Posts

Showing posts from March, 2022

நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

ஒரே வாரத்தில் கை கால்களில் உள்ள கருமை நீங்க வேண்டுமா? இதோ அசத்தலான டிப்ஸ்

Image
 பொதுவாக நம்மில் பலர் முகத்திற்கு மட்டுமன்றி, கை மற்றும் கால்களுக்கும் போதிய பராமரிப்பு கொடுப்பதில்லை. சொல்லப்போனால் முகத்தை விட, கை மற்றும் கால்களுக்கு சற்று அதிகமாகவே பராமரிப்பு அவசியம். ஏனெனில் வெயிலில் செல்லும் போது, சூரியக்கதிர்களின் தாக்கம், முகத்தை விட, கை மற்றும் கால்களில் தான் அதிகம் உள்ளது. இதனால் கை மற்றும் கால்கள் கருப்பாக இருக்கும். எனவே இவற்றை எளிய முறையில் கூட போக்க முடியும். தற்போது அவற்றை பார்ப்போம். ஒரு சுத்தமான பவுல் ஒன்றை எடுத்து கொள்ளுங்கள் அவற்றில் இரண்டு ஸ்பூன் எலுமிச்சை சாறு, இரண்டு ஸ்பூன் சர்க்கரை மற்றும் ஒரு ஸ்பூன் தேன் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.இந்த கலவையை கை கால் முட்டிகளில் நன்றாக அப்ளை செய்து மசாஜ் செய்ய வேண்டும். பின் 15 நிமிடங்கள் காத்திருந்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வர ஒரே வாரத்தில் கை கால்களில் உள்ள கருமை நீங்க ஆரம்பிக்கும். ஒரு சிறிய பவுலில் சிறிதளவு காய்ச்சாத பாலினை எடுத்து கொள்ளுங்கள். பின் அரை எலுமிச்சை பழத்தினை இந்த பாலில் தொட்டு எடுத்துக்கொள்ளுங்கள். பிறகு கை மற்றும் கால் முட்டிகளில் நன்றாக அப்ள

சூப்பரான முட்டை கொத்து பாஸ்தா

Image
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான முட்டை கொத்து பாஸ்தாவை செய்வது மிகவும் எளிது. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள்: பாஸ்தா - 1 கப் முட்டை - 3 பெரிய வெங்காயம் - 2 தக்காளி - 2 மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் கரம் மசாலா - 1/2 டீஸ்பூன் கொத்தமல்லி - சிறிது உப்பு - சுவைக்கேற்ப எண்ணெய் - 2 டீஸ்பூன் சீரகம் - 1/2 டீஸ்பூன் பூண்டு - 5 பல் செய்முறை: பெரிய வெங்காயம், பூண்டு, தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். பாஸ்தாவை மென்மையாக வேக வைத்து ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி நன்றாக கலந்து வைக்கவும். அப்போது தான் ஒன்றுடன் ஒன்று ஒட்டாது ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம், பூண்டு சேர்த்து தாளித்த பின்பு வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாக வதக்க வேண்டும். தக்காளி குழைய வதங்கியதும் மிளகாய் தூள், கரம் மசாலா சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்க வேண்டும். பிறகு அதில் முட்டைகளை உடைத்து ஊற்றி நன்கு கிளறி விட வேண்டும். முட்டை நன்றாக வெந்த

நடைப்பயிற்சியை சுவாரசியமாக்கும் 8 வழிகள்

Image
சம தளமான பாதையில் நடைப்பயிற்சி மேற்கொள்ளாமல் கரடு முரடான, மேடு, பள்ளமான வழியை தேர்வு செய்யலாம். அது நடைப்பயணத்தை சுவாரசியமானதாகவும், சவாலானதாகவும் மாற்றும். 1. எடை பயிற்சி: ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்ய முடியாதவர்கள் நடைப் பயிற்சி மேற்கொள்ளும்போது அதிக எடை கொண்ட பொருட் களையோ அல்லது ‘ டம்ப்பெல்ஸ் ’ எனப்படும் உடற்பயிற்சி கருவியையோ கைகளில் தூக்கியவாறு நடைப்பயிற்சி செய்யலாம். இது ஒரே நேரத்தில் கார்டியோ மற்றும் உடல் வலிமைக்கான பயிற்சியை செய்வதற்கு வழிவகுக்கும். நடைப்பயிற்சி செய்யும்போது அதிக ஆற்றலை உற்பத்தி செய்வதற்கும் வித்திடும். அமெரிக்க விளையாட்டு மற்றும் மருத்துவக்கல்லூரியின் ஆய்வின்படி, இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு இந்த வகை எடை பயிற்சி சிறந்தது. மேலும் வளர்சிதை மாற்றக் கோளாறு களின் அபாயத்தையும் 17 சதவீதம் குறைக்கும். அதிக கொழுப்பு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் பாதிப்புக்கு ஆளானவர்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வது சிறந்தது. 2 ஸ்கிப்பிங்: வெறுமனே நடந்தபடி பயிற்சி மேற்கொள்ளாமல் இடையிடையே வேறு சில எளிய பயிற்சிகளையும் மேற்கொள்ளலாம். தடை தாண்டும் போட்டிக்கான

முகப்பருவிற்கு நிரந்தர தீர்வு தரும் பேஸ் பேக்

Image
பெண்களுக்கு மிகவும் எரிச்சலூட்டும் ஒரு விஷயம் முகப்பருக்கள். இந்த முகப்பருக்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு தரும் இயற்கை வழிமுறைகளை அறிந்து கொள்ளலாம். மஞ்சள் மற்றும் தயிர் மஞ்சள், தயிர் இரண்டுமே மருத்துவ மற்றும் காயங்களை குணமாக்கும் தன்மைகள் உடையது. அவை பருக்களை விரட்டி தூய்மையான சருமத்தை அளிக்கும். இதை உபயோகிக்கும் முறை : இரண்டையும் குழைத்து பேஸ்ட் ஆக்கவும். முகத்தில் சமமாக பூசவும். 15-20 நிமிடங்கள் கழித்து, கழுவவும். சந்தனம் மற்றும் ரோஸ் வாட்டர் பேஸ்ட் சந்தனத்திற்கு வலியை குறைக்கும் தன்மையும் பரு மற்றும் மாசுவை நீக்கும் சக்தியும் உண்டு. அதை பின் வருமாறு உபயோகிக்கவும்: சந்தனப்பொடியுடன் ரோஸ் வாட்டருடன் கலந்து குழைக்கவும். உங்கள் நெற்றி மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவவும். ஒரு மணி நேரம் கழித்து கழுவவும். வேப்பிலை வேப்பிலை உங்களுக்கு தூய்மையான, அப்பழுக்கற்ற சருமத்தை அளிக்கக் கூடிய ஒரு மிகச் சிறந்த கிருமி நாசினி. அதை உபயோகிக்கும் முறை: சில வேப்பிலைகளை எடுத்து நன்கு கழுவவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீருடன் அந்த இலைகளைப் போட்டு, அடுப்பை லேசாக எரிய விட்டு சில நிமிடங்கள் கொதிக்

மகிழ்ச்சியாக வாழ்வதற்கு என்ன செய்யலாம்?

Image
  உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் தரவரிசை பட்டியலில் இந்தியா 136-வது இடம் பிடித்திருக்கிறது. மகிழ்ச்சியாக இருக்கும் மக்கள்தான் ஆரோக்கியமாகவும் வாழ்வார்கள் என்பதை மனநல நிபுணர்களும் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். சிலர் தாங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பதுபோல் வெளிக்காட்டிக்கொள்வார்கள். மகிழ்ச்சி என்பது உண்மையில் ஆழ் மனதில் இருந்து வெளிப்பட வேண்டும். மகிழ்ச்சியாக இருப்பதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள் பற்றிய பட்டியல் இது. 1. மகிழ்ச்சிக்கு முன்னுரிமை கொடுங்கள்: மகிழ்ச்சியாக இருப்பதற்கு முதல் படி, மகிழ்ச்சியான மன நிலையை தக்கவைத்துக்கொள்வதற்கு முன்னுரிமை கொடுப்பதாகும். உங்களின் தேவைகள் பற்றியும், எதை விரும்புகிறீர்கள் என்பதைப் பற்றியும் புரிந்துகொள்ளவும் இது உதவும். அவ்வாறு செய்வது மகிழ்ச்சிக்கு பங்களிக்கும் வழிமுறையாகவும் அமையும். உங்களுடன் சிறிது நேரம் செலவிடுங்கள். அதாவது தனிமையில் அமர்ந்து உங்களைப் பற்றி சிந்தியுங்கள். அதன் மூலம் உங்கள் உணர்வுகளை நன்றாக புரிந்துகொண்டு அதன்படி செயல்படலாம். உடல் ஆரோக்கியத்தை போல் மன ஆரோக்கியத்தையும் கவனிக்க வேண்டியது அவசியம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். 2. உங்க

கேரட் : கண்பார்வைக்கு மட்டுமல்ல, இதயத்துக்கும் நலம் தரும்...

Image
  கேரட் சாப்பிடுவது கண்களுக்கு நல்லது என்று பலரும் சொல்ல கேள்விப்பட்டிருப்போம். கண் பார்வையை மட்டும் கேரட் மேம்படுத்துவதில்லை. நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துதல், கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்துதல், நீரிழிவு மற்றும் புற்றுநோயைத் தடுத்தல் என பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. கேரட்டில் உள்ள பீட்டா கரோட்டின், வைட்டமின் ஏ-வை ரோடாப்சின் நிறமியாக மாற்ற உதவுகிறது. இது மாலை நேரம் அல்லது குறைந்த வெளிச்சம் உள்ள சூழலில் கண் பார்வையை மேம்படுத்தும் தன்மை கொண்டது. குறைந்த அடர்த்தி கொண்ட லிப்போ புரோட்டீன் கொழுப்பில் 25 சதவீதம் வரை குறைப்பதற்கு வைட்டமின் ஏ உதவும் என்று ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. இதனால் இதய ஆரோக்கியம் மேம்படும். மேலும் இது தீங்கு விளைவிக்கும் சூரிய ஒளியில் இருந்து சருமத்தை காக்கும். மேலும் முன்கூட்டியே சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படுவதையும் கட்டுப்படுத்தும். கரோட்டினாய்டுகள் புற்றுநோய் உயிரணுக்களின் வளர்ச்சியை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆன்டி ஆக்சிடென்டுகள், நீரிழிவு எதிர்ப்பு பண்புகள், கொழுப்பைக் குறைக்கும் திறன் மற்றும் நோய் எதிர்ப்பு மண்டல செயல்பாட்டை மேம்படுத்தும் த

உடல் முழுவதும் டாட்டூ குத்தி ஆச்சரியப்படுத்தும் நபர்.....

Image
  உடலில் டாட்டூ பதித்துக்கொள்வது பிரபலமான பேஷன் போக்காக மாறிவிட்டது. சிலர் தங்கள் மனதுக்கு பிடித்தமானவர்களின் பெயரை ரகசியமாக பச்சைக்குத்திக்கொள்வார்கள். சிலர் மற்றவர்களை கவருவதற்காக உடலின் வெளிப்பகுதியில் டாட்டூ போட்டுக்கொள்வார்கள். ஆனால் ஒன்று அல்லது இரண்டு இடங்களில்தான் போட்டு இருப்பார்கள். ஆனால் இங்கிலாந்தைச் சேர்ந்த ஒருவர் தனது உடல் முழுவதும் டாட்டூ குத்தி இருக்கிறார். அவரது உடல் பாகங்களில் சுமார் 90 சதவீதத்தை டாட்டூக்கள்தான் அபகரித்திருக்கிறது. 41 வயதாகும் அவரது பெயர் கரக் ஸ்மித். இங்கிலாந்தின் ஷெபீல்டு பகுதியை சேர்ந்தவர். இவருக்கு திருமணமாகி 4 குழந்தைகள் உள்ளனர். 18 வயதில் முதன் முதலாக பச்சை குத்தி இருக்கிறார். அது பிடித்து போகவே பச்சை குத்திக்கொள்வதை வழக்கமாக்கி விட்டார். ஒவ்வொரு முறையும் வித்தியாசமான வடிவங்களில் டாட்டூக்களை தன் உடலில் பதிப்பதற்கு விரும்பி இருக்கிறார். கன்னங்கள், மூக்கு உள்பட சில பகுதிகள்தான் டாட்டூவின் பிடியில் இருந்து தப்பித்திருக்கின்றன. ஸ்மித் உள்ளூர் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். உடல் முழுவதும் டாட்டூ குத்திக்கொண்டதால் 6-7 இடங்களில் வேலைவாய்ப்ப

பிரமிக்கவைக்கும் பிரான்ஸ்.....

Image
  உலக சுற்றுலா பயணங்களை விரும்புபவர்கள் பட்டியலில் நிச்சயம் பிரான்ஸ் நாடு இடம் பிடித்திருக்கும். அந்நாட்டின் தலைநகரான பாரீசில் பிரமாண்டமாக கட்டமைக்கப்பட்டிருக்கும் ஈபிள் டவர் மட்டும் அதற்கு காரணமில்லை. கலாசார ரீதியாகவும், பாரம் பரிய ரீதியாகவும் பல்வேறு அழகியல் அம்சங்களை தன்னத்தே கொண்டுள்ளது. அதனால்தான் உலகிலேயே அதிக பேர் சுற்றுலா செல்லும் முதல் நாடாக விளங்குகிறது. கொரோனா காரணமாக முடங்கி போயிருந்த சுற்றுலா துறை மெல்ல மெல்ல மீண்டு வந்துகொண்டிருக்கிறது. 2019-ம் ஆண்டில் மட்டும் சுமார் 90 மில்லியன் சர்வதேச சுற்றுலாப் பயணிகள் பிரான்சுக்கு விஜயம் செய்ததாக புள்ளி விவரம் குறிப்பிடுகிறது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டி.பி) சுற்றுலாவின் பங்களிப்பு 8 சதவீதமாக இருப்பதாக பிரான்சின் சுற்றுலாத் துறை குறிப்பிடுகிறது. உலகின் மிக அழகான நாடுகளில் ஒன்றாக வர்ணிக்கப்படும் பிரான்ஸை சுற்றி வர திட்டமிட்டால் அங்கு அவசியம் பார்க்க வேண்டிய 3 இடங்கள் உங்கள் பார்வைக்கு... மார்சேய்: பிரான்சின் இரண்டாவது பெரிய நகரமாக விளங்கும் மார்சேய், மிகப் பழமையான துறைமுக நகரமாகும். பிரமிப்பில் ஆழ்த்தும் அத்தனை அம்சங

மன அழுத்தம் உடல் உறுப்புகளையும் பாதிக்கும்.....

Image
  இன்றைய காலகட்டத்தில் ஜலதோஷத்தை போலவே மன அழுத்தமும் பொதுவான வியாதியாக மாறிக்கொண்டிருக்கிறது. அது மன நலம் சார்ந்த பிரச்சினையாக தெரிந்தாலும் உடலின் பல்வேறு பாகங்களையும் பாதிப்புக்கு ஆளாக்குகிறது. மனஅழுத்தம் காரணமாக எந்தெந்த உறுப்பு எத்தகைய பாதிப்புக்கு ஆளாகிறது என்று பார்ப்போம். நோய் எதிர்ப்பு மண்டலம்: மன அழுத்தத்தின்போது `கார்டிசோல்’ எனப்படும் ஹார்மோன் வெளியிடப்படும். இது நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு தீங்கு விளைவிக்கும். அதன் செயல்பாடுகளை முடக்கிப் போட்டுவிடும். அதன் காரணமாக வைரஸ் மற்றும் பிற வகையான நோய்த்தொற்றுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துவிடும். மன அழுத்தத்தில் இருக்கும்போது நோய்வாய்ப்படுவதற்கான காரணம் இதுதான். வயிறு:  மன அழுத்தம் நீடித்துக்கொண்டிருந்தால் வயிற்றில் உள்ள இரைப்பையில் அமிலத்தின் அளவு அதிகரிக்க தொடங்கி விடும். இதனால் இரைப்பை அழற்சிக்கு வழிவகுக்கும். வயிற்றில் புண்களும் உண்டாகக்கூடும். இதயம்:  மன அழுத்தம் ஏற்படும்போது, இதயத்துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் அதிகரிக்கும். இவை இரண்டின் செயல்பாடுகளில் மாற்றம் ஏற்படுவது இதய ஆரோக்கியத்திற்கு கேடாக முடியும். கொழுப்பு, ச

பெருஞ்சீரகம்-சீரகம்: வேறுபாடும்.. பயன்பாடும்..!

Image
  பெருஞ்சீரகம் (சோம்பு) மற்றும் சீரகம் இவை இரண்டுக்கும் இடையிலான வித்தியாசத்தை பற்றி எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? இவை இரண்டுமே மசாலா பொருட்கள்தான் என்றாலும் சில தனித்துவமான அம்சங்கள் அவற்றின் அடையாளத்தை வேறுபட வைக்கின்றன. பெருஞ்சீரகம் என்பது கேரட் குடும்பத்தை சேர்ந்த நறுமண தாவரமாகும். இது இனிமையான நறு மணத்தை கொண்டது. இதன் இலைகள், தண்டுகள், வேர்கள், விதைகள் என அனைத்து பாகங்களையும் பயன்படுத்தலாம். சீரகம் என்பது ஏபிஏசிஸ் குடும்பத்தை சேர்ந்த பூக்கும் தாவரமாகும். இது மசாலா பொருட்களில் அதிகம் பயன்படுத்தப் படுகிறது பெருஞ்சீரகம் விதைகளுக்கும், சீரக விதைகளுக்கும் இடையே என்ன வித்தியாசம்? பெருஞ்சீரக விதைகள் இனிமையான அதிமதுரம் சுவையை கொண்டிருக்கும். சீரக விதைகள் ஒருவித நறுமண வாசனையை கொண்டிருக்கும். பெருஞ்சீரகத்துடன் ஒப்பிடும்போது சற்று கசப்பு தன்மை கொண்டிருக்கும். மேலும் பெருஞ்சீரகம் விதைகள் பச்சை நிறத்தில் காணப்படும். சீரகம் பழுப்பு நிறத்தில் காட்சி அளிக்கும். சிலருக்கு இரண்டும் ஒரே மாதிரியான தோற்றம் கொண்டிருப்பது போல் தெரியும். சீரகத்தை விட பெருஞ்சீரகம் முதிர்ச்சி அடைவதற்கு முன்பே அறுவடை செ

சன்ஸ்கிரீன் கிரீம் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை.....

Image
  சூரிய ஒளி பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கக்கூடியது. அதில் இருந்து கிடைக்கும் வைட்டமின் டி எலும்பு ஆரோக்கியத்திற்கு அவசியமானது. மேலும் சூரிய ஒளி நல்ல தூக்கத்திற்கு வழிவகுக்கும். மன ஆரோக்கியத்திற்கும் வித்திடும். இருப்பினும், அதிகப்படியான சூரிய ஒளி சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும். தோல் விரைவில் வயதான தோற்றத்தை அடைந்து விடும். சரும புற்றுநோயையும் எதிர்கொள்ள வைத்துவிடும். கோடை காலத்தில்தான் சூரிய கதிர்வீச்சுகள் உமிழும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாகும் என்பதால் தகுந்த முன்னெச் சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது முக்கியமானது. சன்ஸ்கிரீன் கிரீம்கள் பயன்படுத்துவதுதான் சிறந்த வழிமுறையாக அமையும். சந்தையில் பல வகையான சன்ஸ்கிரீன்கள் புழக்கத்தில் இருக்கின்றன. அவற்றுள் சருமத்திற்கு பொருத்தமானதை தேர்ந்தெடுப்பதற்கு சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். சரும சுருக்கம், மந்தமான தன்மையை போக்குவதோடு தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்களில் இருந்து சருமத்தை பாதுகாப்பதில் சன்ஸ்கிரீனுக்கு முக்கிய பங்கு உண்டு. சன்ஸ்கிரீன் சருமத்தின் வெளிப்புறத்தில் மட்டுமல்ல, உட்புறத்திலும் பாதுகாப்பு கவசமாக செயல்படும். மடிக்கணினிக

எடை டபுள் மடங்கா குறையனுமா... தினமும் இத குடிச்சாலே போதுமாம்! ஒரே வாரத்தில் அதிசயம் நடக்கும்

Image
 தண்ணீர் குடித்தாலே உடல் எடை தானாக குறையும் என்பது பலருக்கு தெரியாத உண்மை. தண்ணீர் குறைவாக இருப்பது உடல் எடையில் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. தண்ணீர் போதிய அளவு இல்லை என்றால் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் சீர்குலையும். ஒரு வயது வந்தவர் ஒரு நாளைக்கு 2-4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். கொழுப்பை எரிக்கும் தண்ணீர்  போதுமான தண்ணீர் குடிப்பது கொழுப்பை எரிக்க உதவுகிறது மற்றும் எடை இழப்புக்கு அவசியமான பசியை அடக்குகிறது. எடை இழப்பு தவிர, தண்ணீர் மனித ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை வழங்குகிறது. அவரவர் வயதிற்கேற்ப 6 முதல் 8 லிட்டர் தண்ணீர் குடிப்பது பொதுவாக ஆரோக்கியமானது.   உடல்நல பிரச்சனைகள் தைராய்டு நோய் அல்லது சிறுநீரகம், கல்லீரல் அல்லது இதயப் பிரச்சனைகள் போன்ற சில உடல்நலப் பிரச்சினைகள் இருந்தால், நீங்கள் அதிகப்படியான தண்ணீரை எடுத்துக்கொள்ளலாம். ஸ்டெராய்டல் அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகள் (யன்எஸ்ஏஐடி கள்), ஓபியேட் வலி மருந்துகள் மற்றும் சில மனச்சோர்வு மருந்துகள் போன்றவை தண்ணீரைத் தக்கவைக்கும் மருந்துகள் என்று ஹார்வர்ட் ஹெல்த் அறிக்கை கூறுகிறது. எனவே தேநீர் மற்றும் பால் போன்றவற்றுக்கு பதிலாக

சூடான மொறு மொறு சீஸ் பூரி செய்வது எப்படி தெரியுமா?

Image
  கோதுமை மாவு மற்றும் சீஸ் இருக்கிறதா? அப்படியானால் அதைக் கொண்டு ஒரு அற்புதமான சீஸ் பூரி செய்து ருசியுங்கள். உங்களுக்கு சீஸ் பூரி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சீஸ் பூரி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள் கோதுமை மாவு - 1 கப் ரவை - 2 டேபிள் ஸ்பூன் உப்பு - சுவைக்கேற்ப எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் தண்ணீர் - தேவையான அளவு எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு உள்ளே வைப்பதற்கு... சீஸ் - 1 கப் (துருவியது) வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது) செய்முறை ஒரு பௌலில் கோதுமை மாவு, ரவை, உப்பு, 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, சிறிது நீர் ஊற்றி நன்கு மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும். பின் அந்த மாவை ஈரத் துணியால் மூடி 30 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு உள்ளே வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்கள் ஒரு பௌலில் போட்டு நன்கு கலந்து கொள்ள வேண்டும். பிறகு சிறிது மாவை எடுத்து உருட்டி, அதை சப்பாத்தி போன்று தேய்த்து, அதன் நடுவே சிறிது சீஸ் கலவையை வைத்து மூட வேண்டும். பின் அதை மீண்டும் தட்டையாக பூரி அளவிற்கு தேய்த்து ஒரு தட்டில்

110 நாள்கள் ஓடி கின்னஸ் சாதனை படைத்த இந்திய வீராங்கனை Sufiya Khan.......

Image
 தங்க நாற்கரச் சாலையில் 6,002 கிலோமீட்டர் தூரத்தை 110 நாட்களில் ஓடிக் கடந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார் சுஃபியா கான். ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரை சேர்ந்தவர் சுஃபியா கான். டெல்லி விமான நிலையத்தில் உதவியாளராகப் பணியாற்றி வந்த அவர், தடகள விளையாட்டின் மீதிருந்த ஆர்வத்தால் அந்த வேலையை உதறிவிட்டு ஓடத் தொடங்கினார். 35 வயதான கான், பல்வேறு மாரத்தான் போட்டிகளில் பங்கேற்கிறார். பெரும்பாலான போட்டிகளில் வாகை சூடியிருக்கிறார். லே-மணாலி நெடுஞ்சாலையின் 480 கிலோமீட்டர் தூரத்தை 6 நாட்கள், 12 மணி நேரம், 6 நிமிடங்களில் ஓடி கடந்திருக்கிறார். கடந்த 2019ஆம் ஆண்டில் காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை 87 நாட்களாக இடைவிடாமல் ஓடி கன்னியாகுமரி வந்து சேர்ந்ததற்காக கின்னஸ் சாதனை படைத்திருந்தார். இப்போது மற்றொரு கின்னஸ் சாதனையையும் படைத்திருக்கிறார் சுஃபியா கான். டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை ஆகிய நான்கு முக்கியப் பெருநகரங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையான தங்க நாற்கரச் சாலையில் 6,002 கிலோமீட்டர் தூரத்தை 110 நாட்கள், 23 மணி நேரம், 24 நிமிடங்களில் ஓடிக் கடந்து புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளார் அவர். 16 டிசம்பர் 202

இந்த இரண்டு உணவுகளை சேர்த்து சாப்பிடுங்க! இடுப்பு தொடை பகுதியில் உள்ள கொழுப்பு தானாக கரையுமாம்

Image
 பொதுவாக இன்று உடல் உழைப்பு குறைவாலும், நீண்ட நேரம் உட்கார்ந்தே வேலை பார்ப்பதால் இளம் வயதிலேயே உடல் பருமனாகி, இடுப்பு, தொடைப் பகுதியிலும் கொழுப்பு சேர்ந்துவிடுகிறது. கட்டுக்கோப்பான உடலைப் பெற ஜிம்முக்கு செல்கிறார்கள். உண்மையில் எடையைக் குறைப்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை உணவின் வழியாக எடுத்துக் கொள்வதும் மிக முக்கியம். குறிப்பாக, நார்ச்சத்துக்கள் மற்றும் புரதச்சத்துக்கள் அதிகம் கொண்ட சில உணவுகளைத் தனியாக எடுத்துக் கொள்வதை விட சேர்த்து எடுத்துக் கொள்வதினால் உடலில் கெட்ட கொழுப்புகள் கரைக்கப்படுவதோடு, இடுப்பு, தொடை போன்ற பகுதிகளில் தேங்கும் தேவையற்ற சதையைக் குறைக்க முடியும். அந்த உணவுகள் என்னென்ன என்பதை பற்றி இங்கே பார்ப்போம்.  ஓட்ஸ் வால்நட் இரண்டையும் சேர்த்து சாப்பிடும்போது உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் சமன் செய்யப்படுவதோடு கெட்ட கொழுப்பைக் கரைத்து உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.  வாழைப்பழத்தை பீநட் பட்டருடன் சேர்த்து சாப்பிடும்போது அது உங்கள் உணவின் சுவையை அதிகரிக்கச் செய்வதோடு, உடலுக்குத் தேவையான புரதச் சத்தையும் அது கொடுக

கோடை வெயிலுக்கு உடலுக்கு குளிர்ச்சி தரும் மசாலா மோர்! எப்படி தயாரிப்பது?

Image
  பொதுவாக மற்ற காலங்களை விட வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால், அனைத்து காலங்களிலும் மோர் குடிக்க வேண்டிய நிலையில் ஏற்பட்டுள்ளது. அந்தவகையில் உடலுக்கு குளிர்சியை தரும் மசாலா மோர் எப்படி செய்யலாம் என்பதை இங்கே பார்ப்போம்.    தேவையான பொருட்கள் கெட்டித் தயிர் - 1 கப் தண்ணீர் - 1 கப் கொத்தமல்லி - 2 டீஸ்பூன் மோர் மிளகாய் - 1 உப்பு - தேவையான அளவு எண்ணெய் - 1 டீஸ்பூன் கடுகு - 1/4 டீஸ்பூன்  பச்சை மிளகாய் - 1/2 கறிவேப்பிலை - 3 இலை இஞ்சி - 1/4 இன்ச் செய்முறை முதலில் தயிரை ஒரு பௌலில் போட்டு, அதனை நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து கலந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு மிக்ஸியில் பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் இஞ்சி சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். அதே எண்ணெயில் மோர் மிளகாயை வறுத்துக் கொள்ள வேண்டும். அடுத்து அரைத்து வைத்துள்ளதை மோரில் சேர்த்து, அத்துடன் மோர் மிளகாயை உடைத்து போட்டு, தாளித்ததையும் ஊற்றி, கொத்தமல்லியைத் தூவி தேவையான அளவு

10 நிமிடத்தில் செய்யலாம் பிரெட் பீட்சா

Image
குழந்தைகளுக்கு பீட்சா என்றால் மிகவும் பிடிக்கும். பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு 10 நிமிடத்தில் இந்த ரெசிபியை செய்து கொடுத்து அசத்தலாம். தேவையான பொருட்கள் பிரெட் - 2 3 நிற குடைமிளகாய் - தேவையான அளவு வெங்காயம் - தேவையான அளவு சீஸ் (mozzarella cheese) - விருப்பத்திற்கேற்ப பீட்சா சாஸ் - 2 டீஸ்பூன் ( கடைகளில் கிடைக்கும்) உப்பு - சுவைக்கு பட்டர் - 2 டீஸ்பூன் ஆர்கனோ (oregano) - கால் டீஸ்பூன் சில்லி ஃப்ளேக்ஸ் - கால் டீஸ்பூன் மிளகு தூள் - விருப்பத்திற்கு செய்முறை குடைமிளகாய், வெங்காயத்தை சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். சீஸை (mozzarella cheese) துருவிக்கொள்ளவும். ஒரு பிரெட்டை எடுத்து அதன் மேல் பட்டரை தடவி மறுபக்கத்தில் பீட்சா சாஸை தடவவும். பின்னர் அதன் மேல் துருவிய சீஸை (mozzarella cheese) தூவி விடவும். அதன் மேல் குடைமிளகாய், வெங்காயத்தை அடுக்கவும். பின் அதன் மேல் உப்பு, ஆர்கனோ (oregano), சில்லி ஃப்ளேக்ஸ், மிளகு தூள் தூவவும். தோசை தவா சூடானதும் அதன் மேல் பிரேட்டை வைத்து மூடி வைத்து 5 நிமிடங்கள் மிதமான தீயில் வேக வைக்கவும். இப்போது சீஸ் நன்றாக உருகி பிரெட் முழுவதும் பரவி

மெதுவாக சாப்பிடுவதால் உடல் எடை குறையுமா?

Image
உணவின் சுவைக்கு முக்கியத்துவம் கொடுக்கும்போது இயற்கை மற்றும் ஆரோக்கியமான உணவுகளே அதிகமாக உணவு விருப்பப் பட்டியலில் இடம்பெறும். மெதுவாக சாப்பிடுவதால் உடல் எடை குறையும் என்ற கருத்து பலரிடம் உள்ளது. ‘ஸ்லோ ஈட்டிங்’ என்பது நாம் சாப்பிடும் உணவின் அளவை குறைக்கும். இதனால் இயல்பாகவே உடல் எடையைக் கட்டுக்குள் வைக்கலாம். ‘லெப்டின் மற்றும் க்ரெலின்’ எனும் இரண்டு ஹார்மோன்களும் பசிக்குத் தொடர்புடையவை ஆகும். இதில் ‘லெப்டின்’ உடலுக்குத் தேவையான கலோரியின் அளவு மற்றும் பசியைக்  கட்டுப்படுத்தும். உடல் எடை இழப்புக்கு உதவும். ‘க்ரெலின்’ பசியைத் தூண்டும்; உடல் எடையை அதிகரிக்க உதவும்.   மெதுவாக, உணவை நீண்ட நேரம் சாப்பிடும்போது, குடலில் சுரக்கும் ஹார்மோன்களுக்கு, ‘உடலுக்குத் தேவையான அளவு உணவு கிடைத்துவிட்டது’ என்று மூளையில் இருந்து சமிக்ஞைகளை அனுப்பும். சுமார் 20 நிமிடத்துக்கு மேல் சாப்பிடும்போது, வயிறு நிறைந்த திருப்தி உண்டாகும். மேலும், மெதுவாக உணவு சாப்பிடும்போது உணவில் உள்ள சுவையையும், வாசனையையும் நம்மால் நன்றாக உணர முடியும். அதேநேரம், சுவையின் இன்பத்தை ரசிக்கும் போது சாப்பிடும் நேரம் இரட்டிப்ப

எதிர்காலத்தை நிர்ணயிக்க பிள்ளைகளுக்கு எப்படி உதவலாம்....

Image
சிறு வயதில் ஏற்படும் லட்சியக் கனவை அடைவதற்கான வழிகளை, பிள்ளைகளால் தானாகவே தீர்மானிக்க முடியாது. யாராவது ஒருவரது வழிகாட்டுதல் கட்டாயம் தேவை. படிப்பு முடிந்தவுடன் எந்தப் பாதையைத் தேர்ந்தெடுப்பது என பிள்ளைகள் குழம்பிக்கொண்டிருக்கும் நேரத்தில் பெற்றோர், அவர்களுக்குத் தகுந்த ஆலோசனை வழங்கி சரியான பாதையில் வழிகாட்ட வேண்டும். அதற்கான சில யோசனைகள் இங்கே: ஆசையைக் கேட்டு மதியுங்கள்: எல்லோருக்கும் எதிர்காலக் கனவு இருக்கும். அதில், வேலை சார்ந்த கனவுக்குக் கட்டாயம் இடம் உண்டு. அதை எப்படி அடைவது என்பது தெரியாமல்தான், பலரும் தடுமாறுகின்றனர். எனவே, உங்கள் எண்ணங்களை பிள்ளைகளின் மீது திணிக்காமல், பிள்ளைகளின் தொழில் சார்ந்த கனவு எது என்பதை முதலில் கேளுங்கள். அதை வேடிக்கையாக நினைக்காமல், உரிய மதிப்பளியுங்கள். பள்ளிப் பருவத்திலேயே லட்சியத்தை அடைவதில் உள்ள நிறை, குறைகளைச் சுட்டிக் காட்டுங்கள். சிக்கலாக இருக்கும் பட்சத்தில், தடம்மாற்றி சரியான பாதைக்குக் கொண்டு செல்லுங்கள். ஆனால், எந்த இடத்திலும், தன்னம்பிக்கையை இழக்கும் வகையில் பிள்ளைகளிடம் பேசக்கூடாது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். வாய்ப்பை ஏற்படு

வாட்ஸ்-அப்பில் இனி பயனர்கள் 2ஜிபி வரை ஃபைல்களை அனுப்பலாம்! விரைவில் அறிமுகம்?

Image
 இன்று உலக அளவில் மக்கள் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ள உதவி வருகிறது சமூக வலைதள செயலியான வாட்ஸ்-அப்.  மெட்டா நிறுவனத்தின் இந்த செயலியில் டெக்ஸ்ட், வாய்ஸ், வீடியோ, ஆடியோ உரையாடல்களை பயனர்கள் மேற்கொள்ளலாம். சமயங்களில் போட்டோ, டாக்குமெண்ட்ஸ் மாதிரியானவையும் ஃபைல்களும் இதில் அனுப்பிக் கொள்வதுண்டு.  இருந்தாலும் அந்த ஃபைல் ஒரு குறிப்பிட்ட அளவுக்குள் (Size) இருந்தால் மட்டுமே அனுப்ப முடியும். அதன் காரணமாக வேறு சில அப்ளிகேஷன்களை பயன்படுத்தி பயனர்கள் அதிக அளவு கொண்ட ஃபைல்களை அனுப்பவுதுண்டு. இந்நிலையில் இதற்கு தீர்வு காணும் வகையில் 2ஜிபி வரை அளவுள்ள ஃபைல்களை பயனர்கள் அனுப்பும் வசதியை வாட்ஸ்-அப்பில் கூடிய விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  தற்போது அதற்கான சோதனை வெள்ளோட்டம் நடைபெற்று வருகிறதாம். இருந்தாலும் முதற்கட்டமாக இந்த வசதியை ஆப்பிள் ஐபோன்களை பயன்படுத்தும் பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என தெரிகிறது. அதற்கு பிறகே ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட பயனர்களுக்கு இந்த வசதி அறிமுகமாகும் அதனை பயன்படுத்த முடியும். இருந்தாலும் அது குறித்த அறிவுப்பு உறுதியாக அறிவிக்கப்படவில்லை. ALSO REA

Bed AC: பில் பற்றிய கவலையே இல்லை; 3 பல்புகளுக்கான மின்சார செலவு மட்டுமே..!

Image
  படுக்கைப் பகுதியை மட்டும் குளிர்ச்சியாக வைத்திருக்கும் ஏசி ஒன்றை Tupik நிறுவனம் வடிவமைத்துள்ளது. இது மட்டுமின்றி மற்ற குளிரூட்டிகளுடன் ஒப்பிடும் போது இந்த ஏசி மின்சார உபயோகத்தை 60 முதல் 65 சதவீதம் வரை குறைக்கும். அதை பற்றி தெரிந்து கொள்வோம்... Tupik Private Limited என்ற நிறுவனம் தனித்துவமான ஏசியை வடிவமைத்துள்ளது. இந்த ஏர் கண்டிஷனர் படுக்கை பகுதியை மட்டும் குளிர்ச்சியாக வைத்திருக்கும். மின்சாரம் 60 முதல் 65 சதவீதம் வரை குறையும். கோடை காலம் வந்துவிட்டது. வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ  ஏசி இல்லாமல் இருக்க முடியாத நிலை தான் உள்ளது. ஆனால் இதில் மிகப்பெரிய பிரச்சனை மின் கட்டணம். ஏசி தொடர்ந்து இயங்குவதால் மின்கட்டணமும் மிக அதிகமாக வருகிறது.  இந்த பிரச்சனைக்கான தீர்வை இன்று நாங்கள் உங்களிடம் கொண்டு வந்துள்ளோம். படுக்கைப் பகுதியை மட்டும் குளிர்ச்சியாக வைத்திருக்கும் ஏசி பற்றித்தான் சொல்லப் போகிறோம். இது மட்டுமின்றி மற்ற குளிரூட்டிகளுடன் ஒப்பிடும் போது இந்த ஏசி மின் உபயோகத்தை 60 முதல் 65 சதவீதம் வரை குறைக்கும். அதை பற்றி தெரிந்து கொள்வோம்... டெண்ட் ஏசி உங்களை குளிர்ச்சியாக வைத்திருக்கும் Tupik

இந்த பிரச்சனைகளுக்கு தேங்காய் நீர் தான் தீர்வு...

Image
  நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும் தேங்காய் நீரில் இருக்கும் பல நன்மைகளை தெரிந்து கொள்ளுங்கள். இளநீர் குடிப்பதால் உடலுக்கு கிடைப்பதால் கிடைக்கும் நன்மைகள் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழப்பு முழுமையாக தடுக்கப்படும் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள் கோடைக்காலம் தொடங்கியுள்ளது. எனவே மக்கள் தங்கள் உடலை நீரேற்றமாக வைத்திருப்பதில் கவனம் செலுத்துகிறார்கள். கோடைக்காலத்தில் உடலில் நீர்ச்சத்து குறைவதே இதற்குக் காரணம். இது பல நோய்களுக்கு வழிவகுக்கும். ஆனால் அத்தகைய பிரச்சனைகளில் இருந்து நீங்கள் தப்பிக்க வேண்டும் என்றால் தேங்காய் தண்ணீர் சிறந்த ஒன்று. தினமும் காலையில் தேங்காய் நீரில் அன்றைய தினத்தைத் தொடங்கினால், அது நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கவும், நீரிழப்பைத் தடுக்கவும் உதவும். இது தவிர தேங்காய் பல நன்மைகளையும் கொண்டுள்ளது. வெகு சிலருக்கே தெரியும். தேங்காயின் மற்ற நன்மைகள் என்ன? நாம் கண்டுபிடிக்கலாம். 1. உடல் எடையை குறைக்க உதவும் தினமும் காலையில் உடற்பயிற்சி செய்த பிறகு தேங்காய் தண்ணீர் குடிப்பது உடலுக்கு நன்மை பயக்கும். ஏனெனில் இந்த தண்ணீரை குடிப்பதால் வயிறு நிறைந்தி

ரகசியம்! பெண்கள் இந்த விஷயத்தை ஒருபோதும் பகிர்ந்துகொள்ளமாட்டார்கள்........

Image
  காதலிக்கும் பார்டனரிடம் கூட சில விஷயங்களை பெண்கள் ஒருபோதும் பகிர்ந்து கொள்ளமாட்டார்க ள். ரகசியம் காக்கும் பெண்கள் இந்த விஷயங்களை பகிர்ந்து கொள்ளமாட்டார்கள் தெரிந்து கொள்ள என்ன வழி? காதல் ரகசியம் என்றாலும், காதலர்களுக்கு இடையில் எந்த ரகசியமும் இருக்கக்கூடாது என்பதை தான் காதலிப்பவர்கள் விரும்புவது.  காதல் என்றாலே இந்த விஷயம் இருக்க வேண்டும் என விரும்புபவர்கள் ஏராளம். குறிப்பாக, ஆண்களைக் காட்டிலும் பெண்கள் தங்கள் பார்ட்னரின் அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள். அவர்களின் விருப்பப்படி தங்களின் முந்தைய வாழ்க்கையை பகிர்ந்து கொண்டு பிரச்சனையில் சிக்கிக் கொள்பவர்களும் உண்டு. இந்த விஷயத்ததில் பொதுவாக ஆண்களைக் காட்டிலும் பெண்கள் உஷாராக இருப்பதாக கூறப்படுகிறது. ஒரு சில விஷயங்களை எக்காரணத்தைக் கொண்டும் அவர்கள் பகிர்ந்து கொள்ள விரும்புவதில்லை. எந்த மாதிரியான விஷயங்களை அவர்கள் பொதுவாக மறைக்கிறார்கள் என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.  ஒருவர் மீதான க்ரஷ் காதலிக்க விரும்பியவர் அல்லது விரும்பிய ஒருவரைப் பற்றி பெண்கள் தங்கள் பார்ட்னரிடம் சொல்ல விரும்புவதில்லை. காதலனுக்கு அல்லது பார்ட்ன

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!