நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

குளத்தில் விழப்போன சிறுவனை காப்பாற்றிய நாய்! நெகிழ வைக்கும் வீடியோ காட்சிகள்

 குளத்தில் தவறி விழப்போன சிறுவனை அவர்களது செல்ல நாய் ஒன்று காப்பாற்றும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.


குறித்த சம்பவம் எப்போது எங்கு நிகழ்ந்தது என்ற தகவல்கள் தெரியவராத போதும், நாயின் அறிவுக்கூர்மையை பார்த்து வியந்து போகிறார்கள் நெட்டிசன்கள்.

அந்த வீடியோவில், இருவர் விளையாடிக் கொண்டிருக்கும் போது எதிர்பாராதவிதமாக பந்து அருகில் இருந்த குளத்தில் விழுகிறது.

உடனடியாக குறித்த சிறுவன் பந்தை எடுக்க முயற்சி செய்கிறான், இதைப்பார்த்துக் கொண்டிருந்த நாய் அருகில் சென்று சிறுவனின் சட்டையை பிடித்து இழுத்து பத்திரமாக இருக்கும்படி கூறுகிறது.


தொடர்ந்து அருகிலிருக்கும் குச்சியை கொண்டு பந்தை எடுத்துக் கொடுக்கிறது, இப்படியான பதற்றமான சூழலில் ஒருநிமிடம் மனிதர்களே பதறிப்போகும் சூழலில் நாய் மிகவும் சாதுர்யமாக செயல்பட்டதை பலரும் பாராட்டி வருகின்றனர்.



ALSO READ : மெய்சிலிர்க்க வைத்த விஞ்ஞானம்....காற்றில் பறக்கும் காகித ஸ்பைடர்மேன்!

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!