நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

ஆஸ்திரேலியாவில் கடலுக்கு அடியில் உருவான பயங்கர நிலநடுக்கம்; கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை..!

ஆஸ்திரேலியாவில் கடலுக்கு அடியில் உருவான பயங்கர நிலநடுக்கம்; கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை..!

ஆஸ்திரேலியா அருகே தெற்கு பசிபிக் கடலுக்கு அடியில் பயங்கர நிலநடுக்கம் நேரிட்டது. நியுசிலாந்து , ஆஸ்திரேலியா மற்றும் அந்நாடுகளைச் சுற்றியுள்ள குட்டித் தீவுகளை இந்த பயங்கர நிலநடுக்கம் அதிர வைத்துள்ளது.
ரிக்டர் அளவுகோலில் 7 புள்ளி 7 ஆக இந்த நிலநடுக்கம் பதிவானதாக ஆஸ்திரேலிய புவி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் பெரிதாக இருந்ததால் முன்னெச்சரிக்கையாக கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

பிஜி, நியுசிலாந்து உள்ளிட்ட கடல் பகுதிகளில் அலைகள் அதிக அளவில் இருந்ததாகவும் சுமார் மூன்றரை அடி உயரத்துக்கு சுனாமி அலைகள் எழுந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடலுக்கு அடியில் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் என்பதால் நிலப்பரப்பில் பெரிய சேதம் ஏற்பட வாய்ப்பில்லை என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!