நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

சட்டசபை தேர்தல்: தமிழகம், கேரளா, புதுவை ஒரே கட்ட தேர்தல்; வேட்புமனு தாக்கல் உள்ளிட்ட முழு விவரம்....

தமிழகம், புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட 3 மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும். அசாம் மாநிலத்தில் 3 கட்டமாக தேர்தல் நடைபெறும், மேற்கு வங்கத்தில் 8 கட்டமாக தேர்தல் நடைபெறும் .
புதுடெல்லி

டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தேர்தல் அட்டவணையை வெளியிட்டார். டெல்லியில் நிருபர்களை சந்தித்து  பேட்டி அளித்தார்  அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

பண்டிகைகளை கருத்தில் கொண்டு தேர்தல் தேதிகள் இறுதி செய்யப்பட்டுள்ளது; மாநிலத்தில் நடைபெறும் பள்ளி மற்றும் கல்லூரி தேர்வுகளும் கவனத்தில் கொள்ளப்பட்டன; அனைத்து வாக்கு சாவடிகளும் சானிட்டைசர், குடிநீர் உள்ளிட்டவை இருப்பது உறுதி செய்யப்படும்.

அசாம் மாநிலத்தில் உள்ள 126 தொகுதிகளுக்கு 3 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறும். மார்ச் 27-ம் தேதி முதல் கட்டத் தேர்தல். ஏப்ரல் 1-ம் தேதி 2-ம் கட்டத் தேர்தல். 6-ம் தேதி 3-ம் கட்டத் தேர்தல்.

முதல் கட்ட வாக்குப்பதிவு: மார்ச் 27ம் தேதி.

2-ம் கட்ட வாக்குப்பதிவு: ஏப்ரல் 1-ம் தேதி.

3-ம் கட்ட வாக்குப்பதிவு: ஏப்ரல் 6-ம் தேதி.

வாக்கு எண்ணிக்கை மே 2-ம் தேதி நடைபெற உள்ளது.

மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற உள்ளது.

முதல் கட்டத் தேர்தல் மார்ச் 27-ம் தேதியும், 2-வது கட்டம் ஏப்ரல் 1-ம் தேதியும் நடைபெற உள்ளது. 3-வது கட்டம் ஏப்ரல் 6-ம் தேதியும், 4-வது கட்டம் ஏப்ரல் 10-ம் தேதியும், 5-வது கட்டம் ஏப்ரல் 17-ம் தேதியும் நடைபெறும். 6-வது கட்டத் தேர்தல் ஏப்ரல் 22-ம் தேதியும், 7-ம் கட்டத் தேர்தல் தேதி ஏப்ரல் 26-ம் தேதியும், 8-வது மற்றும் இறுதிக்கட்டத் தேர்தல் ஏப்ரல் 29-ம் தேதியும் நடைபெற உள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறும். 

வேட்புமனு தாக்கல்: 12-03-21

வேட்புமனு தாக்கல் நிறைவு : 19-03-21

வேட்புமனு பரிசீலனை: 20-03-21

வேட்புமனுவை திருமப பெற கடைசி நாள் : 22-03-21

தேர்தல் நாள் : 06-04-21

வாக்கு எண்ணிக்கை : 02-05-21

கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தல்:

தேர்தல் தேதி: ஏப்ரல்-6-ம் தேதி

வேட்பு மனு தாக்கல் ஆரம்பம் தேதி: மார்ச் 12-ம் தேதி

வேட்பு மனு தாக்கல் கடைசி தேதி: மார்ச் 19-ம் தேதி

வேட்புமனு பரிசீலனை தேதி: மார்ச் 20-ம் தேதி

வேட்புமனு திரும்பப்பெறும் தேதி: மார்ச் 22-ம் தேதி

வாக்கு எண்ணிக்கை: மே-2-ம் தேதி

 

கேரளத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும்.

தேர்தல் தேதி: ஏப்ரல்-6-ம் தேதி

வேட்பு மனு தாக்கல் ஆரம்பம் தேதி: மார்ச் 12-ம் தேதி

வேட்பு மனு தாக்கல் கடைசி தேதி: மார்ச் 19-ம் தேதி

வேட்புமனு பரிசீலனை தேதி: மார்ச் 20-ம் தேதி

வேட்புமனு திரும்பப்பெறும் தேதி: மார்ச் 22-ம் தேதி

வாக்கு எண்ணிக்கை: மே-2-ம் தேதி

5 மாநில தேர்தலுக்கான முடிவுகள் மே 2ஆம் தேதி வெளியிடப்படும்.

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!