நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

வெறும் 12 ரூபாய்க்கு வீடுகளை விற்பனை செய்யும் முக்கிய நகரம்

குரோசியாவில் உள்ள லெக்ராட்டில் உள்ள வீடுகள், சில நிபந்தனைகளுடன் 12 ரூபாய்க்கு விற்பனை செய்ய இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குரோசியாவின் லெக்ராட் நகரில் இருந்து ஏராளமான மக்கள் வேறு இடத்திற்கு குடிபெயர்ந்து விட்டதால், ஆள் இல்லாமல் வீடுகள் காலியாக உள்ளன. மீண்டும் நகரத்திற்கு மக்களை கொண்டு வர, லெக்ராட் நகர நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதனால் ஒரு குனாவிற்கு (11 ரூபாய் 83 பைசா) வீடு வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது. ஆனால் சில நிபந்தனைகளையும் விதித்துள்ளது.

வட குரோசியாவில் அமைந்துள்ள லாக்ராட் நகரம் 62.62 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை கொண்டது. குரோசியாவின் 2-வது மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட நகராக இருந்தது. 15-ம் நூற்றாண்டில் ஆஸ்ட்ரோ-ஹங்கேரியன் ஆட்சி நடைபெறும் வரை மக்கள் இருந்துள்ளனர். அப்போது முக்கிய நகராக விளங்கியுள்ளது.

ஆட்சி முறியடிக்கப்பட்ட பின் மக்கள் அருகில் உள்ள இடத்திற்கு பல்வேறு வசதிகளை நோக்கி இடம்பெயர்ந்துள்ளனர். இதனால் 19-ம் நூற்றாண்டில் மக்கள் தொகை மிகவும் குறைந்துள்ளது. தற்போது 2241 பேர் வசித்து வருகிறார்.

இதனால் இந்த திட்டத்தை அறிவித்துள்ளது. தனிநபர் அல்லது ஜோடிகள் வீடுகளை வாங்கலாம். அவர்கள் 40 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். நன்றாக பணம் செலவழிப்பவராக இருக்க வேண்டும். குறைந்த பட்சம் 15 ஆண்டுகளாவது லெக்ராட்டில் வசிக்க வேண்டும்.

குரோஷியாவில் குடிவரவு சிக்கலானது, ஆனால் இந்த நகரம் புதியவர்களுக்கு உணவு உற்பத்தி, மர பதப்படுத்துதல் மற்றும் உலோக பதப்படுத்தும் தொழில்களில் வேலை வாய்ப்புகளை வழங்கும்.

‘‘குத்தகைதாரராக இருப்பதை விட உங்கள் சொந்த இடத்தில் வாழ்வது மிகவும் இனிமையானது. இங்கு 15 ஆண்டுகள் தங்கியிருப்பது எங்களுக்கு ஒரு பிரச்சனையல்ல’’ என அந்நகரின் மேயர் தெரிவித்துள்ளார்.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!