நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

தொன்மையான தமிழ் மொழியை கற்க முடியாமல் போனது வேதனை - பிரதமர் மோடி வருத்தம்

நீர்நிலைகளைச் சுத்தம் செய்யவும், மழை நீரைச் சேகரிக்கவும் 100 நாட்கள் மக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய வேண்டும் என்றார்.
உலகின் தொன்மையான தமிழ் மொழியை என்னால் கற்க முடியாமல் போனது எனக்கு வருத்தமளிக்கிறது என்று மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றி உள்ளார்.

ஒவ்வொரு மாதத்திலும் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று, வானொலியில் மன் கி பாத் என்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசி வருகிறார். அந்த வகையில் இந்த மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று 74-வது 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மக்களுக்கு உரையாற்றினார்.

மே-ஜூன் மாதத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பருவமழை தொடங்கிவிடும். பருவமழை தொடங்குவதற்கு முன் நாட்டில் நீர்நிலைகளைச் சுத்தம் செய்யவும், மழை நீரைச் சேகரிக்கவும் 100 நாட்கள் மக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய வேண்டும் என்றார்.

மேலும் 'மன் கி பாத்' நிகழ்ச்சியில், பிரதமராகவும், முதல்வராகவும் நீண்டகாலமாக இருந்த காலத்தில் உங்களால் தவறவிட்ட விஷயங்கள் என்ன என்று என்னிடம் கேள்வி கேட்கப்பட்டது.

உலகின் பழமையான மொழியான தமிழ் மொழியை என்னால் கற்பதற்குப் போதுமான முயற்சிகளை எடுக்க முடியாமல் போனதை நினைத்து நான் வருத்தப்படுகிறேன். தமிழ் இலக்கியம் மிகவும் அழகானது'' என்றார்.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!