நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

அமெரிக்காவில் ஆறு கால்களுடன் பிறந்த நாய்க்குட்டி...வியக்கும் கால்நடை மருத்துவர்கள்!

 அமெரிக்காவின் ஓக்லஹோமா நகரில் ஆறு கால்களுடன் பிறந்த நாய்க்குட்டி ஒன்று உயிர்பிழைத்துள்ளது அதிசயம் என தெரிவித்துள்ளனர் அங்குள்ள கால்நடை மருத்துவர்கள். உலகிலேயே ஆறு கால்களுடன் பிறந்து, உயிருடன் இருப்பது இந்த நாய்க்குட்டியாக இருக்கலாம் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 


Spina bifida என்ற தண்டுவட பாதிப்புடன் இந்த நாய்க்குட்டி பிறந்திருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆறு கால்கள் மட்டுமல்லாது இந்த நாய்க்குட்டிக்கு இரண்டு வால்கள் மற்றும் இரண்டு இனப்பெருக்க உறுப்புகள் இருப்பதாகவும் மருத்துவர்கள் சொல்லியுள்ளனர். 


இந்த நாய்க்குட்டி தற்போது நலமுடன் இருப்பதாகவும் மருத்துவர்கள் பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.


ALSO READ :  மனித முகம் போன்ற தோற்றத்துடன் பிடிபட்ட வெள்ளைச் சுறா.

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!