நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

பாகற்காய் ஃப்ரை.. இப்படி செஞ்சா கசப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை!

 ஆரோக்கியம் நிறைந்த பாகற்காய் வறுவல்.


நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நன்மைத் தரும் பாகற்காய் வறுவல் ரெசிபி எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்.பாகற்காய் வறுவல் சுவை மற்றும் ஆரோக்கியம் நிறைந்த உணவு வகை

இதனை நீங்கள் சாம்பார் சாதம், ரசம் சாதம் மற்றும் தயிர் சாதத்திற்கு சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். ஆரோக்கியம் நிறைந்த பாகற்காய் வறுவல்.


தேவையான பொருட்கள் :


சின்ன/பெரிய பாகற்காய் – 1 /4 கிலோ

மிளகாய் பொடி – 1 தேக்கரண்டி

தனியா பொடி – 1 தேக்கரண்டி

சீரகப்பொடி – 1 /2 தேக்கரண்டி

மஞ்சள் பொடி – கொஞ்சம்

தயிர் – 1 தேக்கரண்டி

பூண்டு – 4 பல்

சின்ன வெங்காயம் – .10

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – 4 தேக்கரண்டி

கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை – கொஞ்சம்


செய்முறை :


* பாகற்காயை நன்கு கழுவி விதையை எடுத்து விட்டு நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும்.


* பூண்டை நன்கு தட்டிகொள்ளவும்.


* வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும்.


* ஒரு பாத்திரத்தில் நறுக்கிய பாகற்காய் அத்துடன், மிளகாய், தனியா, மஞ்சள், சீரகப் பொடி, தயிர், பூண்டு, உப்பு போட்டு நீர் ஊற்றாமல் பிசையவும். இதனை அப்படியே ஒரு மணி நேரம் குளிர்பதனப் பெட்டியில் வைக்கவும்.


* பிறகு, அடுப்பில் தவாவை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். பின்னர் பிசறி வைத்த பாகற்காயை போடவும்.


* தீயை மிதமாக வைக்கவும். அடிக்கடி பிரட்டி விடவும். 15 நிமிடத்தில் காய் வெந்து, நல்ல கருஞ்சிவப்பு நிறம் வந்ததும் இறக்கவும்.


* கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.


* இந்த பாகற்காய் வறுவல் கசப்பாக இருக்காது. சாம்பார் சாதம், தயிர் சாதத்துக்கு நல்ல துணைக் கறி ரெடி.


Also read :. குறைந்த நேரத்தில் ருசியான குழப்பு செய்யலாம் வாங்க.

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!