நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

உலகிலேயே விலை உயர்ந்த மீன் இது தான்… ரூ. 72 லட்சத்திற்கு ஏலம் போன க்ரோக்கர்

சில மீன்கள் அதன் ருசியான இறைச்சிக்காக அதிக விலை கொடுத்து வாங்கிச் செல்வார்கள். ஆனால் இந்த மீனை அதன் எலும்புகள் மற்றும் தோலுக்காகவும் மக்கள் வாங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
48-kilo Atlantic croaker sold for Rs 72 lakh
பாகிஸ்தான் பலுசிஸ்தான் மாகாணத்தில் ஞாயிற்றுக் கிழமை அன்று மீன் பிடிக்க சென்ற சாஜித் ஹஜி அபபாக்கருக்கு அடித்தது மிகப்பெரிய லாட்டரி டிக்கெட். க்வாதர் கடலில் மீன் பிடிக்க சென்ற அவருக்கு 48 கிலோ எடை கொண்ட அட்லாண்டிக் க்ரோக்கெர் மீன் வலையில் சிக்கியுள்ளது.

சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இதன் தோல் மற்றும் எலும்புகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இதன் மருத்துவ காரணங்களுக்காக அதிக விலை கொடுத்து வாங்குவோரும் உண்டு. பொதுவாக 1.2 கிலோ எடையே கொண்டிருக்கும் இந்த மீன்கள் அதிக அளவில் இந்த காலக்கட்டத்தில் க்வாதர் கடலில் அதிகம் கிடைக்கும். கடந்தவாரம் ஒருவர் ரூ. 7.8 லட்சத்திற்கு மீனை விற்ற நிலையில் சாஜித் ஹஜி இந்த மீன்களை ரூ. 72 லட்சத்திற்கு விற்றுள்ளார்.

எப்போதும் இல்லாத உயர் விலையாக ரூ. 86.4 லட்சத்திறு ஏலம் நிர்ணயிக்கப்பட்டது. இருப்பினும் பாரம்பரிய சலுகை மற்றும் சிறப்பு கழிவுகள் எல்லாம் போக மீன்களை ரூ. 72 லட்சத்திற்கு அவர் விற்றதாக கூறியுள்ளார்.

சில மீன்கள் அதன் ருசியான இறைச்சிக்காக அதிக விலை கொடுத்து வாங்கிச் செல்வார்கள். ஆனால் இந்த மீனை அதன் எலும்புகள் மற்றும் தோலுக்காகவும் மக்கள் வாங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!