நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

அதிகாலையில் சீக்கிரம் எழ முடியாமல் அவஸ்தைப்படுகிறீர்களா? இதை கடைப்பிடித்தால் போதும்!

பெரும்பாலான மக்கள் காலையில் தாமதமாகவே எழுகிறார்கள். இதனால், பலரும் அலுவலகத்திற்கு அவசர அவசரமாக கிளம்ப வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

காலையில் தாமதமாக எழுவதால் காலை உணவை சிலர் தவிர்த்து விடுகின்றனர். அதுமட்டுமல்லாமல், நேரமாகி விட்டது என்று கண் மூடித்தனமாக பைக்கை ஓட்டிக் கொண்டு சென்று விபத்துக்களை சந்திக்கிறார்கள்.

இந்தப் பிரச்சினையை தவிர்க்க பலரும் காலையில் சீக்கிரமாக எழ முயற்சி செய்தும், அவர்களால் எழமுடியாமல் போய்விடுகிறது.

இதிலிருந்து விடுபட சில வழிமுறைகளை பின்பற்றினாலே போதும், நிச்சய்ம் அதிகாலை சீக்கிரம் எழுந்துவிடலாம்.

அலுவலக வேலை

காலையில் சீக்கிரம் எழ வேண்டும் என்றால், முதலில் அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு மாலையில் சீக்கிரம் வந்துவிட வேண்டும். மாலையில் வீட்டிற்கு சென்ற பிறகு, குடும்பத்தினருடன் சந்தோஷமாக நேரத்தை செலவிட்டால், மனம் மட்டுமின்றி, உடலும் ரிலாக்ஸாகும்.


இரவு உணவு

இரவில் தாமதமாக, அதுவும் ஆரோக்கியமற்ற உணவுகள் உட்கொள்வதைத் தவிர்த்து விட வேண்டும். முடிந்தவரை அசைவ உணவுகள் உண்பதை தவிர்த்து விடுவது நல்லது. இப்படி இரவில் அசைவ உணவு சாப்பிட்டால், செரிமானம் சீராக நடைபெறாமல் தூக்கம் கெட்டுபோகும்.

உடற்பயிற்சி

அலுவலகம் முடிந்து வீட்டிற்கு வந்த பின், மனதை அமைதிப்படுத்த வெளியே காற்றோட்டமாக சிறிது தூரம் நடைப் பயிற்சியை மேற்கொள்ளலாம். இதனால் இரவில் நிச்சயம் நல்ல தூக்கம் பெற்று, அதிகாலையில் சீக்கிரமாக எழுந்துவிட முடியும்.

குளியல்

இரவு தூங்க செல்வதற்கு முன் குளித்தால், இரவில் நல்ல ஆழ்ந்த நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம். அதிலும் இரவில் சீக்கிரம் குளித்து விட்டு தூங்கினால், காலையில் அலாரம் அடிப்பதற்கு முன்பே எழ முடியும்.

தூக்கம்

இரவில் சீக்கிரம் தூங்க சென்றால், 7 மணி நேரத்திற்கு பின் தானாக விழித்து விடுவோம். ஏனெனில் சில நேரங்களில் உடலும் அதிகமான தூக்கத்தை விரும்பாது. ஆனால், பலர் இரவில் டிவி பார்க்கும் பழக்கத்தை மட்டும் நிறுத்த முடியவில்லை. இதன் காரணமாகவே அதிகாலையில் சீக்கிரம் எழ முடியாமல் போய்விடுகிறது.


Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

விண்வெளியிலும் துணி துவைக்கலாம்! விண்வெளி நிலையத்திற்கு சலவை சோப்பு அனுப்பிய SpaceX......

Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!