நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

ஸ்வீட் லிஸ்டில் ட்ரெண்டிங்கே இளநீர் பாயாசம் தான்!

 சேமியா பாயாசம் செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வித்தியாசமான சூப்பரான இளநீர் பாயாசம்.

சுவையான தேங்காய் தண்ணீரை அப்படியே குடித்தாலே பாயாச சுவையில் இருக்கும்.

அதில் இப்படி பாயாசமே செய்து சாப்பிட்டால் நாவில் நீங்காத சுவையாக இருக்கும்.

ஜவ்வரிசி, பருப்பு, சேமியா பாயாசம் செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வித்தியாசமான சூப்பரான இளநீர் பாயாசம்.


தேவையான பொருட்கள் :


இளநீர் வழுக்கை – ஒரு கப் (பொடியாக நறுக்கியது)


மில்க்மெய்டு – மூன்று டீஸ்பூன்


சுண்ட காச்சிய பால் – ஒரு கப்


தேங்காய் பால் – ஒரு கப்


ஏலக்காய் தூள் – கால் டீஸ்பூன்


சர்க்கரை – ஒரு கப்


நெய் – மூன்று டீஸ்பூன்


முந்திரி – பத்து


திராட்சை – பத்து


சாரை பருப்பு – இரண்டு டீஸ்பூன்


செய்முறை:


ஒரு பாத்திரத்தில் நன்கு குழைத்த இளநீர் வழுக்கை, மில்க்மெய்டு, பால், தேங்காய் பால், ஏலக்காய் தூள், சர்க்கரை ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும்.பிறகு, கடாயில் நெய் விட்டு காய்ந்ததும் முந்திரி, திராட்சை, சாரை பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து அந்த பாத்திரத்தில் கொட்டி கிளறி பரிமாறவும்.


இன்னொரு முறை:


சிறிதளவு இளநீர் வழுக்கைத் துண்டுகளை தனியாக எடுத்து வைக்கவும்.

மீதமுள்ள இளநீர் வழுக்கைத் துண்டுகளுடன் சர்க்கரை சேர்த்து மிக்சியில் விழுதாக அரைத்தெடுக்கவும்.

அடி கனமான பாத்திரத்தில் நெய் விட்டு சூடாக்கி முந்திரி சேர்த்து வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.

அதே பாத்திரத்தில் பாலை ஊற்றி காய்ச்சவும். அதனுடன் அரைத்த தேங்காய் வழுக்கை விழுது, ஏலக்காய்த்தூள் சேர்த்து கொதிக்க விடவும்.

பிறகு தேங்காய்பால் சேர்த்து கலந்து இறக்கவும்.

மேலே இளநீர் வழுக்கைத் துண்டுகள், முந்திரி சேர்த்து அலங்கரித்து பருகலாம்.


Also read :  கோதுமை மாவில் செய்த வெஜிடபிள் சோமாஸ்.

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!