நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

வெறும் வயிற்றில் கட்டாயம் சாப்பிட வேண்டியவை, கண்டிப்பா immunity அதிகரிக்கும்.......

 காலையில் அவசரத்துக்கு மத்தியில் காலை உணவைச் சரியாகச் சாப்பிட முடியவில்லை என்றால், காலையில் வெறும் வயிற்றில் இவற்றைச் சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.


காலை உணவுக்கு உங்களுக்கு நேரம் இல்லையா? உழைக்கும் மக்களில் பெரும்பாலானோர் காலை உணவை சாப்பிடாமல் அலுவலகத்திற்கு ஓட வேண்டிய சூழல் ஏற்படுகிறது. உணவியல் நிபுணரின் கூற்றுப்படி, வலுவான நோய் எதிர்ப்பு சக்திக்கு காலையில் ஆரோக்கியமான உணவு எடுத்துக்கொள்வது முக்கியமானது. ஆனால் உங்களுக்கு காலை உணவுக்கு நேரமில்லை என்றால், இந்த சில உணவிகளை காலையில் வெறும் வயிற்றில் (Empty Stomach) சாப்பிடுவதன் மூலம், நாள் முழுவதும் உற்சாகமாக இருப்பதோடு, உங்களை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ளலாம்.


ஊறவைத்த பாதாம்:

பாதாமில் (Badam) மெக்னீசியம், வைட்டமின் ஈ, புரதம், நார்ச்சத்து, ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இருப்பினும், நீங்கள் பாதாமை தவறான வழியில் சாப்பிட்டால், அது தவறான விளைவையும் ஏற்படுத்தும். பாதாமை இரவில் தண்ணீரில் ஊறவைத்து காலையில் சாப்பிடுவதே சரியான வழி. அதன் தோலை நீக்கவும். இதை காலையில் சாப்பிட்டால், நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள்.


வெதுவெதுப்பான நீர் மற்றும் தேன்:

தேனில் தாதுக்கள், வைட்டமின்கள், ஃபிளாவனாய்டுகள் மற்றும் என்சைம்கள் நிறைந்துள்ளன. இது உங்கள் குடலை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவியாக இருக்கும். வெறும் வயிற்றில் தண்ணீருடன் தேன் கலந்து சாப்பிட்டால் நச்சுப் பொருட்கள் வெளியேறும். 


திராட்சை:

திராட்சையில் அதிக அளவு பொட்டாசியம், கால்சியம் மற்றும் இரும்புச்சத்து உள்ளது. பாதாம் பருப்பைப் போலவே, திராட்சையையும் ஒரே இரவில் தண்ணீரில் ஊற வைக்கவும். இது அதில் உள்ள ஊட்டச்சத்து அளவை அதிகரிக்கிறது. திராட்சையில் இயற்கையான இனிப்பு உள்ளது, இது நாள் முழுவதும் உங்களுக்கு ஆற்றலை அளிக்கிறது. அவை இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. 


பப்பாளி:

காலையில் வெறும் வயிற்றில் பப்பாளி பழத்தை சாப்பிடுவதால் உடலில் இருந்து நச்சுக்கள் வெளியேறி வயிறு நன்றாக இருக்கும். கொலஸ்ட்ரால் மற்றும் இதய நோய்களில் இருந்தும் பாதுகாக்கிறது. பப்பாளி சாப்பிட்ட 45 நிமிடங்களுக்குப் பிறகு காலை உணவை உட்கொள்ளுங்கள்.


தர்பூசணி:

தர்பூசணியில் அதிக நீர்ச்சத்து உள்ளது. எனவே, இதனை காலையில் சாப்பிட்டு வந்தால், நாள் முழுவதும் உடலில் நீர்ச்சத்து குறையாது, நீரேற்றத்துடன் இருப்போம். 



ALSO READ : உடல் எடை குறைய உணவில் பாசிப்பருப்பை கட்டாயம் சேர்க்கவும்..!!

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!