நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

70 வகை சத்து, ஏகப்பட்ட பிரச்னைக்கு தீர்வு… தேன் இப்படி சாப்பிடுங்க!

70 வகையான வைட்டமின் சத்துக்களை உள்ளடக்கியுள்ள தேன் மருத்துவத்துறையில் முக்கிய பங்காற்றுகிறது.
இயற்கை நமக்கு தந்த முக்கிய வரப்பிரசாதம் தேன். இது இனிப்பு சுவைக்காக மட்டுமல்லாமல், உடலில் ஏற்படும் பல்வேறு நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. இதனால் தான் பழங்காலத்தில் இருந்தே தேன் முக்கியத்துவம் வாய்ந்த மருத்துவ பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் இந்த தேன், குழந்தைகளுக்கு ஏற்படும் பல்வேறு நோய்களுக்கு தீர்வாக அமைகிறது.

70 வகையான வைட்டமின் சத்துக்களை உள்ளடக்கியுள்ள தேன் மருத்துவத்துறையில் முக்கிய பங்காற்றுகிறது. தேனில் இருக்கும் மருத்துவ குணங்கள் நமது உடலில் ஜீரணப்பாதையில் உறிஞ்சப்பட்டு உடனடியாக ரத்த ஓட்டத்தி் கலந்து செயல்பட தொடங்குகிறது.

தேன் தரும் நன்மைகள் 

குழந்தைகள் தினமும் தேன் சாப்பிடும்போது அவர்களுக்கு கால்சியம், மெக்னீசியம் அதிகரிக்கிறது. மேலும் உணவை விரைவில் செரிக்கவைத்து மலச்சிக்கல் வராமல் தடுக்கிறது.

வெங்காய் சாறுடன் தேனை கலந்து சாப்பிட்டால் கண்பார்வை பிரகாசமடையும். தோல் நோய்களுக்கும் தேனை பயன்படுத்தலாம்.

சூடான் வெந்நீரில் எலுமிச்சை சாறு கலந்து அதனுடன் தேனை கலந்து குடித்தால் குமட்டல் வாந்தி ஜலதோஷம் தலைவலி உள்ளிட்ட நோய்கள் தீரும்.  தேனில் உள்ள குளுக்கோஸ் சத்து ரத்த நாளங்களை சீராக விரிவடைய உதவுகிறது. ரத்த ஓட்டத்தை சீராக்கும். இதயம் தொடர்பான பிரச்சினைகளை தீர்க்கும்.

தேன் முட்டை பால் கலந்து சாப்பிட்டால், ஆஸ்துமா வராமல்’ தடுக்கலாம். மூட்டு வலி உள்ள இடத்தில் தேனை தேய்ததால் குணமாகும். தினமும் தேனை உட்கொண்டால், மூட்டு வலிக்காது தேயாது.

தேனுடன் இஞ்சி பேரீச்சம் பழத்தை  ஊறவைத்து சாப்பிட்டடால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்..தூக்கம் ஏற்படுவதற்கு தேன் அருமையான மருந்து ஆகும். தேனையும் மாதுளம் பழ ரசத்தையும் சம அளவு சேர்த்துத் தினமும் சாப்பிட்டால் இருதய நோய்கள் தீரும்.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!