நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

3 வருடம், 3800 கி.மீ தூரம்... கடலில் மிதந்து வந்த பிளாஸ்டிக் பாட்டிலில் இருந்த ’மெசேஜ்’

 அட்லாண்டிக் பெருங்கடலில் 3800 கிலோ மீட்டர் தூரம் கடலில் மிதந்து வந்த பிளாஸ்டிக் பாட்டிலில் இருந்த மெசேஜை கண்டறிந்த 17 வயது போர்ச்சுகல் சிறுவன் ஒருவன். அந்த சிறுவன் ஆழ்கடலில் மீன் வேட்டை (Spearfishing) ஆடிய போது பிளாஸ்டிக் பாட்டிலை கண்டெடுத்துள்ளான். அந்த சிறுவனின் பெயர் கிறிஸ்டியன் சான்டோஸ் என தெரியவந்துள்ளது. 


அந்த பிளாஸ்டிக் பாட்டிலை கடந்த 2018இல் அமெரிக்காவின் ரோட் தீவு பகுதியில் 13 வயது சிறுவன் ஒருவன் கடலில் தூக்கி வீசியுள்ளான். அதில் அவன் ஒரு துண்டுச் சீட்டில் செய்தியையும் எழுதி வைத்துள்ளான். அந்த பாட்டிலைதான் கிறிஸ்டியன் கண்டெடுத்துள்ளேன். 

“இது நன்றியை வெளிப்படுத்தும் நோக்கில் எழுதியது. எனக்கு 13 வயது ஆகிறது. நான் வெர்மோன்ட் பகுதியை சேர்ந்தவன். ரோட் தீவில் உள்ள எனது குடும்பத்தை பார்க்க வந்துள்ளேன்” என சொல்லில் ஒரு மெயில் ஐடியையும் எழுதி உள்ளான். சம்மந்தப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு கிறிஸ்டியனின் அம்மா மெயில் செய்துள்ளார். இருப்பினும் பதில் ஏதும் வரவில்லையாம். இந்த துண்டு சீட்டு எழுதியவரின் கண்ணில் படும் வரை பகிருமாறு அவர் வேண்டுகோள் ஒன்றையும் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.


also read:

உலகின் மூன்றாவது பெரிய வைரம் போட்ஸ்வானாவில் கண்டுபிடிப்பு

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!