உலகின் முதல் SMS என்ன தெரியுமா? NFT-ஆக ஏலத்தில் விற்கும் Vodafone!
- Get link
- X
- Other Apps
தொலைத்தொடர்பு நிறுவனமான Vodafone உலகின் முதல் SMS-ஐ ஏலம் விடப் போகிறது. 1992-ஆம் ஆண்டு Vodafone நிறுவனத்தின் ஊழியர் ஒருவரால் மற்றொரு பணியாளருக்கு இந்த குறுஞ்செய்தி (SMS) அனுப்பப்பட்டது.
உலகின் முதல் குறுஞ்செய்தியில் 14 எழுத்துகள் இருந்தன, அதை நிறுவனம் இப்போது ஃபங்கிபிள் அல்லாத டோக்கனாக (NFT) மாற்றுகிறது.
Vodafone நிறுவனம் மைக்ரோ பிளாக்கிங் வலைத்தளமான ட்விட்டரில் அதன் அதிகாரப்பூர்வ பக்கத்தில், வோடபோன் நிறுவனத்தின் முதல் NFT இதுவாக இருக்கும் என்று கூறியுள்ளது.
இந்த NFT-யின் ஏலத்தில் கிடைக்கும் தொகையை அகதிகளுக்கு உதவுவதற்காக UNHCR-க்கு நன்கொடையாக அளிக்கவுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
உலகின் முதல் குறுஞ்செய்தி சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு டிசம்பர் 3, 1992-ல் அனுப்பப்பட்டது. இது நிறுவனத்தின் ஊழியரான ரிச்சர்ட் ஜார்விஸுக்கு அனுப்பப்பட்டது.
இந்த எஸ்எம்எஸ் 14 எழுத்துகளைக் கொண்டிருந்தது. ஜார்விஸ் அந்த எஸ்எம்எஸ் மூலம் பெற்ற வாசகம் 'Merry Christmas' என்பதாகும்.
இந்த எஸ்எம்எஸ் ஏலம் டிசம்பர் 21, 2021 அன்று பிரான்சில் நடைபெறும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஏலத்தை அகுட்டேஸ் ஏல நிறுவனம் (Aguttes Auction House) நடத்துகிறது.
- Get link
- X
- Other Apps

Comments
Post a Comment