நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

புனேயில் காலை நடைபயிற்சி சென்றவர்களுக்கு அதிர்ச்சி: தொண்டை அறுபட்டு, முகம் சிதைந்த நிலையில் உடல் கிடந்த பயங்கரம்

இத்தகைய கொலைகளின் அதிகரிப்பு ஹோமிசைட் தொடர் கொலையாளியின் வேலையாக இருக்குமோ என்று பல கோணங்களிலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புனேயில் வழக்கமாக நடைப்பயிற்சி மேற்கொள்பவர்களுக்கு சனிக்கிழமை காலை அதிர்ச்சிக் காத்திருந்தது, தொண்டை அறுக்கப்பட்டு முகம் சிதைந்த நிலையில் உடல் ஒன்று கிடந்ததே அவர்கள் அதிர்ச்சிக்குக் காரணம்.

நேஷனல் கெமிக்கல் சோதனைச்சாலையில் பி.எச்டி ஃபெலோஷிப்பில் இருந்த சுதர்ஷன் என்ற 30 வயது நபரின் உடல்தான் அது. புனேயின் சுஸ் என்ற கிராமத்தில் மலைசார்ந்த பகுதியில் அவரது உடல் மர்மமான முறையில் கொல்லப்பட்டு கிடந்தது. நடைப்பயிற்சி செய்தவர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். போலீசுக்குத் தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு போலீஸார் விரைந்தனர். அப்போது மாணவரின் தொண்டை அறுக்கப்பட்டிருப்பதையும் முகம் சிதைக்கப்பட்டிருப்பதையும் கண்டனர். அடையாளத்தை மறைக்க முகத்தை கல்லைக் கொண்டு சிதைத்துள்ளனர்.
ஆனால் சுதர்சனின் பாக்கெட்டில் அடையாள அட்டை இருந்ததையடுத்து எளிதாகப் போனது. உடலும் அரை நிர்வாண நிலையில் இருந்தது.

ரசாயனத்தில் முனைவர் பட்டம் பெற ஒன்றரையாண்டுகளுக்கு முன்பு நேஷனல் கெமிக்கல் சோதனைச்சாலையில் சுதர்சன் பதிவு செய்து கொண்டார். இவர் திருமணமாகாதவர் சுதர்வாதி பகுதியில் தனியாக வசித்து வந்துள்ளார்.
என்.சி.எல் சி.எஸ்.ஐ.ஆர் என்ற மதிப்பு மிக்க அமைப்புடன் இணைந்தது, இங்கு பி.எச்.டி படிப்பது அவ்வளவு எளிதல்ல. சர்வதேச அளவில் புகழ்பெற்ற அறிவியல் கழகமாகும் இது.

இந்நிலையில் மாணவர் கொலை செய்யப்பட்டிருப்பது போலீசாருக்கு பெரிய தலைவலியாகியுள்ளது, விசாரணையை எங்கிருந்து தொடங்குவது என்று தெரியாமல் குழம்பியுள்ளனர்.
கொலைக்கான காரணமும் தெரியவில்லை. சத்து ஷ்ரிங்கி காவல்நிலையக் குற்றப்பிரிவு ஆய்வாளர் தாதா கெய்க்வாட் இந்த கொலை விசாரணையை நடத்தி வருகிறார்.

இப்படிப்பட்ட மர்ம மரணம் புதிதல்ல. ஜூலை 2017-ல் இதே போல் 37 வயது நபர் ஒருவரின் உடல் புதுடெல்லியின் நரேலாவில் மர்மமான முறையில் கொல்லப்பட்டு கிடந்தது.

இந்தக் கொலையிலும் கொலையானவர் தொண்டை அறுக்கப்பட்டிருந்தது. முகம் சிதைக்கப்பட்டிருந்தது. கொலை சரி ஏன் அடையாளம் மறைக்கப்பட வேண்டும் என்ற கேள்வியும் இத்தகைய கொலைகளின் அதிகரிப்பு ஹோமிசைட் தொடர் கொலையாளியின் வேலையாக இருக்குமோ என்று பல கோணங்களிலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

புனே, மும்பை என்றில்லை, மகாராஷ்டிராவில் பொதுவாக சட்டம் ஒழுங்கு நிலமைகள் மோசமாகி வருவதாக சமூக ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!