நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

துபாயில் கொள்ளையனை சமார்த்தியமாக பிடித்த கேரள இளைஞர் - வைரல் வீடியோ

கோழிக்கோட்டைச் சேர்ந்த 40 வயதான ஜாஃபர் பராபுராத் என்பவர், டீராவின் பானி யாஸில் உள்ள தனது மாமாவின் உணவு விடுதியில் இருந்த போது நடந்த இநத சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
துபாயில் வசித்து வரும் கேரள மனிதர் ஒருவர், ரூ.80 லட்சம் ரொக்க பணத்துடன் ஓடிவந்த திருடனை தனது காலால் தட்டிவிட்டதால் ஒரு கொள்ளை சம்பவம் முறியடிக்கப்பட்டது. கோழிக்கோட்டைச் சேர்ந்த 40 வயதான ஜாஃபர் பராபுராத் என்பவர், டீராவின் பானி யாஸில் உள்ள தனது மாமாவின் உணவு விடுதியில் இருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது.

அதில் ஒரு இளைஞர் கையில் கொஞ்சம் பணத்துடன் தப்பி ஓடி வருவதை ஜாஃபர் முன்னதாகவே கவனித்துள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி உள்ளது. அந்த வீடியோவில், ஜாஃபர் தனது மாமா கடைக்கு முன்பாக நின்று கொண்டிருக்கிறார். அப்போது தூரத்தில் பணத்துடன் தப்பி ஓடி வரும் ஒரு திருடனை சில நபர்கள் துரத்தி வருவதை அவர் கவனித்தார். அப்போது அந்த திருடன் ஜாஃபரை கடந்து செல்ல முயன்றர். ஆனால் ஜாஃபர் சற்றும் யோசிக்காமல் தனது காலை நீட்டி திருடனின் கால்களை தட்டி விட்டுள்ளார். வேகமாக ஓடிவந்த திருடன் ஜாஃபர் கால் தடுப்பால் தனது கால் இடறி கீழே விழுந்துள்ளான்.

இதன் காரணமாக திருடனை துரத்தி வந்த நபர்கள் பணத்துடன் அவனை கையும் களவுமாக பிடித்துள்ளனர். கடந்த ஏப்ரல் 14ம் தேதி பனியா ஸ்கொயர் லேண்ட்மார்க் ஹோட்டலில் இந்த சம்பவம் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. யாரும் யோசிக்காத வகையில் வேகமாக ஓடி வரும் திருடனை தட்டி விட வேண்டும் என்ற ஜாஃபரின் யோசனையை நெட்டிசன்கள் பராட்டி வருகின்றனர். மேலும் அவர் ஒரு கால்பந்து வீரர் போல சாதுர்யமாக பந்தை தடுப்பது போல திருடனை தடுத்துள்ளதாக பலர் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.



இது குறித்து கலீஜ் டைம்ஸிடம் பேசியபோது ஜாஃபர் கூறியதாவது, “திருடன் சில நபர்களால் துரத்தப்பட்டான். அப்போது நான் அவனை பிடிக்க விரும்பினேன். ஆனால் அந்த திருடன் மிக வேகமாக ஓடுவதை உணர்ந்தேன். எனவே, நான் என் காலை நீட்டி அவன் வேகத்தை தடுத்தேன். எனது சகோதரர் நஜீப்பும் திருடன் ஓடி வந்த பாதையில் ஒரு நாற்காலியை வீசினார். இந்த இரண்டு காரணிகளின் கலவையால் திருடன் கீழே விழுந்தான், ”என்று தெரிவித்துள்ளார்.

சரியான நேரத்தில் தலையிட்டதைத் தொடர்ந்து, திருடனை துரத்தி வந்த கும்பல் அவனை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். திருடப்பட்ட தொகையும், உரிமையாளரிடம் திருப்பித் தரப்பட்டது. கடந்த 20 ஆண்டுகளாக ஜாஃபர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசித்து வருவதாகவும், ஆனால் கொரோனா தொற்றுநோயால் வேலை இழந்ததாகவும் கூறியுள்ளார். இப்போது அவர் ஒரு டிரைவராக முயற்சிக்க மீண்டும் துபாய்க்கு வந்துள்ளதாக கூறினார்.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!