நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

ஹைதி நாட்டில் சிறைச்சாலையில் கலவரம்: 25 பேர் பலி - 400 பேர் தப்பியோட்டம்.

ஹைதி நாட்டில் உள்ள சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தில் 25 பேர் உயிரிழந்தனர்.
போர்ட்-அவ்-ப்ரிண்ஸ், 

கரீபியன் கடல் பகுதியில் அமைந்துள்ள தீவு நாடுகளில் ஒன்று ஹைதி. இந்நாட்டின் தலைநகரான போர்ட்-அவ்-ப்ரிண்சின் வடகிழக்கு பகுதியில் க்ரோஸ்-டிஸ்-பவ்க்யூட்ஸ் சிவில் சிறைச்சாலை உள்ளது. அந்த சிறைச்சாலையில் கொலை, கொள்ளை உள்பட பல்வேறு குற்றவழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், அந்த சிறைச்சாலையில் கடந்த வியாழக்கிழமை திடீரென கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரத்தில் கைதிகளுக்கும் சிறைக்காவலர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கலவரத்தை கட்டுப்படுத்த முயற்சி மேற்கொள்ளபட்டபோதும் சிறைக்காவலர்களால் கைதிகளை கட்டுப்படுத்த முடியவில்லை. 

இந்த கலவரம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கொலை,கொள்ளை கும்பல் தலைவனான அர்நெல் ஜோசப் என்ற குற்றவாளி தப்பிச்செல்ல நடத்தப்பட்டுள்ளது. கலவரத்தை பயன்படுத்தி அர்நெல் ஜோசப் தப்பிச்சென்றான். 

அந்த குற்றவாளி எல்எஸ்ட்ரி நகரில் உள்ள அர்டிபொநைட் என்ற பகுதியில் உள்ள சோதனைச்சாவடியை கடக்க முயன்றான். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் குற்றவாளி அர்நெல் ஜோசப்பை சுட்டுக்கொன்றனர்.

சிறைச்சாலை கலவரத்தில் 400-க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பிச்சென்றுள்ளனர். மேலும், இந்த கலவரத்தில் சிறைத்துறை அதிகாரிகள் உள்பட மொத்தம் 25 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஹைதி அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், சிறையில் இருந்து தப்பிச்சென்ற கைதிகளை பிடிக்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.


Comments

Popular posts from this blog

கடந்த சில நாட்களாக தொண்டை சளியால் அவதிப்படுகிறீர்களா..? இந்த வீட்டு வைத்தியங்களை செஞ்சு பாருங்க..!

Belly Fat: தொப்பை வெண்ணெய் போல் கரைய ‘3’ எளிய பயிற்சிகள்!...

பசிச்சா எடுத்துக்குங்க...' - 20 ரூபாய் பிரியாணி; காசு இல்லைன்னா FREE பிரியாணி!