நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

ரேஷன் கார்டு வாங்கணுமா? இதெல்லாம் கண்டிப்பா வேணும்!!

புதிதாக ரேஷன் கார்டு வாங்குவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று இங்கே தெரிந்துகொள்ளலாம்.

இந்தியக் குடிமக்களுக்கு ரேஷன் கார்டு மிக முக்கியமான ஆவணமாக உள்ளது. இதன் மூலமாக உணவுப் பொருட்களை வாங்க முடியும் என்பதோடு, ரேஷன் கார்டு வைத்திருப்பவரின் குடும்பத்தைப் பற்றிய முழுமையான தகவல்களைத் தருகிறது. ரேஷன் கார்டு கையில் இருந்தால் மலிவு விலையிலும், இலவசமாகவும் அரசிடமிருந்து உணவுப் பொருட்களை வாங்கலாம். கொரோனா போன்ற நெருக்கடியான சமயங்களில் அரசு தரப்பிலிருந்து ரேஷன் கார்டுகள் மூலமாகப் பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டன. எனவே இது மிக முக்கியமான ஒன்றாகும்.

புதிதாக ரேஷன் கார்டு வாங்குவது என்பது சற்று கடினமான ஒன்றுதான். அதற்கு நீண்ட காலமும் எடுக்கிறது. ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பதற்கு முன்னர் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள் இதோ...

ரேஷன் கார்டு வாங்கும் நபர் எந்த மாநிலமோ அந்த மாநிலத்தின் அதிகாரப்பூர்வ வலைப்பக்கத்தில் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும். தமிழகத்தில் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க https://tnpds.gov.in/ என்ற வலைப்பக்கத்தைப் பார்வையிட வேண்டும்.

ரேஷன் கார்டுகளில் இரண்டு வகைகள் உள்ளன. வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் மக்களுக்காக ஒரு தனி ரேஷன் கார்டு வழங்கப்படுகிறது. வறுமைக் கோட்டுக்கு மேல் வசிப்பவர்களுக்குத் தனியாக ஒரு ரேஷன் கார்டு. எனவே இதில் ஏதேனும் ஒரு பிரிவில் மட்டுமே ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பிக்கும் போது கேட்கப்படும் தகவல்களைக் மிகவும் கவனமுடன் சரியாகப் பூர்த்தி செய்ய வேண்டும். ரேஷன் கார்டு ஒரு முக்கியமான ஆவணம் என்பதால் அதை நிரப்பும்போது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்தியாவில் வாழும் ஒவ்வொரு நபருக்கும் ரேஷன் கார்டு கிடைக்கும். ஆனால் அவர் இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும்.

ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை, பணியாளர் அடையாள அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவணங்கள் தேவைப்படும்.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!