் பருமன், தொப்பை என்பது கிட்டதட்ட அனைவரும் சந்திக்கும் பிரச்சனையாக ஆகி விட்டது. பொதுவாக, உடலில் அதிக கொழுப்பு வயிறு மற்றும் இடுப்பில் படிந்து, தோற்றத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. தொப்பை என்பது கிட்டதட்ட அனைவரும் சந்திக்கும் பிரச்சனையாக ஆகி விட்டது. உடலில் அதிக கொழுப்பு வயிறு மற்றும் இடுப்பில் படிந்து, தோற்றத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. சில உடற்பயிற்சிகளின் உதவியுடன், சில நாட்களிலேயே தொப்பை கொழுப்பை கரைக்கலாம். நமது வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கம் காரணமாக, உடல் பருமன், தொப்பை என்பது கிட்டதட்ட அனைவரும் சந்திக்கும் பிரச்சனையாக ஆகி விட்டது. பொதுவாக, உடலில் அதிக கொழுப்பு வயிறு மற்றும் இடுப்பில் படிந்து, தோற்றத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதிக உடல் பருமன் மற்றும் தொப்பை உள்ளவர்களுக்கு இங்கே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸ் மிகவும் பயன்படும். ஆரோக்கியமான உணவு மற்றும் சில உடற்பயிற்சிகளின் உதவியுடன், சில நாட்களிலேயே தொப்பை கொழுப்பை கரைக்கலாம். தொப்பையை குறைக்க மூன்று சிறந்த பயிற்சிகள்: 1. இரு கால்களையும் நீட்டி செய்யும் பயிற்சி முதலில்...
பசிக்குது ஆனா கையில் காசில்லையா? அப்போ இலவசமாகவே பிரியாணி எடுத்து சாப்பிடலாம்! பசிக்குதா எடுத்துக்குங்க..." இப்படி ஒரு போர்ட் வைக்கப்பட்டிருக்கிறது அந்த கடையில். அப்பகுதி வழியாக வருவோரும், போவோரும் கடையை பார்த்து ஒரு நிமிடம் உண்மைதானா என்று தங்களைக் கிள்ளி பார்க்கிறார்கள். அப்படி என்ன ஸ்பெஷல் அந்த கடையில் பார்ப்போம். கோவை புலியகுளம் பகுதியில் உள்ள ரெட்பீல்ஸ் சாலையில் வசித்து வருபவர்கள் சதீஷ், சப்ரினா தம்பதியினர். சதீஷ் திருப்பூரில் முட்டை விற்பனை கடை வைத்து வருகிறார். சப்ரினா பிஎஸ்சி சைக்காலஜி படித்திருக்கிறார். சப்ரினா தன்னுடைய வீட்டு முன்பு ஒரு சாப்பாடுக் கடை வைத்திருக்கிறார். சாலையோரமாக இருக்கும் சிறிய கடை அது. நாள்தோறும் மதியம் 12 மணிக்கு கடை திறந்தால், 3 மணி வரைதான் கடை இயங்கும். அந்த பிரியாணி கடையில், ஒரு பிளேட் பிரியாணி எவ்வளவு தெரியுமா? வெறும் 20 ரூபாய் தான். வீட்டிலேயே பிரியாணி செய்து அதை பொட்டலங்களாகக் கட்டி, கடையில் வைத்துள்ளார் சப்ரினா... அந்த ஒரு பெட்டி மீது நிறைய பிரியாணி பொட்டலங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். 3 மணிக்கு முன்பே அத்தனை பொட்டல...
Comments
Post a Comment