நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

செவ்வாய் கோளில் இருந்து சிக்னல்களை பெற சீனா உருவாக்கிய பிரம்மாண்ட ஆண்டெனா.

செவ்வாய் கோளில் இருந்து சிக்னல்களை பெறுவதற்காக, 10 கால்பந்து மைதானங்கள் அளவுக்கு பெரிய, 2700 டன் எடை கொண்ட, ராட்சத ஆண்டெனாவை சீனா உருவாக்கியுள்ளது.
செவ்வாய் கோளுக்கு ஆர்பிட்டர், லேண்டர், ரோவர் ஆகிய மூன்றையும் தியான்வென்-1 (Tianwen-1) என்ற திட்டத்தின் கீழ் சீனா அனுப்பியுள்ளது. வரும் 10ஆம் தேதி வாக்கில் செவ்வாயின் சுற்றுவட்டப்பாதையிவ் தியான்வென்-1 நுழைகிறது.

அதன் பிறகு லேண்டர் மற்றும் ரோவரை செவ்வாயின் தரையில் இறக்க சீனா திட்டமிட்டுள்ளது. ஒரே பயணத்தில் ஆர்பிட்டர், லேண்டர், ரோவர் மூன்றையும் செவ்வாயில் தரையிறக்கிய முதல் நாடு என்ற சாதனை முயற்சியாக தியான்வென்-1 திட்டத்தை சீனா முன்னெடுத்துள்ளது.

சுமார் 40 கோடி கிலோமீட்டர்களுக்கு அப்பால் இருந்து இந்த 3 கருவிகளும் செவ்வாயில் இருந்து அனுப்பும் சிக்னல்களை பெறுவதற்காக, பூமியில் பிரம்மாண்ட ஆண்டெனாவையும் தயார்செய்துள்ளது சீனா.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!