நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

கோடை காலத்தில் முகப்பொலிவை பாதுகாக்கணுமா? மிக எளிய வழி இதோ

கோடை காலத்தில், முகத்தின் அழகை கவனிப்பது கடினமாகிவிடும். ஐஸ்கியூப் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்கு உதவுகிறது. 


  • துளசி-புதினா கொண்டு ஐஸ் க்யூப்ஸ் செய்யவும்.
  • முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கும்.
  • IceCube ஐ எவ்வாறு பயன்படுத்துவது?

இந்தியாவில் கோடையின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் சருமத்தை மிகவும் கவனமாக கவனித்துக்கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. 

கோடை-யில் வியர்வையால் சருமத்தில் அதிக எரிச்சல் ஏற்படும். இதன் காரணமாக தோலில் புள்ளிகள் மற்றும் பருக்கள் ஏற்படுகின்றன. மேலும், சட்டென்று பாதிக்கப்படும் (சென்சிடிவ்) சருமம் உள்ளவர்கள் கோடையில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். 

கோடையில் தோல் சிவத்தல், சொறி சிரங்கு போன்ற பிரச்சனைகள் பொதுவானவை. இந்த அனைத்து பிரச்சனைகளையும் தவிர்க்க, மக்கள் பெரும்பாலும் சந்தையில் வாங்கும் பல விலையுயர்ந்த பொருட்களை பயன்படுத்துகின்றனர். இருப்பினும் இவற்றால் பலன் இருப்பதில்லை. மாறாக, தோல் இன்னும் மோசமடைகிறது. 

இத்தகைய சூழ்நிலையில், கோடைகாலத்தில் சருமத்தில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளையும் தவிர்க்க இயற்கையான வழிகள் இருந்தால், அது ஒரு வரப்பிரசாதமாக அமையும். அப்படிப்பட்ட, சரும பாதுகாப்பிற்கான சில எளிய வழிகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம். 

துளசி-புதினா கொண்டு ஐஸ் க்யூப் செய்யவும்

ஐஸ் கட்டிகளை சருமத்தில் தடவுவது கோடையில் மிகவும் நல்லது. இந்த வழியில் நீங்கள் தோலில் உருளைக்கிழங்கு ஐஸ் க்யூப் கொண்டு மசாஜ் செய்வது அதிக நன்மைகளை அளிக்கும். இது தவிர புதினா மற்றும் துளசியின் ஐஸ் கட்டிகளும் மிகவும் நன்மை பயக்கும். உங்களுக்கு ஆய்லி, அதாவது எண்ணெய் பசையான சருமம் இருந்தால், உருளைக்கிழங்கு ஐஸ் கட்டிகளை சருமத்தில் தடவாதீர்கள்.

ஐஸ்கியூப் செய்ய தேவையான பொருட்கள்?

துளசி இலைகள்
புதினா இலைகள்
பன்னீர்
தண்ணீர்

ஐஸ்கியூப் தயாரிப்பது எப்படி?

ஒரு கப் தண்ணீரை எடுத்து அதில் 6-7 துளசி மற்றும் 6-7 புதினா இலைகளை ஊற வைக்கவும். சிறிது நேரம் கழித்து அவற்றை நன்கு கழுவி இலைகளை நன்றாக நசுக்கிக்கொள்ளவும். நீங்கள் விரும்பினால், அவற்றை ஒரு பேஸ்டாகவும் செய்துகொள்ளலாம். இப்போது அரைத்த இலைகளை 1 கப் தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும். குறைந்த பட்சம் 1 கொதி வரும் வரை அதை கேஸில் வைக்கவும், அதன் பிறகு இறக்கி விடவும். இந்த நீர் ஆறியதும் அதில் ரோஸ் வாட்டர் சேர்க்கவும். அதன் பின்னர் அவற்றை ஒரு ஐஸ் தட்டில் வைத்து உறைய வைக்கவும்.

ஐஸ் கட்டியை எவ்வாறு பயன்படுத்துவது

தினமும் ஒரு ஐஸ் கட்டியை எடுத்து முகத்தில் வட்ட வடிவில் முகத்தில் மசாஜ் செய்யவும். உங்கள் சருமம் சென்சிடிவான, அதாவது, எளிதில் பாதிக்கப்படக்கூடிய சருமமாக இருந்து, ஐஸ் கட்டிகளை நேரடியாக முகத்தில் தடவ முடியாது என்றால், அதை ஒரு காட்டன் நாப்கினில் சுற்றி பின் மசாஜ் செய்யவும்.

இப்படி செய்வதால், முகம் புத்துணர்ச்சி பெறும், முகத்தில் உள்ள தூசு, மாசு ஆகியவை அகலும். முகத்தில் உள்ள துவாரங்கள் திறக்கும். இது ஒரு ஆரோக்கியமான, இயற்கையான முக மசாஜாக இருக்கும். 




Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!