நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

பசியின்மையும்... மனக்கவலையும்...

நன்றாக ரசித்து ருசித்து சாப்பிடுபவர்கள் கூட திடீரென்று பசியின்மை பிரச்சினை யால் அவதிப்படுவார்கள். வழக்கமாக சாப்பிடும் நேரத்தை கடந்த பின்னரும் உணவு உண்பதற்கு விருப்பம் இல்லாமலும் இருப்பார்கள். எப்போதும் விரும்பி சாப்பிடும் உணவைக் கூட சாப்பிடுவதற்கு மனம் விரும்பாது.
இத்தகைய பசியின்மைக்கு மனக்கவலையும் ஒருவகையில் காரணமாக இருக்கலாம். ஏதாவதொரு விஷயத்தை பற்றி சிந்தித்து கவலைப்படும்போது மன அழுத்தத்தை தோன்றுவிக்கும் ஹார்மோன்களின் சுரப்பு அதிகரிக்கும். அது செரிமான செயல்பாடுகளை குறைக்கும். பசியின்மையையும் ஏற்படுத்தும். மனச்சோர்வும் பசியின்மையை தூண்டிவிடும்.

சோர்வாக இருக்கும்போது மூளையின் வழக்கமான செயல்பாடுகள் பாதிப்புக்குள்ளாகும். சுறுசுறுப்புத்தன்மை குறைந்துவிடும். அதுவும் பசி உணர்வை கட்டுப்படுத்திவிடும். ஒருவர் மன அழுத்தத்தில் இருந்தாலும் அதுவும் சாப்பிடும் முறையை பாதிக்கும். மன அழுத்தம் அதிகரிக்கும்போது அஜீரணம், குமட்டல் போன்ற பிரச்சினைகள் எட்டிப்பார்க்கும். அதுவும் உணவு மீதான ஆசையை குறைத்து விடும். 

சாப்பிடும் உணவின் அளவு குறைந்துபோகும். வயதுக்கும், உணவு பழக்கத்திற்கும் கூட தொடர்பு இருக்கிறது. வயதானவர்களில் 15 சதவீதம் முதல் 30 சதவீதம் பேர் வரை பசியின்மையால் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. பசியின்மைக்கு என்ன காரணம் என்பதை கண்டறிந்து அதற்கான சிகிச்சையை மேற்கொள்வது மிக அவசியமானதாகும். இல்லா விட்டால் உடல் நலம் கடுமையாக பாதிக்கப்பட்டுவிடும்.



Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

விண்வெளியிலும் துணி துவைக்கலாம்! விண்வெளி நிலையத்திற்கு சலவை சோப்பு அனுப்பிய SpaceX......

Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!