நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

ஆசையாய் வாங்கிய ஆடையில் தேநீர் கறையா? கவலைய விடுங்க சூப்பர் மேஜிக் இருக்கு..

சில நேரங்களில் தேநீர் அல்லது காபி கைதவறி ஆடையில் பட்டுவிட்டால் உங்களுக்கு பிடித்த ஆடையை நீங்கள் இழக்கக்கூடும். ஒரு சில வீட்டு குறிப்புகளை பின்பற்றினால் இக்கறைகளில் இருந்து எளிதில் விடுபடலாம்.
ஆசையாய் வாங்கிய ஆடையில் தேநீர் கறை


சில நேரங்களில் தேநீர் அல்லது காபி கைதவறி ஆடையில் பட்டுவிட்டால் உங்களுக்கு பிடித்த ஆடையை நீங்கள் இழக்கக்கூடும். ஏனெனில் இந்த கறைகள் விரைவில் மறையாது. ஒரு சில வீட்டு குறிப்புகளை பின்பற்றினால் இக்கறைகளில் இருந்து எளிதில் விடுபடலாம். அவை என்னென்ன என்பது குறித்து இங்கு தெரிந்துகொள்வோம்.

ஒரு கோப்பையில் வெதுவெதுப்பான நீரை எடுத்து கறை மீது நேரடியாக ஊற்றவும். தொடர்ந்து 10-15 விநாடிகளுக்கு மெதுவாக ஊற்றிக் கொண்டே இருங்கள், பின்னர் சலவை சோப்பு கொண்டு துவையுங்கள். கறை மங்கிவிடும் வரை சோப்பு தேய்க்கவும். கடைசியாக, சாதாரண தண்ணீரில் அலசுங்கள், கறை மறைந்துவிடும்.

வினிகர் உடல் எடையை குறைக்க மட்டுமின்றி உங்கள் துணிகளில் படிந்திருக்கும் கறைகளை அகற்றவும் உதவுகிறது. ஒரு ஸ்ப்ரே பாட்டில் ½ கப் வினிகர் மற்றும் ½ கப் தண்ணீர் எடுத்து நன்கு கலக்கவும். பின்னர் இந்த கலவையை கறை மீது நேரடியாக தெளிக்கவும். 5-7 நிமிடங்கள் அப்படியே வைத்துவிட்டு மீண்டும் தெளிக்கவும். இப்போது உங்கள் துணியை தண்ணீரில் நனைத்து, நன்கு தேய்த்து அலசவும். தேநீர் அல்லது காபி கறைகள் சுத்தமாக நீங்கி விடுவதை நீங்கள் காண்பீர்கள்.

பேக்கிங் சோடா ஒரு இயற்கை சுத்திகரிப்பானாக செயல்படுகிறது. உண்மையில், பிடிவாதமான தேநீர் கறையில் இருந்து விடுபட பேக்கிங் சோடாவை பயன்படுத்தலாம். இருப்பினும், மென்மையான துணிகளில் இதை முயற்சிக்க வேண்டாம். இதற்கு முதலில் அரை வாளி தண்ணீரை மிதமாக சூடு செய்து கொள்ளவும். இந்த தண்ணீரில் உங்கள் கறை துணியை 5-10 நிமிடங்கள் ஊற வைக்கவும். இதில் 1 தேக்கரண்டி பேக்கிங் சோடாவை நேரடியாக கறை மீது போடவும். கறையை அகற்ற துணியை நன்கு இரண்டு கைகளால் தேய்க்கவும். பின்னர் அந்த துணியை சாதாரண தண்ணீரில் அலசி விடுங்கள் கறை மறைந்துவிடும்.



Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

விண்வெளியிலும் துணி துவைக்கலாம்! விண்வெளி நிலையத்திற்கு சலவை சோப்பு அனுப்பிய SpaceX......

Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!