நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளை பெற்று சாதனை படைத்த பெண்மணி

 ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளை ஈன்றெடுத்துள்ளார் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பெண்மணி ஒருவர்.


தென் ஆப்பிரிக்கா கவுடெங் மாகாணத்தைச் சேர்ந்தவர் டெபோஹோ சோடெட்சி. இவரது மனைவி கோசியாம் தாமரா சித்தோல் (37). இவர் தற்போது 10 குழந்தைகளை ஒரே பிரசவத்தில் பெற்றெடுத்து  சாதனைப் படைத்துள்ளார். இவருக்கு ஏற்கெனவே 6 வயதில் இரட்டைக் குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.





சிசேரியன் முறையில் 7 ஆண் குழந்தைகள் 3 பெண் குழந்தைகளை பெற்ற கோசியாம் தாமரா, முன்னதாக வட அமெரிக்காவின் மொராக்கோ நகரைச் சேர்ந்த மாலியன் ஹலிமா சிஸ்ஸே 9 குழந்தைகளை பெற்று படைத்திருந்த  சாதனையை முறியடித்துள்ளார்.

இது குறித்து டெபோஹோ சோடெட்சி கூறும் போது, “ 7 ஆண் குழந்தைகள், 3 பெண் குழந்தைகள் பிறந்துள்ளனர். நான் மிகவும் எமோஷனலாக உள்ளேன். சந்தோஷமாக உள்ளது.” என்றார்.


also read : ரூ.103-க்கு இரண்டு பெட்ரூம் கொண்ட வீடு ஏலம் - எங்கு தெரியுமா?

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!