நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

20 நாட்களாக மழைநீர் குழாயில் சிக்கி தவித்த பெண் நிர்வாண நிலையில் மீட்பு

அமெரிக்காவின் புளோரிடாவில் 20 நாட்களாக மழைநீர் குழாயில் தவித்த பெண் நிர்வாண நிலையில் மீட்பு.
புளோரிடா

அமெரிக்காவின் புளோரிடாவில் மழைநீர் குழாய்க்குள் 20 நாட்களாக சிக்கியிருந்த ஒரு பெண், உயிருடன் மீட்கப்பட்டுள்ள அதிசய சம்பவம்  நிகழ்ந்துள்ளது.கடந்த செவ்வாயன்று சாலையோரமாக அமைந்திருந்த மழைநீர் வடிகுழாயிலிருந்து யாரோ உதவி கோரி சத்தமிடுவதை கவனித்த அந்த வழியாக சென்ற ஒருவர், போலீசாருக்கு தகவல் கொடுந்தார். 

தீயணைப்பு வீரர்களுடன் விரைந்துவந்த போலீசார், அந்த மழைநீர் வடிகுழாய்க்குள் பெண் ஒருவர் சிக்கியிருந்ததைக் கண்டு, அவரை மீட்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.வெகு நேர போராட்டத்திற்குப் பின், நிர்வாண நிலையிலிருந்த பெண்ணை அவர்கள் பத்திரமாக மீட்டனர்.

அவரை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அவர் கூறிய தகவல்களைக் கேட்டு தீயணைப்பு வீரர்களே ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர். 

அந்த பெண்ணின் பெயர் லிண்ட்சே கென்னடி (43). மார்ச் 3ஆம் தேதி கால்வாய் ஒன்றில் நீந்தச் சென்று உள்ளார்.  கால்வாய்க்குள் ஒரு சுரங்கப்பாதை போன்ற அமைப்பைக் கண்டு அதைப் பார்க்கச் சென்றுள்ளார். ஆனால், அங்கிருந்து திரும்ப வர அவருக்கு வழி தெரியவில்லை.

அந்த சுரங்கப்பாதை வழியாக பாதாள சாக்கடை ஒன்றிற்குள் சென்ற லிண்ட்சே அங்கு சுமார் 20 நாட்கள் செலவிட்டுள்ளார். கடைசியாக, மழைநீர் வடிகுழாய் ஒன்றிலிருந்து வெளிச்சம் வருவதைக் கண்ட லிண்ட்சே, அங்கிருந்து சத்தம்போட்டால்  யாருக்காவது கேட்கலாம் என்று எண்ணி, அந்த மழைநீர் வடிகுழாய்க்குள் சென்று அமர்ந்திருக்கிறார்.

அவர் நம்பியது போலவே, அந்தப் பக்கமாக யாரோ வருவதைக் கண்ட லிண்ட்சே சத்தமிட, அதைக் கேட்ட ஒருவர் போலீசாருக்கு தகவலளிக்க, தீயணைப்பு வீரர்கள் அவரை மீட்டு உள்ளனர். பொதுவாக மழைநீர் வடிகுழாய்க்குள்ளிருந்து பூனை, நாய் போன்ற விலங்குகளைத்தான் மீட்பதுண்டு என்று கூறும் தீயணைப்பு வீரர்கள், லிண்ட்சே  அந்த அபாயகராமான சூழலில் எப்படி 20 நாட்கள் செலவிட்டார் என ஆச்சரியப்படுகிறார்கள். லிண்ட்சேவுக்கு சிறிது மன நல பிரச்சினையும் உள்ளது என அவரது தாயார் தெரிவித்துள்ளார்.


Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

விண்வெளியிலும் துணி துவைக்கலாம்! விண்வெளி நிலையத்திற்கு சலவை சோப்பு அனுப்பிய SpaceX......

Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!