நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

இன்றும், நாளையும் தடுப்பூசி போடும் பணிகள் நடைபெறாது மத்திய அரசு அறிவிப்பு

இணையதள பராமரிப்பு பணிக்காக இன்றும், நாளையும் தடுப்பூசி போடும் பணிகள் நடைபெறாது மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த மாதம் 16-ந் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடந்து வருகிறது. இதில் முதற்கட்டமாக சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு போடப்பட்டு வருகிறது.

இதில் நேற்று காலை வரை 1.34 கோடிக்கு மேற்பட்ட டோஸ்கள் போடப்பட்டு உள்ள நிலையில், 2-ம் கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட நோயாளிகளுக்கு வருகிற 1-ந்தேதி முதல் தடுப்பூசி போடப்படுகிறது.

கொரோனா தடுப்பூசி பெறும் பயனாளர்கள் ‘கோ-வின்’ இணையதளத்தில் பதிவு செய்துதான் தடுப்பூசி போட்டு வருகின்றனர். இந்த இணையதளத்தில் பராமரிப்பு பணிகள் நடக்கிறது. அதாவது இந்த இணையதளம் ‘கோ-வின் 1.0’-ல் இருந்து ‘கோ-வின் 2.0’ ஆக மேம்படுத்தப்படுகிறது.

எனவே நாடு முழுவதும் இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) தடுப்பூசி போடும் பணிகள் நடைபெறாது.

இந்த தகவலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டு உள்ளது.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!