தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும். இதை தயாரிக்கும் முறை: கிராம்பு - 2, ஏலம் - 2, சுருள் இலவங்கப்பட்டை - 1, அதிமதுரம் சிறுதுண்டு, சுக்கு சிறுதுண்டு, மிளகு - 10, மஞ்சள் சிறிதளவு இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும். இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும். இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ : மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
அடுப்பு இல்லாமல், எண்ணெய் பயன்படுத்தாமல் ஒரு உணவகமா..? அசத்தும் படையல் இயற்கை உணவகம்..
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
-
இங்கு வடை பாயாசத்துடன் முழுமையான மதிய உணவும் வழங்குகின்றனர். அந்த முழு மதிய உணவில் சாதம், சாம்பார், ரசம், காரக்குழம்பு, பொரியல், அவியல் என அனைத்தையும் அடுப்பே இல்லாமல் சமைத்து பரிமாறுகின்றனர்.
ஹோட்டல் என்றாலே ஆரோக்கியத்திற்கு தீங்கானது என்கிற எண்ணம்தான் பலரது மனதிலும் உள்ள அச்சம். அது சுவைக்காக மட்டுமேயன்றி ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்பதும் பலரது கூற்று. ஆனால் அவற்றை இன்றைய இளைஞர்கள், பாரம்பரிய உணவுகள் மீது பற்றுகொண்ட சமூக ஆர்வலர்கள் வீட்டை விட ஆரோக்கியமான உணவுகளை அறிமுகப்படுத்தி அசத்துகின்றனர். அவர்களின் அந்தப் படைப்புகள் மக்களை ஆச்சரியப்படுத்துவது மட்டுமன்றி இதுபோன்ற உணவுகளை எவ்வளவு விலையானாலும் சாப்பிடலாம் என நினைக்கும் அளவுக்கு செய்துவிடுகின்றனர்.
அந்த வகையில் கோயம்பத்தூரில் அடுப்பில்லாமல், எண்ணெய் பயன்படுத்தாமல் முழுக்க முழுக்க இயற்கையான முறையில் ஒரு உணவகம் இயங்கி வருகிறது. அதன் பெயர் 'படையல் இயற்கை உணவகம்’. இது உலகின் முதல் அடுப்பில்லா உணவகம் என்றும் கூறப்படுகிறது. இந்த உணவகம் கோவையைச் சேர்ந்த படையல் சிவா என்பவரால் நடத்தப்பட்டு வருகிறது.
இங்கு வடை பாயாசத்துடன் முழுமையான மதிய உணவும் வழங்குகின்றனர். அந்த முழு மதிய உணவில் சாதம், சாம்பார், ரசம், காரக்குழம்பு, பொரியல், அவியல் என அனைத்தையும் அடுப்பே இல்லாமல் சமைத்து பரிமாறுகின்றனர். இவர்களின் உணவில் பூக்கள், நாட்டுக் காய்கறிகள்தான் அதிகமாகப் பயன்படுத்துக்கின்றனர். மசாலா என்றால் மிளகு, சீரகம் மற்றும் உப்புதான் பிரதானமாக பயன்படுத்துகின்றனர்.
இங்கு தயிர் சாதம் மிகவும் ஸ்பெஷல். அதாவது இங்கு சாதாரணமாக பாலிலிலிருந்து தயாரிக்கும் தயிரைக் காட்டிலும் தேங்காய் பாலை 12 மணி நேரம் ஊற வைத்து தயிராக்கி அதை தயிர் சாதமாக செய்கின்றனர். அதில் கூடுதல் சுவைக்கு மாதுளை கேரட் போன்றவற்றையும் கலந்து செய்கின்றனர்.
அரிசி வகைகளிலும் திணை வகைகளைத்தான் பயன்படுத்துகின்றனர். இங்கு காலை உணவுகள் அனைத்துமே ஒரு பிளேன் 30 ரூபாய் என விற்கப்படுகிறது. டீ வகைகளிலும் மூலிகை டீ தான். சங்குப்பூ டீ, செம்பருத்தி டீ போன்ற டீ வகைகள் கிடைக்கின்றன. அதோடு அதில் மில்க் ஷேக்குகளும் பாதாம் , நட்ஸ் பயன்படுத்தி செய்கின்றனர். பார்சல் முறையும் இங்கு உண்டு. பார்சலுக்கும் பாக்கு மட்டை தட்டும், அதை பேக் செய்ய வாழையிலை நார் பயன்படுத்தப்படுகிறது.
இப்படி எங்கும் சமரசம் செய்துகொள்ளாமல் முழுக்க முழுக்க இயற்கையை மட்டுமே நம்பி இந்த உணவகம் இயங்கி வருகிறது. இங்கு சாப்பிடும்போது மனம் நிறைவடைவதாக வாடிக்கையாளர்கள். தெரிவிக்கின்றனர். இதை மேலும் நல்ல முறையில் பெரிய அளவில் கொண்டு சென்றால் மற்ற கமர்ஷியல் உணவகங்களைப் போல் இதிலும் லாபம் பார்க்கலாம் என்கிறார் படையல் சிவா .
பொதுவாக தொலைந்து போன ஸ்மார்ட்போனை ஒரு சில எளிய வழிமுறைகள் மூலம் மீண்டும் கண்டுபிடிக்க முடியும். குறிப்பாக ஆப்பிள் Find my phone அம்சமும், ஆன்ட்ராய்டு தளத்தில் Find your phone அம்சங்களும் இருக்கின்றன. இந்த அம்சம் நீங்கள் ஸ்மார்ட்போனுடன் சென்று வந்த இடங்கள் அனைத்தையும் டிராக் செய்து வைத்திருக்கும். அதுமட்டுமின்றி Google Map மூலம் கூட கண்டுபிடிக்க முடியும். கூகுள் மேப்ஸ் மூலம் நீங்கள் தவறவிட்ட ஸ்மார்ட்போனினை டைம்லைன் மூலம் டிராக் செய்ய முடியும். தற்போது அவை எப்படி என இங்கே பார்ப்போம். முதலில் ஸ்மார்ட்போன் அல்லது கம்ப்யூட்டரில் www.maps.google.co.in வலைத்தள முகவரிக்கு செல்ல வேண்டும். தவறவிட்ட ஸ்மார்ட்போனில் லின்க் செய்யப்பட்டிருந்த கூகுள் அக்கவுன்ட் மூலம் லாக்-இன் செய்ய வேண்டும். இனி, வலதுபுறம் மேல்பக்கம் காணப்படும் மூன்று புள்ளிகளை க்ளிக் செய்ய வேண்டும். அடுத்து ‘Your timeline' ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். இங்கு உங்களது சாதனத்தில் இருக்கும் தகவல்களில் ஆண்டு, மாதம் மற்றும் தேதி உள்ளிட்ட விவரங்களை பதிவிட வேண்டும். உங்களது சாதனத்தின் லொகேஷன் விவரங்களை மேப்ஸ் தற்போதைய ...
சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி வீரர்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசுத் தொகுப்பில் சலவை சோப்பு அனுப்பப்பட்டது. விண்வெளி வீரர்கள் துணிகளை துவைக்க உதவும் வகையில் ஸ்பேஸ்எக்ஸ் சலவை சோப்பை விண்வெளிக்கு அனுப்பியது புதன்கிழமையன்று சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி வீரர்களுக்கு ஸ்பேஸ்எக்ஸ் கிறிஸ்துமஸ் பரிசுத் தொகுப்பு அனுப்பியது. பரிசுப் பொருட்களில் சலவை சோப்பும் அனுப்பப்பட்டுள்ளது. Proctor and Gamble நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட, சலவை சோப்பு விண்வெளியில் துணிகளை திறம்பட துவைக்க உதவுமா என்பதைக் கண்டறியும் ஒரு பரிசோதனையின் ஒரு பகுதி இது . விண்வெளி நிலையத்தில் இருப்பவர்களின் வாழ்க்கை மிகவும் சிரமமானது. விண்வெளியின் மர்மங்களைம் ரகசியங்களையும் தெரிந்துக் கொள்வதற்காக விண்வெளி வீரர்கள் மாதக்கணக்கில் அங்கு இருக்க வேண்டியிருக்கிறது. அங்கு அவர்கள், சாப்பிடுவது, தூங்குவது போன்ற வேலைகளை செய்வது வித்தியாசமானதாக இருக்கும். பலவிதமான காரணங்களால் விண்வெளி வீரர்கள் தங்கள் துணிகளை துவைக்க முடிவதில்லை. அவர்கள் அணிந்துள்ள துணிகளைக் துவைப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள முயற்சியில் ஒரு பகுதியா...
ஹேன்ஸன் ரோபட்டிக்ஸ் நிறுவனம் சோஃபியின் தங்கை என கூறி ” க்ரேஸ் ” என்ற புதிய ரோபோவை தற்பொழுது அறிமுகப்படுத்தியுள்ளது. க்ரேஸ் சுகாதார துறையில் தனது பங்களிப்பை வழங்கும் என இதனை உருவாக்கிய நிறுவனம் தெரிவிக்கிறது. சோஃபியா_ரோபட் தொழில்நுட்ப வளர்ச்சி குறித்த செய்திகளை கடந்து செல்லும் பொழுதுதெல்லாம் ரோபோக்களின் வளர்ச்சி நம்மை பிரம்மிக்க வைப்பதாக இருக்கும். குறிப்பாக ஹுமனாய்ட் ரோபோக்கள் என்று அழைக்கப்படும் மனித ரோபோக்களின் வளர்ச்சி நம்பிக்கைக்கு அப்பால் பல மாற்றங்களை கண்டுள்ளது. இந்த வகை ஹுமனாய்ட் ரோபோக்கள் மனிதர்களை போலவே சிந்தித்து செயல்படும் வகையில் உருவாக்கப்படும். இவ்வகை ரோபோக்களை உருவாக்கும் முயற்சியில்தான் பல நிறுவனங்கள் போட்டி போட்டு ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த 2015 ஆம் ஆண்டு அறிமுகமான ஹுமனாய்ட் ரோபோவான சோஃபியா பலரின் கவனத்தை பெற்றது. ஹாங்காங்கை சேர்ந்த பிரபல ”ஹேன்ஸன் ரோபட்டிக்ஸ் “ என்ற நிறுவனம் இந்த சோஃபியாவை அறிமுகப்படுத்தியது. மனிதர்களை போலவே முக பாவனைகளை வெளிப்படுத்துவது, கேட்கும் கேள்விகளுக்கு சாதூர்யமாகவும், நகைச்சுவை உணர்வுடனும் பதிலளிப்...
Comments
Post a Comment